Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் நியமனத்தில் தெளிவான கொள்கை அவசியம்!

           பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் (ஒரு பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுதல்) கலந்தாய்வு, வரும், 26ம் தேதியும், தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, வரும், 18ம் தேதியும் நடக்கிறது.

MS. UNIVERSITY B.Ed ADMISSION

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

        தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

       தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.

சத்துணவு, அங்கன்வாடி மையங்களின் பணிகளை தொண்டு நிறுவனம், தனியாரிடம் ஒப்படைக்க அரசு ஆலோசனை

         தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களின் சில பணிகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மூலம் செயலாக்கம் திட்டம் குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 1982ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு சத்துணவு, முட்டை, சுண்டல் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் மற்றும் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையங்களிலும், ஒரு அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.

முப்பருவ கல்வி முறை; திண்டாடும் மாணவர்கள்; ஆசிரியர்கள் கவலை

         முப்பருவ கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் பல இலட்சம் கட்டி படிக்க வைக்கின்றனர். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களை மட்டும் பல்வேறு விதங்களில் சிரமத்துக்குள்ளாக்குகிறார்கள். 

          இன்றும் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் அரசு பள்ளி மாணவர்களை அவரவர்களின் வீட்டில் இருந்து காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற பலவற்றையும் கொண்டு வரக்கூறி நிர்பந்திக்கிறார்கள். அவ்வாறு கொண்டு வரும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு லீடர் மற்றும் சிறப்பு தனி சலுகைகளை வழங்குகின்றனர். இது போல் செயல்படும் ஒரு சில அரசு பள்ளி ஆசிரியர்களால் ஒட்டு மொத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதும் பொதுமக்களிடையே தேவையற்ற வெறுப்புணர்ச்சி ஏற்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களையும் தங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைக்க வேண்டும் ஆசிரியர்கள.

தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு கோரி வழக்கு

TATA - வின் மாநில அளவில் பதவி

உயர்வு வழக்கு W.P . ( MD ) NO; 4773/2011.

பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடி வைக்க நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

           பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடிவைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் எல்லாவகையான மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். என்று பள்ளி கல்வி இயக்குநர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது மாவட்டங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழையினால் பள்ளி மாணவ மாணவியருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் மாணவ மாணவியர், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

பாலியல் தொல்லை: பள்ளிகளில் கவுன்சலிங்

           பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறுவர், சிறுமியருக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இந்திய மருத்துவக் கழகத்தின் மூலம் கவுன்சலிங் அளிக்கப்படவுள்ளது. 
 

வேலை நாட்கள் ஆறு நாட்களாக உயர்த்த திட்டமில்லை

       அரசு ஊழியர்கள் வேலை நாட்கள் ஆறு நாட்களாக உயர்த்த திட்டமில்லை; மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து இடைகால நிவாரணமாக வழங்குவதில் மாற்றமில்லை

''பிளஸ் 2 மறுகூட்டல் மறுமதிப்பீட்டில் 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம்.

           ''பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில், 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.

வி.ஏ.ஓ., தேர்வில் 2.45 லட்சம் பேர் 'ஆப்சென்ட்!'

           நேற்று நடந்த வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வில், 2.45 லட்சம் பேர், 'ஆப்சென்ட்' ஆயினர். தேர்வுக்கு, 10 லட்சம் பேர் பதிவு செய்தபோதும், 7.63 லட்சம் பேர் மட்டுமே, தேர்வை எழுதினர்.

TNPSC VAO Exam Answer Key 2014 Download

TNPSC VAO Exam Answer Key 2016 Download |

TNPSC  VAO Exam Answer Key 2016

      இன்று (28.2.2016)  நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு தற்காலிக விடைகள் வெளியிடப்பட்டு உள்ளது. - Click Here & Download


எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்: நாமக்கல், ஈரோடு பள்ளிகள் ஆதிக்கம்

          எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கொச்சையான வார்த்தைகள்: மாற்றி அமைக்க பெற்றோர் கோரிக்கை

          தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தில், 9-ம் வகுப்பு முதல் பருவ மொத்த பாடங்களும், செய்யுள், உரைநடை, இலக்கணம் 3 என இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளன. உரைநடை பகுதியில் அதன் துணைப்பாடமாகிய ‘மாமரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில், கொச்சையான(பேச்சு வழக்கு) வார்தைகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 

திருச்சிராப்பள்ளியில் புதிதாக ஆசிரியர் இல்லக் கட்டடம்: முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.

       பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.40 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் தேவையற்ற பணியிட மாறுதல்களை கைவிடக் கோரிக்கை

              தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிகளில் அதிகப்படியாக உள்ள பணியிட மாறுதல்களைக் கைவிட வேண்டும், முறையற்ற மாறுதல் ஆணைகளை ரத்துசெய்து, நேரடியான கலந்தாய்வு முறையில் மாறுதல் ஆணைவழங்க வேண்டும், சேம நிதிக் கணக்குகளை முறைப்படுத்திக் கணக்குச் சீட்டுவழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முப்பருவ கல்வி முறை நல்லதா?

          தமிழகத்தில் பள்ளிக் கல்வித் திட்டம் சீர்கெட்டு போய் வருகிறது. அடுத்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளிவரும் போது இது வெளிப்படையாக தெரியும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். காரணம், முப்பருவ கல்வி முறையால் மாணவர்களின் எழுத்தறிவு திறன் குறைந்து போய் விட்டதுதான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் முப்பருவ கல்வி முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, பாடப்புத்தகங்கள் மூன்று பிரிவுகளாக பிரித்து, மூன்று பருவங்களுக்கு தரப்படுகிறது.
 

கட்டாய கல்வி சட்டம் காரணமாக ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம்

          ஆசிரியர் கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி முறையிலும் உள்ள பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி குழும தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது.
 

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் சாவு

      நாமக்கல்லில் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் எஸ்.பி. புதூரில் அரசு நிதி உதவி பெறும் அர்த்தனாரி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன் (வயது 10), நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தான். இறை வழிபாடு முடிந்தவுடன் வகுப்புக்கு சென்று உட்கார்ந்த மோகன் பாடங்களை எழுதிக்கொண்டு இருந்தான்.

'பாஸ் மார்க்' போட பணம் கேட்ட ஆசிரியர்கள்:சி.இ.ஓ.,வை முற்றுகையிட்ட பெற்றோர்

         அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 1 மறு தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்க, மாணவர்களிடம் ஆசிரியர்கள் பணம் கேட்டனர் என, சி.இ.ஓ.,வை முற்றுகையிட்ட, பெற்றோர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாகை, தேசிய மேல்நிலைப் பள்ளியில், 1,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
 

டியூஷனுக்கு வருமாறு மாணவர்களிடம் நிர்பந்தம்!

         அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களை கட்டாயம் டியூஷனுக்கு வர வேண்டும் என நிர்பந்தித்து வருவதால் ஏழை பெற்றோர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணே அந்த மாணவனின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதால், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக செலவை பற்றி கவலைப்படாமல் தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.
 

பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு

        பிளஸ் 2 மாணவர்கள், 3,800 பேர், பல்வேறு பாடங்களில், மறுமதிப்பீடு கோரி, தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர்; 200 பேர், மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்யும் பணி, நேற்று முன்தினம் முடிந்தது. தேர்வு முடிவு தயாரிக்கும் பணி, நேற்றிரவு வரை நீடித்தது.மருத்துவப் படிப்பிற்கான, 'ரேங்க்' பட்டியல், இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுவதால், நேற்றிரவே, மறுமதிப்பீடு முடிவு, வேகமாக அனுப்பி வைக்கப்பட்டது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி

          மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு!!

      மதுரை:உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 
 

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

          வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள ரூ.2 லட்சம் என்ற வருமான வரி உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக நிதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது அரசின் சாதனைகளில் ஒன்றாக வருமான வரி வரம்பு உச்சவரம்பை அறிவிக்க மோடி முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

பொறியியல் கல்லூரி கலந்தாய்வு:மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை

       சென்னை, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் பங்கேற்க, வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் அவருடன் உதவியாக வருபவருக்கு, அரசு பஸ்களில், 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு


      மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 6 நாள் வேலை நாளாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், 2015ம் ஆண்டின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பென்ஷன்தாரர்களுக்கு வீட்டிலேயே பென்ஷன்:பிரதமர் மோடி அரசு நடவடிக்கை.


       வயது முதிர்ந்த, நடக்க முடியாத பென்ஷன்தாரர்களுக்கு, அவர்களின் வீட்டிலேயே பென்ஷன் பணத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

பணி ஓய்வு பெறுபவர்களுக்குமத்திய அரசு புது திட்டம்.

       அரசு ஊழியர்கள், பணியிலிருந்து ஓய்வுபெறும்நாளிலேயே, ஓய்வூதியம் வழங்குவது குறித்த அரசாணையை, ஊழியர்கள் பெறும் வகையில், புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

TRB Special TET Result Now Published


Teachers Recruitment Board  College Road, Chennai-600006
SPECIAL TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2014 FOR PERSONS WITH DISABILITY (PWD) CANDIDATES
          

Dated:13-06-2014
Member Secretary

மோடி பயத்தால் முக்கிய திட்டங்களை 24 மணிநேரத்தில் உறுதி செய்த அமைச்சகங்கள்

          பிரதமர் நரேந்திர மோடிக்கு பயந்து அமைச்சக அதிகாரிகள் படு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்களாம். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மோடி அரசின் தலையாய திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து அந்த திட்டங்கள் குறித்த விளக்க உரைகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தயாரிக்க துவங்கிவிட்டனவாம்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive