Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் ஆசிரியரே பொறுப்பு என்று அறிவிப்பு
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி நேற்று தொடங்கியது. மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதாரை கட்டாயம் ஆக்கக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆதார்’ அட்டை இல்லாததற்காக, யாருக்கும்
சலுகைகளை மறுக்கக்கூடாது. ஆதாரை கட்டாயம் ஆக்கக்கூடாது என்ற எங்களது
முந்தைய உத்தரவை மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம்
கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2,600 புது டாக்டர் நியமன கலந்தாய்வு துவக்கம்: மூன்று மாத காத்திருப்புக்கு விடியல்
அரசு
பணிக்கு தேர்வாகி, மூன்று மாதங்களாக காத்திருந்த, 2,600 புதிய
டாக்டர்களுக்கு விடியல் ஏற்பட்டுள்ளது. அரசு பணியில் சேரும் கலந்தாய்வு
துவங்கி உள்ளது. இம்மாத இறுதிக்குள், அவர்கள் அரசு பணியில் சேர்கின்றனர்.
பேய் நடமாடுவதாக பீதி: அரசு பள்ளியில் மயங்கி விழுந்த மாணவ–மாணவிகளால் பரபரப்பு
தலைவாசல்
அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவ–மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
ஏற்பட்டது. மேலும், அந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டதால்
புத்தகப்பையில் மந்திரித்த வேப்பிலை மற்றும் எலுமிச்சைப்பழத்தை மாணவர்கள்
எடுத்துச்செல்கின்றனர்.
வணிகவியல் தேர்வு 'ஈசி': பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி
பிளஸ் 2 வணிகவியல் தேர்வில், முதல் மூன்று
பாடங்களில் இருந்து, 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றன. இதனால்,
எளிதில் தேர்ச்சி பெறலாம் என, மாணவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
காலி பணியிட பட்டியல் வந்ததும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு
தமிழக அரசுத் துறைகளின் காலிப் பணியிடங்கள்
பட்டியல் கிடைத்ததும், போட்டித் தேர்வுகளை அறிவிக்க, தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.
TNPSC Group2 Exam | Previous Year Questions - Free Online Test
2014 Full Question: ( Tamil Medium)
- GS (Tamil Medium) Group 2 - 2014 Question - Click Here
- GT TNPSC Group 2 - 2014 Question (Tamil Medium) -Click Here
2014 Full Question: ( English Medium)
- GS (English Medium) Group 2 - 2014 Question - Click Here
- GE TNPSC Group 2 - 2014 Question (English Medium) - Click Here
பிளஸ்–2 தேர்வு முடிவு மே முதல் வாரத்தில் வெளியாகிறது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 5–ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.மார்ச்
31–ந்தேதி வரை நடக்கும் இந்த தேர்வை 8 லட்சத்து 45 ஆயிரம் மாணவ–மாணவிகள்
எழுதி வருகின்றனர். தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்கள் மற்றும் சில
பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.நாளை
மறுநாள் (புதன்கிழமை) கணித தேர்வு நடக்கிறது. தேர்வுகளில் முறைகேடு
எதுவும் நடைபெறாமல் தடுக்க அரசு தேர்வுத்துறை தீவிர நடவடிக்கை
எடுத்துள்ளது. தேர்வு ஒரு பிறம் நடைபெற்று வந்தாலும் கூட விடைத்தாள்
திருத்தும் பணியும் தொடங்கி விட்டன.
வெளிநாடுகளில் படிக்க தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவி
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சீர்மரபினர், நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரிய இனத்தைச்
சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறது மத்திய சமூக
நீதி அமைச்சகம்.
கல்வியறிவில், தேசிய சராசரிக்கும் குறைவாகவே பழங்குடியினர் நிலை: பார்லிமென்ட் குழு.
கல்வியறிவில், தேசிய சராசரிக்கும் குறைவாகவே பழங்குடியினர் உள்ளனர் என, பார்லிமென்ட் குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
உலகின் சிறந்த ஆசிரியராக தேர்வான அமெரிக்க ஆசிரியைக்கு 1 மில்லியன் டாலர் பரிசு: துபாயில் வழங்கப்பட்டது
உலகின் சிறந்த ஆசிரியராக அமெரிக்காவை சேர்ந்த நான்ஸி அட்வேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை தான் உருவாக்கிய பள்ளியின் வளர்ச்சிக்கே கொடுக்க போவதாக அறிவித்துள்ளார்.
துடிப்பின்றி இயங்கும் எந்திர இதயம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை
இதை பிரிஸ்பேனை
சேர்ந்த என்ஜினீயர் டாக்டர் டேனியல் டிம்ஸ் வடிவமைத்துள்ளார். இந்த இயத்தை
செம்மறி ஆட்டுக்கு பொருத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளார்.
இத்திட்டத்துக்கான பணியை கடந்த 2001–ம் ஆண்டில் குவின்ஸ்லேண்ட் தொழில்
நுட்ப பல்கலைக் கழகத்தில் தொடங்கினார். இதற்கு ‘பிவாகர்’ என
பெயரிடப்பட்டுள்ளது.
அழிந்ததாக கருதப்பட்ட 2 தாவரங்கள் கண்டுபிடிப்பு
உலகில் அழிந்ததாக கருதப்பட்ட 2 தாவர இனங்கள் மூணாறு, குற்றால மலைகளில் கண்டறியப்பட்டுள்ளன. காசிதும்பை வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. இதில் "இன்பேசியியன் மூணாரென்சிஸ்,' "இன்பேசியியன் கூக்ரியானா' ஆகிய 2 தாவரங்கள் அழிந்ததாக கருதப்பட்டன.
25ஆம் தேதி தமிழக பட்ஜெட்
தமிழக அரசின் 2015 - 16ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 25ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அரசுப்பள்ளிகள் தங்களை நிலை நாட்டிக்கொள்ள போராட வேண்டியுள்ளது
மாநிலத்தில் முதலிடம் ...!! கணினி.... யோகா....
நாட்டியம்..... கராத்தே.....என்று தங்களால் இயலாதவற்றை தம் பிள்ளைகள்
மூலம் சாதிக்க வேண்டும் என்று ஏங்கும் பெற்றோர்களுக்கு ஆபத்தாண்டவனாய் கண்
முன்னே தெரிபவை பிரமாண்ட கட்டிடங்களும் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பறையும்
அட்மிஷன் செல்பவர்களுக்கு கொடுக்கப்படும் கொட்டைக்கூல் காபியும் தான்....
பொதுத்தேர்வுப் பணியில்ஈடுபட உள்ள 2,720ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணியில் ஈடுபட
உள்ள 2,720 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை சி.இ.ஓ., வழங்கினார். பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு வரும் 19ம் தேதி துவங்குகிறது. கடலூர் மாவட்டத்தில்,
கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் உள்ள 410 உயர் நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 42 ஆயிரத்து 227 மாணவ, மாணவிகள்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டி அட்டவணை
லீக் ஆட்டங்கள் முடிவடைந்த
நிலையில், உலகக்
கோப்பை கிரிக்கெட்
காலிறுதிப் போட்டிகளுக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அவை:
பிரிவு ஏ: நியூஸிலாந்து,
ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம்
பிரிவு பி: இந்தியா,
தென் ஆப்பிரிக்கா,
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்
ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி: பாடங்கள் நடத்துவதில் சிக்கல்.
தொடர்ந்து
நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளால், பாடம் நடத்துவதில் சிக்கல்
ஏற்படுவதாக, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
மாணவர்களின் திறனை வளர்ப்பது, எளிய முறையில் கல்வி கற்பிப்பது, புதிய செயல்
திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, மொழிப் பாடங்களை கையாள்வது உட்பட பல்வேறு
வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சாத்துார் ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஐ.நா.,வில் பேச்சு - ஆசிய கண்டத்தில் இருந்து சென்ற ஒரே பெண் ஆசிரியை
சாத்துார்:“உலகளவில் ஆண் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது,”என, ஐ.நா., சபையில்
நடந்த பெண்களின் நிலை குறித்த கருத்தரங்கில் பேசிய சாத்துார் பள்ளி ஆசிரியை
ரமாதேவி தெரிவித்தார். விருதுநகர், சாத்துார் ஆங்கில பட்டதாரி ஆசிரியை
ஆர்.ரமாதேவி. அ.ராமலிங்காபுரம் ஊராட்சி பள்ளியில் பணிபுரிகிறார். ஐ.நா.,
சபையில் நடந்த 'பெண்களின் நிலை' குறித்த கருத்தரங்கில் தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பேசினார்.நேற்று மாலை ஊர்
திரும்பிய அவர் கூறியதாவது:
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம்
வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும்
அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள்
உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர்
மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். வீட்டுக்குக் கழிவறை எப்படி
முக்கியமோ அதுமாதிரி நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்.
சிறுநீரகத்தின் பணிகள்:
SSA ஜனவரி மாதம் நடத்திய மாநில அளவிலான கற்றலடைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 19-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் மாநிலம் முழுவதும் கற்றலடைவுத் தேர்வு நடைபெற்றது.இந்தத்
தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3-ஆம் வகுப்பு,
5-ஆம் வகுப்பு,8-ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்றது. இதில் மாணவர்களின்
வாசிப்பு திறன், எழுதும் திறன், புரிந்துகொள்ளும் திறன், கணித அடிப்படை
செயல்பாடுகளை அறியும் திறன்கள் சோதிக்கப்பட்டன.