Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Study Material 2015

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பள்ளியில் ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்: தலைமை ஆசிரியை–4 ஆசிரியர்கள் இடமாற்றம்

பள்ளியில் ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்: தலைமை ஆசிரியை–4 ஆசிரியர்கள் இடமாற்றம்
        புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 140 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட 6 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக திருச்சியை சேர்ந்த காயத்திரி ஈஸ்வரி பணியாற்றினார்.

Lab Asst Post - தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம்

       அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளது.


அலுவலகங்களில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்?

       பொதுவாக அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டியதாகிறது. அவ்வாறு உட்காரும் போது பல விதமான உடல் பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 

காஸ் மானியம் பெறாத 34 லட்சம் வாடிக்கையாளர்:

         சமையல் காஸ் மானிய தொகை, வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தும் திட்டத்தில், 40 சதவீத வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள், எல்.பி.ஜி., சப்ளை கம்பெனிகளின் நெட்ஒர்க்கில் இணைக்கப்படாதது தெரியவந்துள்ளது.கர்நாடகாவில், 85 லட்சம் எல்.பி.ஜி., வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏப்ரல் முதல், சிலிண்டருக்கான மானியத்தொகை, அவரவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
 

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்

‘வனவர்’ எழுத்துத்தேர்வு முடிவுகள் எப்போது?

       தமிழகத்தில், முதன்முறையாக, வனத்துறைநடத்திய, ’வனவர்’ எழுத்துத் தேர்வுகளுக்கான முடிவுகள், எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், வனத்துறையில்,  வனவர்களாக பணியில் சேருவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வுகளை நடத்தி வந்தது. ’தங்களது துறைக்குத் தேவையான வனவர்களை, தாங்களே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என, மாநில அரசை, வனத்துறை வலியுறுத்தியது.அதைத் தொடர்ந்து, அதற்கான அனுமதியை, தமிழக அரசு வழங்கியது.
 

TNPSC குரூப்-1 மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது: 4,382 பேர் எழுதுகின்றனர்

       துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்ஆகிய பதவிகளில் 79 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 
 

பொறியாளர் பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு எப்போது வெளியாகும்?

     பொறியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய பொறியியல் பட்டதாரிகள் 10 மாதங்களாக காத்திருக்கின்றனர்.
 

முதன்மைக்கல்வி அலுவலர் இடமாற்றத்துக்கு தடை

       குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணனை சென்னை பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக இடமாற்றம் செய்ததற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

இணை இயக்குனர்கள் மாற்றம் !!

JD(SCERT) MRS.AMUTHAVALLI TRANSFERRED TO JD EXAMINATIONS

AND JD MR.KUPPUSAMY TRANSFERRED TO JD SCERT

TNTET - ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணி நியமனம் பள்ளிக்கல்விச் செயலாளரிடம், இடைநிலை ஆசிரியர்கள் மனு

         பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அலுவலகத்தில், 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.சி.ஏ.) சென்னை தலைமைச் செயலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க அரசு முடிவு

         பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. 

அஞ்சல் துறையில் 105 பணிகள் .

        இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 105 தபால் உதவியாளர், தபால்காரர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மத்திய புலனாய்வு துறையில் 210 பணிகள் .

        மத்திய புலனாய்வு துறையில் (சி.பி.ஐ) காலியாக உள்ள 210 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

100 அடி உயரத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி சென்னை விமான நிலையத்தில் ஏற்றப்பட்டது:

      சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில், 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

1 GB '3G' டேட்டாவுக்கு இனி ரூ.295 செலவாகும்; விரைவில் கட்டணம் உயருகிறது:

     பிரபல தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஐடியா செல்லுலர் டெல்லியில் பிரீபெய்டு மொபைல் இண்டர்நெட் பேக்கின் விலையை அதிரடியாக 18 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பது இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

மாநகராட்சி பள்ளிகளில் மாடித் தோட்டம்! மற்ற பள்ளிகளிலும் அமைக்க வேண்டும்



     கடந்தாண்டு மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் உட்பட நான்கு பள்ளிகளில் மாதிரி மாடித் தோட்டம் அமைக்கப்பட்டது. இந்தாண்டு மற்ற பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசும், மாநகராட்சியும் முன்வர வேண்டும்.

 

முதுநிலை மருத்துவப் படிப்பு: நாளை முதல் மீண்டும் புதிய கலந்தாய்வு

       முதுநிலை மருத்துவப் படிப்புகள், முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பு, ஆறு ஆண்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை படிப்பு (எம்.சிஎச்.-நியூரோசர்ஜரி) ஆகியவற்றுக்கு மீண்டும் புதிய கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 6), ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

சட்டப் படிப்பு: இன்று முதல் விண்ணப்ப விநியோகம்: 3 ஆண்டு பி.எல். படிப்புக்கு வயது உச்ச வரம்பு நீக்கம்

      ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம் நீட்டிப்பு

   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி விவகாரம்: சிறப்பு அதிகாரி விசாரணை

      அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி விவகாரம் குறித்து, சிறப்பு விசாரணை அதிகாரி, நேற்று விசாரணையைத் துவக்கினார். பள்ளியின் செயலர் ஆஜராகவில்லை. அவரை நேரில் ஆஜராகச் சொல்லி, சிறப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பி.இ., - பி.டெக்., படிப்புக்கு 'ஆன் - லைன்' அனுமதியில்லை

        இன்ஜி., மற்றும் பி.டெக்., படிப்பில், எந்த பல்கலைக்கும் திறந்தவெளி மற்றும், 'ஆன் - லைன்' கல்லுாரி நடத்த அனுமதிக்கவில்லை என்று, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. போலி விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றக் கூடாது என்றும் எச்சரித்து உள்ளது.

சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி:6, 7ம் தேதிகளில் நடக்கிறது

       சென்னை - ரஷ்யா கலாசார மையத்தில் நடைபெற உள்ள, ரஷ்ய கல்விக் கண்காட்சியில், ரஷ்ய நாட்டின் முன்னணி மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைகள் பங்கேற்கின்றன.சென்னை - ரஷ்யா கலாசார மையம் மற்றும் 'ஸ்டடி அப்ராடு' நிறுவனங்கள் இணைந்து, வரும் 6, 7ம் தேதிகளில், ரஷ்ய கல்விக் கண்காட்சியை நடத்துகின்றன.

"நெட்' தேர்வு முடிவு: ஜூன் 6-இல் வெளியாகிறது?

       சி.பி.எஸ்.இ. சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தகுதித் தேர்வு முடிவுகள் வருகிற 5 அல்லது 6-ஆம் தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தமிழகத்தில் மேகி நூடுல்சுக்கு தடை: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு


  தமிழகத்தில் மேகி நூடுல்சுக்கு தடை விதித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதால்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

TNPSC குரூப் 1 தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க உத்தரவு.

          குரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

FLASH NEWS : TNPSC குருப் 4 கலந்தாய்வுக்கு அழைப்பு

TNPSC குருப்  4 கலந்தாய்வுக்கு அழைப்பு 

25.08.2013 அன்று நடைபெற்று குரூப் 4 தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழை சரளமாக வாசிக்க, கணக்கு போட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம்

      தமிழகத்தில் எழுத்தறிவு இயக்கமான அறிவொளி இயக்கம் 1990-களில் தீவிரமாக செயல்பட்டபோது, பாவலர் பொன்.கருப்பையா எழுதிய ‘எண்ணும் எழுத்தும் அறிந் தால், இந்த மண்ணில் வாழ்க்கையே எளிதாம்..’ என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. ‘கற்ற ஒருவர் கல்லாத 10 பேருக்கு பாடம் சொல்லித் தாருங்கள்’ என்று அறிவொளி இயக்கம் தன்னார்வத் தொண்டர்களை அழைத்தது. கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போது ‘படித்த ஒருவர், படிப்பில் பின்தங்கி நிற்கும் 20 குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள்’ என்று அழைக்கிறது ‘எண்ணும் எழுத்தும்’ வாசிப்பு இயக்கம்.

AEEO - E payroll preparation regardign

       இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்தல் - இணைய வசதி இல்லாத உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள் அருகில் உள்ள இணைய வசதி உள்ள வட்டார வள மையத்தில் இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்ய இயக்குனர் உத்தரவு 

CRC Details

அகஇ - ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20/06/2015 அன்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 27/06/2015 அன்றும் "குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது 

வாடிக்கையாளர் குறைகளைத் தீர்க்க வங்கிகளில் குறை தீர்ப்பாயம்: ஜூலை முதல் செயல்படத் தொடங்கும்

        வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்த்து அவர் களுக்கு தரமான சேவை அளிப்பதற்காக அனைத்து வங்கிகளிலும் குறை தீர்ப்பாயத்தை (ஆம்புட்ஸ்மேன்) அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் இந்த குறைதீர்ப்பாயம் செயல்படத் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 31.12.2015 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

       தொடக்கக் கல்வி - 21 தமிழ், 25 தலைமையாசிரியர், 100 இடைநிலை ஆசிரியர்கள், 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடை நிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 31.12.2015 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive