Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா-விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்

      விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி 18-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதையும் வரலாறு: அழிவின் விளிம்பில் அரிய பாடப்பிரிவுகள்: அவலத்தில் பி.ஏ., தமிழ் இலக்கியம்

          வேலைவாய்ப்பு, சம்பளம்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதால், தனியார் கல்லுாரிகளில் வரலாறு, தமிழ் இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அரியபாடப்பிரிவுகள் அழிவின் விளிம்பில் உள்ளன.

இன்ஜி., கல்லூரி திறன் பட்டியல் வெளியாவதில் சிக்கல்: ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இல்லாததால் அண்ணா பல்கலை மவுனம்

          அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி கிடைக்காததால், தமிழக பொறியியல் கல்லூரிகளின் செயல்பாட்டுத் திறன் பட்டியலை, இந்த ஆண்டு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சிற்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கை

          மாமல்லபுரத்தில் உள்ள, அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இக்கல்லூரியில், தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக்கலை (பி.டெக்.,); கவின்கலை இளையர் மரபு சிற்பக்கலை பட்டம் (பி.எப்.ஏ.,); கற்சிற்பம், சுதை சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம் ஆகிய தனித்தனி சிற்ப பிரிவுகள்; கவின்கலை இளையர் மரபு  ஓவியம் மற்றும் வண்ணம் (பி.எப்.ஏ.,), ஆகிய பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
 

கர்நாடகாவில் கல்வித்துறை பதவி உயர்வுக்கு கம்ப்யூட்டர் கல்வி முக்கியம்

       பெங்களூரு: 'கம்ப்யூட்டர் கல்வி தொடர்பான தேர்வில் வெற்றி பெறாத, அரசு பட்டப்படிப்பு கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் அல்ல' என, பட்டப்படிப்பு கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

புதுவைக்கு தனி மேல்நிலை கல்வி வாரியம் அமைக்க வேண்டும்: முன்னாள் எம்.பி. ராமதாஸ் கோரிக்கை

முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
      சமீபத்தில் வெளிவந்துள்ள பிளஸ்–2 பொதுத் தேர்வு முடிவுகள் புதுவையில் தேர்ச்சி சதவீதம் சென்ற ஆண்டைவிட குறைந்திருப்பதை காட்டுகிறது. 

குரூப்-2 தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாமா? - விளக்கம்

            துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழி லாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை பல்கலையில் இலவச 'நெட்' பயிற்சி

          சென்னை பல்கலையில், எஸ்.சி., - எஸ்.டி., ஓ.பி.சி., மாணவர்களுக்கு, 'நெட்' தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பேராசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

          விதிகளை மீறி, பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர் பட்டியலை கணினி மூலம் சரிபார்த்து, 'ரெய்டு' நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப வினியோகம் துவக்கம்: ஜூன் 19ல் முதற்கட்ட கலந்தாய்வு?

            தமிழகம் முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. ''ஜூன், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது,'' என, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

919 பக்க தீர்ப்பின் விபவரம்: கடனை வருவாயாகக் கணக்கிடாமல்சிறப்பு நீதிமன்றம் தவறிழைத்தது

      ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி இன்று காலை வழங்கினார். அவர் அளித்த 919 பக்க தீர்ப்பின் விபவரம்:
1. குற்றம் சாட்டபட்டவரின் சொத்துக்களுடன், நிறுவங்களின் மதிப்பு, கட்டுமான செலவும் அரசு தரப்பால் சேர்க்கப்பட்டுள்ளன.

3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார்.

ஜெயலலிதா விடுதலை; மேல்முறையீடு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

              சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து  கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.  தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதி குமாரசாமி இன்று காலை 10 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வந்தடைந்தார்.

"கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகளை தடை செய்!"

இது குடும்ப உறவுகளுக்கு குட்பை சொல்வதோடு, பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை எகிற வைக்கும்...

தேர்ச்சி விழுக்காடும், அரசுப் பள்ளி எதிர்காலமும்!!

            தமிழ்நாடு ,புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 7 அன்று வெளியிடப்பட்டன. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோம். தேர்ச்சி பெறாதவர்கள் சோர்ந்து போகாமல் அடுத்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துவோம். தேர்வு முடிவுகளோடு அரசுப் பள்ளிகள் பின் தங்கின என்றும் தனியார் பள்ளிகள் முந்தின என்றும் சில நாளேடுகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது உண்மைதான் என்றாலும் அரசுப் பள்ளிகளை அலட்சியப்படுத்தி தனியார் பள்ளிகளை உயர்த்தும் தொனி இதில் இருப்பது தான் சங்கடம்.

'வேலை கிடைக்காது என்ற விரக்தியில் பதிவை புதுப்பிக்காத 57 லட்சம் பேர்!'

          அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால், வேலை கிடைக்காது என்ற விரக்தியில் 57 லட்சம் பேர் பதிவை புதுப்பிக்காமல் விட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அரசு பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களைஇடமாற்றம் செய்ய கல்வித்துறையினர் முடிவு

          பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், சாதாரண, ஏழை, நடுத்தரக் குடும்ப மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் படித்தால், நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' : கல்வித்துறை முடிவு - Dinamalar

          'ஆசிரியர்களின் கவனக்குறைவு மற்றும் சரியாகப் பாடம் நடத்தாததே, பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைய காரணம்' என, கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், 'ஓபி' அடிப்பதைத் தடுக்க, 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவை கட்டாயமாக்க, கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.


கணினி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

      பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கணினி ஆசிரியர்கள் சார்பில், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 

பணிமாறுதல் இல்லைஆசிரியர் பயிற்றுனர்கள் கவலை

          விரைவில் 885 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிக்கு பணிமாறுதல் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்,” என அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் வாசுதேவன், பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மகளிரணி செயலாளர் அபிராமி, மாவட்ட தலைவர் சுதாகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் காசிபாண்டியன் துவக்கி வைத்தார்.

'இரண்டு ஆண்டு பி.எட்., படிப்பை அமலாக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து'

           'இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தாத நிறுவனங்களின் அனுமதி தானாக ரத்தாகும்' என, தேசிய ஆசிரியர் கல்வி யியல் பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.,) எச்சரித்து உள்ளது. தமிழக அரசு, இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காததால், கல்வி நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளன. 

சிறந்த கல்வியாளராக தேர்வாகி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

அமெரிக்காவில் நடந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், பிரபல'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள், இணையதளம் மூலம் கற்பிப்பதில் புதுமை புகுத்திய ஆசிரியர்களின் படைப்புகளை அமெரிக்காவை சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் 'மைக்ரோசாப்ட்' ஆய்வு செய்தது.

பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க செய்ய வேண்டியது என்ன? பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

         பள்ளி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

1,145 மதிப்பெண் எடுத்து கல்லூரியில் சேர வழியில்லாத கூலி தொழிலாளி மகன்

       திருச்சி மாவட்ட அளவில், அரச பள்ளிகிளல் பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பெற்ற கூலி தொழிலாளியின் மகன், வறுமையால் கல்லுாரியில் சேர வழியில்லாமல் தவிக்கிறார். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பச்சப்பெருமாள்பட்டி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மோகன். இவர், பிளஸ் 2 தேர்வதில், 1,145 மதிப்பெண் எடுத்துள்ளார். அரசு பள்ளிகளில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். தற்போது, சென்னையில் ஒரு ஓட்டலில் பணி செய்கிறார்.

விண்டோஸ் 10 க்கு அடுத்து எதுவும் வெளிவராது: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு- காரணம் என்ன?

          மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது.

எளிமையான வருமான வரி படிவம்இம்மாத இறுதியில் அறிமுகம்

          எளிமையான வருமான வரி கணக்கு தாக்கல் படிவம், இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என, தெரிகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம், 2015 - 16ம் வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தை, கடந்த மாதம் வெளியிட்டது. 

அண்ணாமலைப் பல்கலை.யில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

         சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும்

          தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம், இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் கிடைக்கும்.தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
 

48 மணி நேரத்தில் 'பான்' எண் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை

          'பான்' எண் அட்டைகளை, 48 மணி நேரத்தில் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வருமானவரித் துறையால் வழங்கப்படும், 'பெர்மனென்ட் அக்கவுன்ட் நம்பர்' என்பதன் சுருக்கம் தான், பான். வருமான வரி செலுத்துபவர்களும், வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வரவு - செலவு மேற்கொள்பவர்களும், பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஆலோசனை மையம் : கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு

           'மாணவர்களுக்கு, தனி ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்' என, அனைத்து மத்திய பல்கலைக் கழகங்கள், கல்லுாரிகளுக்கு, பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டு உள்ளது. அதன் விவரம்: அனைத்து உயர்கல்வி மையங்களிலும், மாணவர்களுக்கான ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும். 

Lab Asst Exam 2015 Free Online Test For 6th Science

பாஸ் ஃபெயில் என்ற முறை வேண்டாமே

        அச்சம் என்பது மடமையடா என்பதற்கேற்ப குழந்தைகளை பயம் அறியாமலும், பயம் இல்லாமலும் வளர்க்க வேண்டும். ஆனால் அவர்களை பயமுறுத்தும்படி அமைவதுதான் தேர்வு. காரணம் பாஸ், ஃபெயில் என்ற முறைதான் அந்த பயத்தை ஏற்படுத்துகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive