Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று குரூப்- 2 தேர்வு:6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

     தமிழகத்தில் குரூப்- 2 முதல் நிலைத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதில் 6 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

பணத்தை ரீபண்ட்’ பெற விரும்பினால் ‛ஆன்-லைன்’மூலமே வருமான வரி தாக்கல்

          வருமான வரம்பு ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், வருமான வரி பிடித்தம் செய்ததை திரும்ப பெற விரும்புபவர்களும் ஆன்-லைன்மூலம் மட்டுமே வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும் என வருமான
வரித்துறை அறிவித்துள்ளது.

50 ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறி

       பங்களிப்பு ஓய்வூதியமான -- சி.பி.எஸ்., திட்டத்தில், கணக்கு எண் குளறுபடியால், 50 ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறியாகி உள்ளது. 

மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு-

        இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து, மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்கவும், பின்தங்கிய பள்ளிகளில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்துள்ள, பல ஆயிரம் கோடி நிதியை மூலதனமாக்கி, சிறந்த  கல்வியை வழங்கி, எஸ்.எஸ்.எல்.ஸி.,மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு பள்ளியில் லட்சக்கணக்கில் வசூல் பட்டியலுடன் பெற்றோர் - ஆசிரியர் கழகம் புகார்

        அரசு பள்ளிகளில், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு என்ற பெயரில், ரசீதே இல்லாமல், லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடந்துள்ளது. இதை எதிர்த்து மாணவ, மாணவியர் பட்டியலுடன், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

அரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவு

         அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கும் பராமரிப்பு நிதியில், முழு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் பள்ளி மானிய, பராமரிப்பு நிதி வழங்குகிறது. 
 

அதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி:உச்சகட்ட குழப்பத்தில் தடுமாறும் கல்வித்துறை

        பல துறைகளின் அதிகார பிரச்னையால், பி.எட்., மாணவர் சேர்க்கை குறித்த முடிவுகள் எடுப்பதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு எப்போது துவங்கும் என்பதை கூட, கல்லுாரிக் கல்வி இயக்ககம் இன்னும் முடிவு செய்யவில்லை.

பணிநிரவல்ஆசிரியர்கள் எதிர்ப்பு

        முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
 

சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்து விட்டது:தனியார் பள்ளி சங்கத்தினர் புகார்

        சென்னை பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநாடு, நேற்று நடந்தது. இதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

ஓவியம், தையல் பாடம் ஆய்வு செய்ய சிறப்பு குழு

          அரசு பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி படிப்புகளுக்கான, பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, பள்ளிக்கல்வித் துறையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி படிப்புகளுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, பாடம் நடத்துவது குறித்து, சில ஆண்டுகளாக, எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை.
 

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

         அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சலின் கீழ் காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் Central Electrochemical Research Institute) ஒரு வருட மற்றும் இரண்டு வருட அப்ரண்டீஸ் பயிற்சிக்குி தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய அரசுத்துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

      மத்திய பொதுப்பணித்துறை (Central Public Works Department), அஞ்சல் துறை, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ பொறியியல் பணி (Military Engineering Service) , மத்திய நீர் ஆணையம் (Central Water Commission)ஆகிய துறைகளில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு 06.12.2015 அன்று நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group2 Free Online Tests

Free Online Tests 

Previous Year Questions Free Online Tests: Group 2 - 2013

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 பதவிக்களுக்கான போட்டித் தேர்வு வரும் 26 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆக.,1ல் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு?

      ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு கலந்தாய்வு நிபந்தனை தொடர்பாக ஆசிரியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் !

CEO Transfer list.
  • KANCHEEPURAM SSA CEO Seethalakshmi to CEO tiruvellore, 
  • R.Boopathy TRB DD to CEO vellore, 
  • Anitha CEO Chennai ADDL charge Trb DD, 
  • Kasthuri Bai SSA CEO Vellore to CEO Nagapattinam, 
  • Arul mozhi devi SSA CEO Cuddalore to DD DPI

ஆசிரியர்களுக்கு கடிவாளம் அவசியம் தீர்வு என்ன?

       ஒழுங்கீனமாக நடந்து கொண்டஇரு தலைமை ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மீதுகல்வித்துறை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கநடவடிக்கையை கடுமையாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.விடலை பருவம் எனப்படும்பதின் வயதுகளில் மாணவமாணவியர்தெரிந்தோதெரியாமலோ தவறு செய்வது இயல்புபுகை பிடித்தல்மது அருந்துதல்காதல் வயப்படுவது இப்பருவ வயதின் வெளிப்பாடு. சமீபத்தில்கோவையில் பள்ளி மாணவி ஒருவர்மதுபோதையில்ரோட்டில் கலாட்டா செய்துபரபரப்பை ஏற்படுத்தினார்.

மாணவர்கள் மோதல் தடுக்க கவுன்சிலிங்

   பள்ளி மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுவதை தடுக்க மாணவர்கள்ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் கவுன்சிலிங்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் மாற்றம்: பள்ளி கல்வி இயக்குனர் பேட்டி

        "இந்தாண்டு பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட உள்ளது" என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.மதுரையில் மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
 

TNPSC தேர்வு விவரம் இணையதளத்தில் வெளியீடு

                 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 

பிளஸ் 2 மாணவர்களின் ரேஷன், ஆதார் எண் சேகரிப்பு

       நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் விவரங்களை சேகரிக்க, அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, 'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கள், தங்கள் பள்ளி பிளஸ் 2 மாணவர்களின் விவரங்கள் அடங்கிய உறுதிமொழி படிவத்தை, உடனடியாக தயாரிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

ஓய்வூதிய திட்ட கணக்கில் குளறுபடி: பல ஆயிரம் கோடி ரூபாய் 'அம்போ!'

     பங்களிப்பு ஓய்வூதியமான -- சி.பி.எஸ்., திட்டத்தில், கணக்கு எண் குளறுபடியால், 50 ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறியாகி உள்ளது. பலருக்கு, ஓய்வூதியமே கைக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆடிப் பெருக்கு தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

           ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மாணவர்களுக்கு சைக்கிள்தாமதமின்றி வழங்க உத்தரவு

          அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்களை, தாமதமின்றி வழங்கும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
 

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்

CLICK HERE TO DOWNLOAD.....

                     பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வை எழுதிய மாணவர்கள் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

SABL,SALM முறையை செயல்படுத்த ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இதை முழுமையாக பின்பற்றாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

பள்ளிகளில் செயல்முறை, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தொடக்கக் கல்வித்துறைஎச்சரித்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 4 ம் வகுப்பு வரை செயல்வழி கல்விமுறை செயல்படுத்தப்பட்டது. இதில், அட்டைகள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு பதில் பெற்றோர் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி

        'மருத்துவ படிப்புக்கான, தேசிய மறு நுழைவுத்தேர்வு இன்று நடப்ப தால், மாநில கலந்தாய்வில், மாணவர்களுக்கு பதில், பெற்றோர் பங்கேற்கலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
 

பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்தது கெப்ளர் விண் தொலைநோக்கி

பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்தது கெப்ளர் விண் தொலைநோக்கி
  மிகப் பெரிய விண் தொலைநோக்கியான கெப்ளர் பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்ததுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்: விடைத்தாளை மீண்டும் திருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவரது விடைத்தாளை மீண்டும் திருத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

சித்தா, ஆயுர்வேத படிப்பு: விண்ணப்பம் பெற இன்றே கடைசி

          தமிழகத்தில், இந்திய மருத்துவ படிப்புகளுக்காக, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 336 இடங்கள்; 21 சுய நிதி கல்லுாரிகளில், 1,143 இடங்களும் உள்ளன. மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், ஜூன், 29ம் தேதி முதல் நடந்து வருகிறது.விண்ணப்பம் பெற இன்று, கடைசி நாள். இதுவரை, 4,400க்கும் மேலான விண்ணப்பங்கள் வினியோகிக்கப் பட்டுள்ளன; 3,800 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சமர்பிக்க, வரும், 31ம் தேதி வரை அவகாசம் உள்ளது.

+2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி! இயக்குநர் பேச்சு

      தொடர்ந்து கற்கும் ஆசிரியரால் மட்டுமே, பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களை சிறப்பாக கற்பிக்க முடியும்,''என, தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், திருச்சியில் பேசினார்.திருச்சி, பாரதிதாசன் சாலையில்உள்ள கேம்பியன் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் நடந்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive