வீடு கட்ட, அரசுக்கடன் பெற அரசுப் பணியாளர் துறை அனுமதி கோரும் விண்ணப்பம்
Thanks to Mr. Sambasivam.
தமிழகத்தில், வேளாண்மைப் படிப்புகளில் சேர விண்ணப்பங்களை அனுப்ப சனிக்கிழமை (ஜூன் 13) கடைசி நாளாகும்.
'அரசு பெண் ஊழியருக்கு, முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது
பிரசவத்திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம்
தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல்
கட்டக் கலந்தாய்வில் 2,257 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும், 551 சுயநிதி
அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வரும்
19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரியில் நடைபெற்று வந்த,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கலந்தாய்வு, இந்த ஆண்டு முதல், ஓமந்துாரார்
அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. முதற்கட்ட
கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது ஒரே கட்-ஆஃப்
மதிப்பெண், பிளஸ் 2 தேர்வில் உயிரியல் - வேதியியல் பாடங்களிலும் ஒரே
மதிப்பெண், நான்காவது பாடமாகக் கருதப்படும் கணிதத்திலும் ஒரே மதிப்பெண்,
ஒரே பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்ட மாணவர்களை வரிசைப்படுத்த சம வாய்ப்பு
எண் பயன்படுத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்
எஸ்.கீதாலட்சுமி கூறினார்.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வின் அறிவியல் செய்முறைத் தேர்வு ஜுன்
18,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள்
இயக்ககம் வெளியிட்ட செய்தி:
தாராபுரம் அருகே தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு கல்வி
போதிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தங்களது சொந்த
செலவில் செய்து வருகின்றனர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மொத்தம் 412
இயங்கி வருகின்றன. இவற்றில் 15000 இடங்கள் உள்ளன. இவற்றில் 2300 இடங்கள்
அரசு ஆசிரியர் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் இந்த ஆண்டுக்கான
மாணவர் சேர்க்கை நடத்த மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
இயக்ககம்(எஸ்இஆர்டி) முடிவு செய்துள்ளது. சேர்க்கை விண்ணப்பங்கள் மே மாதம்
14ம் தேதி வினியோகிக்கப்பட்டன.
காஞ்சிபுரம் நகராட்சிப் பள்ளியில் புதன்கிழமை காலையில் ஒரு கட்டடத்தின்
மாடியிலிருந்து மற்றொரு கட்டடத்தின் மாடிக்குத் தாவியபோது, தவறிக் கீழே
விழுந்த மாணவர் பலத்த காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர
சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
காஞ்சிபுரம் இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர்
வி.கே. சண்முகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர்
பால்பாண்டி. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முத்துமோகன் (15). இவர்
ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்தார். வகுப்பறையில் இருந்த முத்துமோகனுக்கு
திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, பார்வையற்ற ஏழு மாணவியரை, பிளஸ் 1 வகுப்பில்
சேர்க்க, அரசு உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு
மேல்நிலைப் பள்ளி உள்ளது. இருபாலர் பயிலும் இப்பள்ளியில், 10ம் வகுப்பில்
தேர்ச்சி பெற்ற, பார்வையற்ற ஏழு மாணவியரை, பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க
மறுத்துவிட்டனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செயல்படும்
நாட்டு நலப்பணி திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்பாடுகளுக்கு இரண்டு ஆண்டுகளாக
நிதி ஒதுக்கீடு இல்லாததால் பெற்றோர் ஆசிரியர் கழகம் (பி.டி.ஏ.,) நிதி
மற்றும் திட்ட அலுவலர் கையில் இருந்து பணம் செலவிடுவதாக சர்ச்சை
எழுந்துள்ளது.
நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி
படிக்கக்கூடிய வகையில் தெளிவாகவும், பெரிய எழுத்துகளாலும் எழுதுவது
கட்டாயமாகிறது.இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர்
கூறியதாவது:நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி
தங்களது இஷ்டம் போல் கிறுக்க முடியாது.
ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கப்பட்டு வருகிறது.
பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்
பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 81 மாணவர்கள் படிக்கின்றனர்.
அகஇ - ஜூன் 12 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடித்தல் - "உறுதிமொழி" வெளியிட்டு இணைஇயக்குனர் செயல்முறைகள்
ஆண்டுதோறும் மே மாதம் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில்,
ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றியமைக் கப்பட்டுள்ளது. மேலும்,
ரத்து செய்யும் டிக்கெட்களுக்கு 50 சதவீத தொகையை திரும்பி அளிக்கவும்
முடிவு செய்யப் பட்டுள்ளது.முன்கூட்டியே திட்டமிடாத நிலையில் திடீரென பயணம்
மேற்கொள்பவர்களுக்கு கைகொடுப்பது தட்கல் டிக்கெட் முறைதான். இதனால்,
தட்கலில் டிக்கெட் வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும்
மெசேஜ்களை பரப்பும் வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருகிறது.இது
தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை தங்களது நண்பர்கள் மற்றும்
உறவினர்களிடம் சமூக வலைதளபயன்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக வலைதள பயன்பாட்டாளர்கள் கூறுகையில்
,
தொடக்கக் கல்வி -
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்
ஒவ்வொரு மாதமும் 5 பள்ளிகள் ஆண்டாய்வு மேற்கொள்ளவும், 12 பள்ளிகள்
பார்வையிடவும் இயக்குனர் உத்தரவு
மேற்படிப்புக்கான கல்விக் கடன் வழங்குவதில்,
வங்கிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிப்படிப்பை
முடிக்கும் ஏழை, எளிய மாணவர்களின், மேற்படிப்பு கனவு, கல்விக் கடன்
வாயிலாக, நிறைவேறி வருகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண், கலை மற்றும்
அறிவியல் உட்பட துறை சார்ந்த படிப்புகளுக்கு ஏதுவாக, கல்விக் கடன்
வழங்கப்படுகிறது. கடந்த, 2013 டிச., 31 நிலவரப்படி, நாடு முழுவதும் 25
லட்சத்து 70 ஆயிரத்து 254 பேரிடம் 57 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கல்விக்
கடன் நிலுவையில் இருந்தது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.
படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட
கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.
சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் சேர இந்த மாதம் 30ம் தேதி
தான் கடைசி நாள். தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேர் இந்த திட்டத்தில்
இணையவில்லை. பெரம்பலுார் திருச்சி தர்மபுரி விருதுநகர் சேலம் ஆகிய ஐந்து
மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் இணைந்துள்ளனர்.
மேகி நூடுல்ஸ் சர்ச்சை தொடங்குவதற்கு முன்பாகவே, ஏப்ரல் மாதம் வரை சுமார்
500 உணவுப்பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு
அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.
மருத்துவ விடுப்பில் சென்ற ஆசிரியையை உடனடியாகப் பணியில் சேர அனுமதிக்க
வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டேஷ்
அகாடமி... ஒரு பிரபலமாகக் கருதப்படுபவர் நடத்தும் பள்ளி. பல வருடங்களுக்கு
முன்பு, என் மகனுக்காக அந்தப் பள்ளியில் விசாரிக்கச் சென்றபோது, மிகவும்
சிறிய எழுத்தில், "இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை" என்று
போடப்பட்டிருந்தது, அங்கீகாரம் எப்போது கிடைக்கும் என்ற என் கேள்விக்கு
"விரைவில்" என்று பதில் வந்தது. பிள்ளையின் படிப்பு விஷயத்தில் இதுபோன்ற
பகீரத முயற்சிகளில் ஈடுபடும், அதுவும் அங்கீகாரமே இல்லாமல் செயல்படும்
பள்ளியில் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
தொலைபேசி வழியாக மருத் துவ ஆலோசனை பெறும்
'104' தொலைபேசி எண்ணை கண் தானத்திற்கும் அழைக்கலாம்; அழைத்த சிறிது
நேரத்தில் கண் தானம் பெற டாக்டர்கள் குழு வீடு தேடி வரும்.தமிழகத்தில்
பொதுமக்கள் தாமாக முன்வந்து அரசு கண் மருத்துவமனைகளிலும் கண் தான
வங்கிகளும் படிவங்களை பதிவு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் அதுபற்றி யாரிடம்
தெரிவிப்பது என தெரியாமல் கண் தானம் பற்றி மறந்து விடுகின்றனர்.
பள்ளியில் திறந்த வெளி கிணறுகள் ஆபத்தான
வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில்
பிளஸ்-2 மாணவர்களின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மதிப்பெண்கள் தேர்வுத்
துறை இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாம்
வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க தனித்தேர்வர்கள்,
அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் தங்கள் பெயரை பதிவு
செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும், 2015-16ம்
கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளில் செய்முறை பயிற்சியில் பங்கேற்காத
மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. நேற்று முதல் பெயர் பதிவுப்பணிகள்
துவங்கப்பட்டுள்ளது.