Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

 
             இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 937 இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புது வீடு வாங்கப்போறீங்களா?: மார்ச் 31க்குள் முடிவு எடுங்க இல்லையேல் வரிச்சலுகை கிடையாது.


                 முதல் முறையாக வீடு வாங்க திட்டம் போட்டிருக்கிறீர்களா? கவீடெல்லாம் பார்த்துமுடிவு செய்துவிட்டால் யோசிக்காதீங்க. க மார்ச் 31 ம் தேதிக்குள் முடிவு செய்து வீட்டுக்கடன் வாங்கிடுங்க. இல்லாவிட்டால் கூடுதல் வரிச்சலுகை கிடைக்காது. ஆம், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது, கடந்தாண்டு போட்ட பட்ஜெட்டில் தரப்பட்ட வரிச்சலுகைகள் சிலவற்றை தொடாமல் விட்டு விட்டார். இடைக்கால பட்ஜெட் என் பதால் கடந்த பட்ஜெட்டில் தரப்பட்ட கூடுதல் வரிச்சலுகைகள் மீண்டும் அறிவிக்கப்படவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் பேர் பார்டரில் பாஸ் - தி இந்து


              ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 26 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.
 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் அகவிலைபடியை வழங்க திட்டம், மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 
           அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை இணைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்தால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். லோக்சபா தேர்தலுக்கு முன் இது குறித்த அறிவிப்பு வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணி :தமிழக முதல்வர் 2 பேருக்கு இன்று (20.02.14)பணி நியமன ஆணை வழங்கினார்.

         ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
 

மத்திய அரசு ஊழியர்களுக்கான டி.ஏ.வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க முடிவு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது

         "ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல்  காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண்  அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய  (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.

8th STD NATIONAL TALENT SEARCH EXAMINATION STUDY MATERIALS

                       
                       

OC பிரிவினர் பாதிக்காவண்ணம் இட ஒதுக்கீடு

          உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது. அப்படி தாண்ட வேண்டி சட்ட திருத்தத்தை மாநில அரசு கொண்டு வந்தால், அதனால் oc பிரிவினர் பாதிக்காவண்ணம் சட்டம் இயற்ற உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு 69% இட ஒதுக்கீடு கொடுக்கும் போது தர வரிசையில் 31 சதவிகிதத்தில் இருந்து  50 சதவிகிதத்திற்குள்  உள்ள oc பிரிவினருக்கு உபரியாக  பணி இடங்களை ( super   numeracy seats ) உருவாக்கி நியமனம் வழங்க வழி வகை செய்துள்ளது. இதன் G.O. இத்துடன் தரப்பட்டுள்ளது.



தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை ரத்து செய்யக் கோரி வழக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


       ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை, ரத்து செய்யக் கோரிய வழக்கில், டி.ஆர். பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐேகார்ட் கிளை உத்தரவிட்டது.

முதுகலை ஆசிரியர்: 4 பாடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில்

           விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை - 1, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கானஇறுதி தேர்வு முடிவு, நேற்று முன்தினம்(18.02.14) இரவு வெளியானது. ஹோம்சயின்ஸ் பாடத்துக்கான இறுதிப்பட்டியலில் ஒருவர்கூட இடம்பெறவில்லை.இதனால், ஹோம் சயின்ஸ் தவிற பிற நான்கு பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது.

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் மேலும் மதிப்பெண் சலுகை உண்டா?

              மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழகஅரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். 
 

2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிடவேண்டும்.

            2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிட கோரிய வழக்கில், டி.ஆர்.பி.,தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

நிரப்பப்படாமல் உள்ள 25 மாவட்டகல்வி அலுவலர்கள் பணியிடம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

           தமிழகத்தில், 25, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளாக, நிரப்பப்படாமல்உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) நியமனம், , 25 சதவீதம், அரசு தேர்வு மூலமாகவும், 75 சதவீதம், பணி மூப்பு அடிப்படையிலும் நிரப்பப்படுகிறது.தற்போது, 25 இடங்களில், டி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது.

PG TRB Tamil Posting "ஆன்-லைன்' வழியில்

          முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, உரியகல்வி சான்றிதழ்கள் மற்றும் முதுகலை தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' ஆகியவற்றுடன், நேரில் ஆஜராகவேண்டும்-பள்ளி கல்வி இயக்குனர் "ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர்பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு, நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என,பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார்.


தத்கால்' திட்டம் நீட்டிப்பு : தேர்வு துறை அறிவிப்பு

 
         பிளஸ் 2 தேர்வை எழுத, "தத்கால்' திட்டத்தில், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, இன்று ஒரு நாள், நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பில், "தேர்வுக்கான பதிவு செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 

பிளஸ்2 செய்முறை தேர்வில் விபரீதம்: ரசாயனத்தை தவறுதலாக விழுங்கிய மாணவி பலி

             பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், பிப்பெட்டில் உறிஞ்சியபோது  வாய்க்கு வந்த  ரசாயனத்தை தவறுதலாக விழுங்கிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். 


பொதுத்தேர்வுக்கு தயாரா?..

 
         "அக்னி பரீட்சை" என்றால் அலறாதவர்கள் கூட "பொதுத்தேர்வு" என்றால் அலறிக் கொண்டு ஓடும் காலகட்டம் இது. அத்தகைய "மகா கணம்" பொருந்திய அரசுப் பொதுத்தேர்வு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் துவங்க, இன்னும் சிறிது நாட்களே உள்ளன. கண்மூடி கண் திறப்பதற்குள், நாட்கள் உருண்டோடி பரீட்சையும் வந்துவிடும்.

முதுகலை தமிழ் ஆசிரியருக்கு நாளை பணி நியமன "கவுன்சிலிங்'

 
         "ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு, நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார். 

தேர்தல் வரை எதுவும் பேசாதீங்க... : அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு

            "லோக்சபா தேர்தல் முடியும் வரை, துறை தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்' என, அரசு அதிகாரிகளுக்கு, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்: அமைச்சர் கே.சி. வீரமணி

 
         மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு: 2012ல் தேர்வு எழுதியோருக்கும் மதிப்பெண் சலுகைகோரி மனு

 
           தமிழகத்தில் 2012ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்  பங்கேற்றவர்களுக்கும்  5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக்கோரிய மனுவுக்கு  பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி  தென்னூரை சேர்ந்த வின்சென்ட், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில்  ஆசிரியர்களுக்கு 2012 ஜூலையில் முதல் முறையாக தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
 

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அதிகாரிகள் 25ம் தேதி ஆலோசனைக் கூட்டம்

 
             பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக சென்னையில்  வருகிற 25ம¢ தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்திற்கு  பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு  செய்துள்ளது. 
 

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி

           திருச்சி புத்தூர், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளிகள், இ.ஆர். மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேலாண்மைக்குழு உறுப்பி னர் பயிற்சிக்காக மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி கடந்த 18ம் தேதி துவங்கியது. பயிற்சி 3 நாள் நடக்கிறது. 

குடிநீர் பாதுகாப்பு வாரவிழா: ஆசிரியர்களுக்கு பயிற்சி

 
           குடிநீர் பாதுகாப்பு வார விழாவையொட்டி பொள்ளாச்சியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழக அரசு குடிநீர் பாதுகாப்பு வாரவிழா கொண் டாட உத்தரவிட்டுள்ளது. இந்த விழாவில் குடிநீர் சேமிப்பு, குடிநீர் பாதுகாப்பு தரமான நிலத்தடிநீர் கண்டறி தல், நிலத்தடி நீர் சேகரிப்பின் அவசியம், தரமற்ற குடிநீரால் ஏற்படும் தீமைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தப்படுகிறது.

உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வின் மூலம் நிரப்பப்படும்

            உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


PG TRB - 2013 - Provisional Selection List Now Published.


           Direct Recruitment of Post Graduate Assistant for the Year 2012-2013 - Click Here for Provisional Selection list after Certificate Verification - Subject Zoology, Geography, Home Science, Physical Education Director Grade-I and Bio-Chemistry - Click Here


தேர்தல் ஆணையம் அதிரடி! விரைவில் ஓய்வுபெற உள்ள ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை!

        நாட்டின் 15வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் மே மாதம் முடிவுக்கு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (19.02.14 ல்) வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை

             ஐகோர்ட்டில் 2009–ம் ஆண்டு வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் இன்று (19.02.2014 ) கோர்ட்டு புறக்கணிப்பு

2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை எப்போது ?

               கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதர பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி வாபஸ்பெற்றுள்ளது.

சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தனி நியாயமா? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி?

             சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர்ந்துள்ள இளைஞர்கள், ஒரு ஆண்டிற்குப்பின், சிறப்பு தேர்வு அடிப்படையில், காவல் துறையில், பணி நியமனம் செய்யப்படுவர்" என அறிவித்துள்ள தமிழக அரசு, வெறும் 5,000 ரூபாய்சம்பளத்தில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்களை கண்டு கொள்ளாதது ஏன்; சிறப்புகாவல் இளைஞர் படைக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? என 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

10th Latest Study Material


English Study Material

English - Paper 2 - Tense, Verbs & Questions - Click Here

Power Point Presentation 

Tamil Paper 2 - Tamil Medium

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive