Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to Entry School Profile in www.tndge.com website?


For Download Tutorial - Click Here 

For Download Tutorial - Click Here 

முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களின் விவரம்


வேலூர் மாவட்டத்தில் பாடவாரியாக முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களின் விவரம் (ஒரு சில பாடங்களைத் தவிர)

Download Excel File - Click Here


வேலூர் மாவட்டத்தில் பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களின் விவரம் (Tamil & Social Science தவிர)

Download Excel File - Click Here

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: ஐகோர்ட் உத்தரவு


           ஆசிரியர் தகுதித்தேர்வு, "கீ" பதில்களில் 9 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில், அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மாணவர் பயன் பெற "மொபைல் கவுன்சலிங் வேன்"


         நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் வேன்" வசதி துவக்கி வைக்கப்பட்டது.

நவம்பர் 5ல் விண்ணில் பாய்கிறது "மங்கள்யான்" செயற்கைகோள்


           செவ்வாய் கிரகத்திற்கு, "மங்கள்யான்" செயற்கைகோள் அடுத்த மாதம், 5ம்தேதி ஏவப்படும் என்று, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட கோரி மனு


          நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சூரியா. மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, பிஎட் முடித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) தகுதித் தேர்வை கடந்த 14.10.2012ல் எழுதினேன். எனக்கு ‘பி’ வரிசையில் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. இதில் பாடத்திட்டத்தில் இல்லாத பல கேள்விகள் கேட்கப்பட்டன.
 

முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பதவி உயர்வில் சிக்கல்

           தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட உள்ள நிலையில், பதவி உயர்விற்கு காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என, ஆதங்கம் ஏற்பட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு உத்தரவிட்டது.

 

10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் இன்று முதல் விற்பனை.


          இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் வழி புத்தகங்கள் ரூ.185-க்கும், ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்க ஆர்வம் இல்லை மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு


               தற்காலிக ஆசிரியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு அனு மதி அளித்து உள்ளது. 
 

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.


முதல் நாள் கூட்டத்தில் 12 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது

            தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

2013, ஜுன் மாத நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு


           2013ம் ஆண்டு ஜுன் மாதம் நடத்தப்பட்ட நெட் தேர்வு மற்றும் டெல்லி மற்றும் ராஞ்சி மையங்களில் செப்டம்பர் 8ம் தேதி நடத்தப்பட்ட நெட் மறுதேர்வு ஆகியவற்றின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்டர்னல் மதிப்பெண்களை பகுப்பாய்வு செய்ய தொடங்கியது சி.பி.எஸ்.இ


          இன்டர்னல் மதிப்பெண்கள் சரியான முறையில்தான் வழங்கப்படுகிறதா என்பதை சோதனை செய்யும் தனது செயல்பாட்டை சி.பி.எஸ்.இ., தொடங்கியுள்ளது. இதன்பொருட்டு, இன்டர்னல் மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படும்.

பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப SSA உத்தரவு

              6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை (ALM) - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப SSA உத்தரவு

பொது மாறுதல் தொடர்பாக அரசாணை வெளியீடு

               தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த அரசாணை வெளியீடு

click here to download the GO.297 SCHOOL EDUCATION DATED.17.10.2013 - GENERAL TRANSFER - PRIORITY SHOULD BE GIVEN TO THOSE WHO ARE TRANSFERED DUE TO UPGRADATION FROM PRIMARY TO UPPER PRIMARY REG 

தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

           வீரச்செயல் புரிந்த மாணவர் / ஆசிரியர்கள் இருப்பின் மத்திய அரசின் ”அசோகச் சக்கரா” விருதுக்கு பரிந்துரைக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

தவிக்கும் ஆசிரியர்கள்


பாடம் நடத்த முடியாமல் திணறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
ஜெ. கு. லிஸ்பன் குமார்
 
 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகளை கவனிப்பதிலேயே நேரத்தை செலவிடுவதால், பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகம், சீருடை, பஸ் பாஸ், சைக்கிள், லேப்-டாப், காலணி, நோட்டு, புத்தகப்பை, ஜியாமென்டரி பாக்ஸ், அட்லஸ், கலர் பென்சில், கிரையான் என 14 விதமான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களுக்கான நலத்தி ட்டங்களை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களுக்கு தனித்தனி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. லேப்-டாப் என்று எடுத்து க்கொண்டால் அந்த பொறுப்பு வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு எத்தனை லேப்-டாப் வந்துள்ளது? எத்தனை பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது? யார் யாருக்கு கிடைக்கவில்லை? என அனைத்து கணக்கு வழக்குகளையும் பார்க்க வேண்டும். இதேநிலைதான் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும்.

