புதுக்கோட்டை அருகே
உள்ள அந்தோணியார்புரம் வேளாங்கண்ணி தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி, கூலி
தொழிலாளி. இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களுக்கு 3 மகன், 2 மகள். கடைசி
மகள் அன்னப்பழம்(12), அங்குள்ள நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து
வந்தாள்.
அரசுப்பள்ளி மாணவ,
மாணவியரின் நலன் மீது, ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையை அளவிடும் ஆயுதமாக,
ஞாயிறு சிறப்பு வகுப்பு அறிவிப்பு மாறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஏராளமான அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.
மத்திய அரசு
அறிவித்தபடி சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானிய திட்டம்
நடைமுறைக்கு வந்துவிட்டது. முதற்கட்டமாக ஆந்திரம், கேரளம், அசாம், பஞ்சாப்,
புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 54 மாவட்டங்களில் நடைமுறைக்கு
வந்துள்ளது.
திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ள தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை
உள்ளதால், பல்வேறு அலுவல் காரணமாக அந்த அலுவலகத்துக்குச் செல்லும்
ஆசிரியர்களும், பொதுமக்களும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
திருவள்ளூர்
மாவட்டத்தில் 2014-15-ஆம் ஆண்டுக்கான கணினி பட்டதாரி ஆசிரியர் பரிந்துரை
பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என கணினிப் பட்டதாரிகள்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனர்.
தமிழகத்தில் 10
ஆண்டுகளில் புதிய ஓய்வு திட்டத்தில் பணிக்கு சேர்ந்த 2000 பேர் ஓய்வு
பெற்றும், இறந்த 1000 பேர் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் உட்பட எந்த
பயனும் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
2015-ம் ஆண்டு
மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத விரும்பும் நேரடித்
தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர்களை
பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே 2 முறை அனுமதி வழங்கப்பட்டது.
அரசு செவிலியர் பயிற்சி ஆசிரியர் சங்கத்துக்கான தனி இணையதளம் மதுரையில் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை
அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணையதளத்தை சென்னை
ஸ்டான்லி செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் பானுமதி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்
மாவட்டத்தில், மூன்று ஒன்றியங்களுக்கு உட்பட்ட நான்கு கிராமங்களில்,
புதிதாக நான்கு தொடக்கப் பள்ளிகள், இன்று திறக்கப்படுகின்றன. இந்த
பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கோவாவில் உள்ள தேசிய
தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2014-15ல் ஆராய்ச்சியில் பொருளாதாரம்,
ஆங்கிலம், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இக்பை பிசினஸ் ஸ்கூல் ஆப்டிடியூட் டெஸ்ட் 2014 (IBSAT 2014) நுழைவுத்தேர்வு டிச.,10 முதல் டிச.,31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. எம்பிஏ
மற்றும் முதுகலை டிப்ளமோ பட்டப் படிப்பில் சேர இக்பை பவுன்டேஷன் பார்
ஹையர் எஜூகேஷன் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வை நடத்தி
வருகின்றது.
புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக புதன்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டரும், ஸ்மார்ட்போனும், வீடியோ
கேமும் குழந்தைகளின் சிந்தனை திறனை முடக்கிப் போடுகின்ற நிலைதான் இன்று பல
வீடுகளிலும் உள்ளது. இவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகின்ற நிலையும் உள்ளது.
இவற்றில் இருந்து அவர்களை மீளச்செய்து, குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி
எனப்படும் சிந்தனை திறனை வளர்க்கவும் பல வழிகள் உள்ளன. அது அவர்களை
வெற்றிப்படிகளில் அழைத்து செல்லும்.
எஸ்.எஸ்.எல்.ஸி.,
பொதுத்தேர்வு, 15 நாட்களுக்கு முன்னதாக துவங்குவதால், போதிய வகுப்பு
கிடைக்காததாலும் மற்றும் திருப்புத் தேர்வு எழுத முடியாததாலும், மாணவர்கள்
கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பள்ளிகள் மூலம் ஜாதி,
இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் கேட்டு விண்ணப்பித்த
மாணவர்களுக்கு, சான்றிதழ்களை, விரைந்து வழங்க வேண்டும் என, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு. வேலூர் மாவட்டத்தில் 6 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 1 மேல் நிலைப் பள்ளியிலிருந்து மகளிர் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் 2014-2015 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB மூலம் தேர்வு செய்து
நியமிக்கும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக ரூ 4000 தொகுப்பூதிய
அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த கணினி
பயிற்றுநர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை
பிறப்பித்துள்ளது.
புதிய
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும்,
மேலும் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு . இராமேஸ்வர முருகன்
அவர்களை மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம்
செய்து தமிழக அரசு உத்தரவு வெளியிடப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அக
இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும்
செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில்
06.01.2015 முதல் 08.01.2015 வரை நடைபெறவுள்ளது
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட
செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற
ஏற்கனவே 2 முறை அனுமதி வழங்கப்பட்டது.
கணினி ஆசிரியர் நியமனத்திற்கான பரிந்துரை பட்டியலில், குளறுபடி உள்ளதை, 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்த
செய்தியை, மேற்கோள் காட்டி, புதிய பட்டியலை அனுப்ப, வேலைவாய்ப்பு
இயக்குனரகம் குறிப்பாணை அனுப்பியுள்ளது.
அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் 1093 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அதற்காக சான்றிதழ் சரிபார்த்தல் நடத்தப்பட்டது. பின்னர் கூடுதல் தெளிவுரை முகாம் நடத்தப்பட்டது.