வாழ்க்கை அனைத்து நேரங்களிலும்
ஒரே மாதிரி
இருப்பது இல்லை.
அதன் நிலைப்பாடு
மேகத்தினை போல,
ஏன் மாறவில்லை
என்றும் கேட்க
இயலாது, மாறிய
பிறகு ஏன்
மாறினாய் என்றும்
கேட்க இயலாது.
வெயில் அடித்தாலும்,
மழை அடித்தாலும்
பாதுகாப்பிற்கு நீங்கள் தான் குடையை வைத்திருக்க
வேண்டுமே தவிர,
வாழ்க்கையை நொந்துக் கொள்வதில் எந்த பயனும்
இல்லை.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு பணிநிரவலில் மாறுதல் வழங்க ஒப்பளிப்பு
09.07.2015 அன்று தமிழ்நாடு பகுதிநேர
ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் சேர்மன் திரு.சோலை M ராஜா
அவர்கள் தலைமையில்
பள்ளிக் கல்வித்துறை
அமைச்சரை மாநில
நிர்வாகிகள் சந்தித்தனர்.
ஆர்.டி.ஐ பதில்களை இணையத்தில் வெளியிட மத்திய அரசு உத்தரவு
தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை
இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய அரசுத் துறைகளுக்கு
பணியாளர் நலத்துறை
உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் கடிதம் பல்வேறு பாடங்களில் கூடுதலாக இளங்கலைப் பட்டங்கள் பெற்றாலும் பி.எட் படிப்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் போதுமானது
ஓ.மு.எண் 100723/சி2/இ1/2012 நாள்-09/01/2013 ன் படி ஒருவர் ஏற்கனவே பெற்ற
பி.எட் படிப்பானது தற்போது இளங்கலையில் வேறுபாடங்களை (மூன்று ஆண்டுகள்
படிப்பாக) பயின்றவருக்கு ஏற்கனவே பயின்ற மேற்படி பி.எட் படிப்பு
போதுமானதாகும். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்பினால்
பெற்றுக்கொள்ளலாம
ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு தடை:ஊழியர்கள் அதிர்ச்சி
எட்டாவது ஊதிய மாற்றம் செயல்படுத்தும் வரை
ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர்கள் வைக்க வேண்டாம் என அரசு கேட்டு
கொண்டுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2006 ஜன.,1
முதல் 7 வது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் 906 ஐ.பி.எஸ். பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்
நாடு முழுவதும் 4,754 ஐ.பி.எஸ். பணியிடங்கள் உள்ளன. இதில் 3,848 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் 906 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மூவகை பயிற்சி உத்தரவுகளால் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி குறைந்தால் கல்வி இயக்குனருக்கு விளக்கம் அளிக்க வேண்டியுள்ள நிலை: கல்வித்துறை கவனிக்குமா?
பள்ளிக் கல்வி, எஸ்.எஸ்.ஏ., மற்றும்
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்களின் உத்தரவுகளை ஒரே நேரத்தில் பின்பற்ற
முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர்.அரசு
ஆசிரியர்கள் 12 லட்சம் பேரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி
ஆசிரியர்கள். இதில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும்
ஆசிரியர்களில், 90 சதவீதத்திற்கும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளிலும்
ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் நடத்துகின்றனர்.
பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் 'நோ'
பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றதாக
காட்டுவதற்காக, பிளஸ் 1 பாடம் நடத்தாத, தனியார் பள்ளிகளில், அதிரடி ஆய்வு
நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், அரசுப்
பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், கண்டிப்பாக பிளஸ் 2 பாடம் நடத்தக் கூடாது
என்றும் உத்தரவிட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சியை பள்ளியிலேயே பதிவு செய்யலாம்
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்து கொள்ளலாம்.
திசை மாறும் இளங்கன்றுகளுக்கு நற்பாதை காட்ட இனி ஒரு விதி செய்வோம்: நல்லதை விதைத்து நல்லதையே அறுவடை காணுவோம்
அதிக சுதந்திரமும், அதிக கட்டுப்பாடும்
மாணவர்களை தவறான வழிக்கு தூண்டும்; மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பியதுடன் பணி
முடிந்தது என நினைக்காமல் கண்காணிப்பு செய்தால் நல்வழிக்கு இட்டுச்செல்ல
முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டாயமா
தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன. 'அரசு அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார்
பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
என்னம்மா இப்படி பன்றிங்களேம்மா? TET Article
கடந்த 2013ம் ஆண்டு தேர்வெழுதி வெய்ட்டேஜ்ஜால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல் பி.எட்எட், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் , மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் என அனைவருமே ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றிய செய்திகள் வெய்ட்டேஜ் பிரச்சனைகள் காலிப்பணியிட விவரம் என்பத ஏதாவது அறிவிப்பு வருமா என ஏங்கி கொண்டிருக்கின்றனர்.. ஆனால் முன்னுக்கு பின் முரனான செய்திகள் வெளியாவதால் வருங்கால ஆசிரியர்கள் மிகவும் குழப்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம்: இந்த ஆண்டு புது நியமனத்திற்கு வாய்ப்பு இல்லை
கடந்த கல்வியாண்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட, தற்போதுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, அதிக அளவில் உள்ளதால், நடப்பு கல்வியாண்டில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.
பொது மாறுதல் கலந்தாய்வை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்
ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்தப்படும் ஆசிரியர்கள் பொதுமாறுதல்
கலந்தாய்வு நிகழ் ஆண்டு எப்போது நடைபெறும் எனஆசிரியர்கள்
எதிர்பார்த்துள்ளனர்.
ஆசிரியர்கள் தங்கள் விரும்பிய மாவட்டங்களுக்கு உள்ளானப்
பகுதிகளுக்கும் அல்லது தங்களது சொந்த மாவட்டங்களுக்கு
பணிமாறுதலில் செல்வதற்கும் தமிழகம் முழுவதும் உள்ள காலி
இடங்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம்
நடைபெறும்.
பள்ளிகளுக்கான ஓவியம், தையல் பாடம் ஓராண்டாக தேடிய 'சிலபஸ்' கிடைச்சாச்சு!
ஓராண்டாக தேடப்பட்டு வந்த, அரசுப் பள்ளிகளுக்கான ஓவியம் மற்றும் தையல்
பாடத்திட்டம் (சிலபஸ்), விருதுநகர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், கலை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.அரசுப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட கலை ஆசிரியர்கள் நிரந்தரமாகவும்; 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தொகுப்பூதியத்திலும் பணியாற்றி வருகின்றனர். சிறப்பு பயிற்சி ஒவ்வொருவருக்கும் ஓவியம், தையல், இசை, கைவினை, தோட்டக்கலை என, பல கலைப்பிரிவுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர்கள் பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது.
அரசு பள்ளிகளில் கட்டாய சிறப்பு வகுப்பு.
கல்வியாண்டு துவக்கத்திலேயே, ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, அரசு பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களை விட, தினமும் மூன்று மணி நேரம் கூடுதலாகவும், சனிக்கிழமை முழுவதும், பள்ளியில் செலவிட வேண்டியுள்ளதால், ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டாயமா
தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அரசு அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ் அப்பிற்கு விரைவில் தடை?
இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களை இங்கிலாந்தில் தடை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன.
தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் |
இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் மவுனம் சாதித்து வருகிறது. தமிழகத்தில், 5,000 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையின், மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது; அதற்கு பல நிபந்தனைகள் உள்ளன. 
தமிழகத்தில் தான் ஆதிதிராவிடர்களுக்கு சிறந்தமுறையில் கல்வி புகட்டப்படுகிறது ஆதிதிராவிடர் ஆணையம் பாராட்டு
ஆதிதிராவிடர் சமூதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியளிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் தலைவர் புனியா பாராட்டு தெரிவித்துள்ளார். தேசி்ய ஆதிதிராவிடர் ஆணையத்தின் தலைவர் புனியா தலைமையிலான குழுவினர் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளனர்.
கல்வித்துறை சிறப்பு அரசாணை ஆசிரியர் கலந்தாய்விற்கு முட்டுக்கட்டையா: ஆசிரியர்கள் அதிருப்தி.
கல்வித்துறை செயலரின் சிறப்பு அரசாணையால் ஆசிரியருக்கான பொது பணி மாறுதல் கலந்தாய்வில் தாமதம் ஏற்படுகிறது என ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும்.
தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி: ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ' போர்க்கொடி!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் சம்பள உயர்வு கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த பிரச்னை இழுபறியாக உள்ள நிலையில், தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி உருவாகியுள்ளது.
REGULARISATION ORDER
முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்
யு.ஜி.சி. விதிகளின் 12 பி அந்தஸ்து பெறாததால் 5 ஆண்டுகளாக வழங்கிய பட்டங்கள் செல்லாமல் போகலாம்: அவினாசிலிங்கம் பல்கலைக்கழக ஆசிரியைகள் குற்றச்சாட்டு
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 12 பி அந்தஸ்து பெறாததால் 5
ஆண்டுகளாக வழங் கப்பட்ட பட்டப் படிப்பு பட்டங்கள் செல்லாமல் போக வாய்ப்பு
இருப்பதாக, அவினாசிலிங்கம் பல்கலைக்கழக ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு: 9 நாட்களில் 32,640 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில்
கடந்த 9 நாட்களில் 32,640 மாணவர் களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை
வழங்கப்பட்டுள்ளது.