பாதிக்கப்படும் படிப்பு

மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நலத்திட்டங்களுக்கான கணக்குகளைப் பார்த்து பராமரிக்கவே பெரும்பாலான நேரம் சென்றுவிடுகிறது. கணக்கில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் அதிலேயே அவர்கள் மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டியதுதான்.

நலத்திட்ட பணிகளை கண்காணிப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு ஆசிரியர்கள் கடும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களால் சரியாக பாடம் நடத்த முடிவதில்லை.

இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்ச்சி குறைந்தால் அதற்கும் ஆசிரியர்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

காலணிக்கு அளவு எடுக்கும் அவலம்

ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலணி வழங்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பாத அளவை எடுக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காகவா ஆசிரியர் பயிற்சியும், பி.எட். படிப்பும் படித்துவிட்டு வந்தோம் என்று நொந்துகொள்கிறார்கள் ஆசிரி யர்கள் .

அனைத்து நலத்திட்ட பணிகள் தொடர்பான கணக்குகளை ஒருங்கிணைத்து கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டிய தலைமை ஆசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபம். அவர்களால் பள்ளி நிர்வாக பணிகளை சரிவர கவனிக்க முடிவதில்லை.

“கல்வி அதிகாரிகள் அனுப்பும் இ-மெயில்களுக்கு பதில் அனுப்பி அனுப்பியே நேரம் எல்லாம் போய்விடுகிறது. பள்ளி நிர்வாகத்தை எப்படி கண்காணிக்க முடியும்” என்று சென்னையில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் வேதனையுடன் கூறினார்.

“மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க, அரசு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

நலத்திட்டப் பணிகளை கவனிக்க ஒவ்வொரு பள்ளியிலும் தனியாக ஒரு அதிகாரியை நியமித்துவிட்டால், ஆசிரியர்கள் நிம்மதியாக பாடம் நடத்துவார்கள்” என்று இந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகன்.
         அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகளை கவனிப்பதிலேயே நேரத்தை செலவிடுவதால், பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள்.



தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!

           ஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு முதல் அடியில்தான் தொடங்குகிறது. மிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுக்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது தொடக்கக் கல்வியே!

தீபாவளி போனஸ் : பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை


          அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவதுபோல, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

12th Latest Study Material - Biology

  1. How to get Full Marks in Biology - Prepared by Mr. Bernatsha- தமிழ் வழி 
Thanks to Mr. Bernatsha,
PG Asst, 
Global Metric Higher Secondary School,
Kangeyam, Tirupur Dt.

ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப் - Dinamalar


           அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

"கேட்" தேர்வில் பெண்கள் ஆர்வம்


          "காமன் அட்மிஷன் டெஸ்ட்" எனப்படும் "கேட்" தேர்விற்கு, விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்து உள்ளது.

தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவு


            தொடக்கக்கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் நிர்வாக மாறுதல் குறித்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. 
 

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தடையேதும் இல்லை!... ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை - உயர்நீதிமன்றம்


           முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது .முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள்டி.ஆர்.பி.இணையதளத்தில் வெளியிடப்பட்டன.     

 

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு திட்டமிட்டபடி நடக்கும்.

ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட உயர்நீதிமன்ற கிளை தடை
 
           நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளது. 
 

விடுதிகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை


            விடுதியில் மாணவன் கொலை செய்யப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மாணவன் கொலை நடந்த பள்ளியின் விடுதியை மூடுவதற்கு, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டள்ளார்.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்


              சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
 

12th Latest Study Material


CCE Activities - Album


CCE Activities - Album - Click Here

Thanks to Mr. Sanjeevan Kannaiyan,
PUMS, Othiyathur.

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்! ! !


1. பசி என்று குழந்தை சொன்னால்,உடனே உணவு கொடுங்கள்,அரட்டையிலோ, சோம்பலிலோ,வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் குழப்பம் - Dinamalar


          "ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.

அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம்

            சென்னையில் நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்குநர் பழைய உத்தரவு

            ஆசிரியர்கள் முன் அனுமதி பெற வேண்டிய நிலையில், முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு மேற்கொண்டால் அதற்கு விதிகளின்ப்படி தக்க ஒழுங்கு நடவடிக்கை தான் எடுக்க வேண்டுமே தவிர ஊக்க ஊதிய உயர்வினை இரத்து செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குநர் பழைய உத்தரவு


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive