வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு
மாதத்துக்கு பின், இன்று செயல்பட துவங்கின. இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி
முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு
அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்குட்பட்ட தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களிடம் திடீர் அக்ரிமண்ட்
தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர் இன்னும் 5 ஆண்டுகளுக்குள்
UGC நிர்ணயித்துள்ள கல்விதகுதியை பெற்றுக் கொள்ள வேண்டும் .இல்லையெனில் 5
வருடத்திற்கு பிறகு தாங்களாகவே வெளியேற சம்மதிக்கிறோம் என தனியார்
கல்லூரயில் கையெழுத்து வாங்குகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள்: சமூக நலத்துறை
வெள்ளத்தால் சீருடைகளை இழந்த 31 ஆயிரம்
மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அனுப்பப்பட்டுள்ளன என சமூக நலத் துறையினர்
தெரிவித்தனர். தொடர் மழை, வெள்ளம் காரணமாக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. வெள்ளத்தால்
மாணவர்களின் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் பறிபோயின.
இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்பட்டு
வருகின்றன.
148 கல்லூரிகளுக்கு தேர்வு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை. அறிவிப்பு
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து,
வெள்ளப் பாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4
மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளில் அனைத்து பருவத்
தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. மேலும், தேர்வுகள்
டிசம்பர் 28 முதல் தொடங்கி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மாணவர் மருத்துவ முகாம்4 மாவட்டங்களில் துவக்கம்
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில்,
பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், நேற்று துவங்கியது; 20 நடமாடும்
மருத்துவ குழுக்கள், இந்த பணியில் ஈடுபட்டு உள்ளன.மழை, வெள்ளத்தால்
பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார்
மாவட்டங்களில், நேற்று, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
தேர்வு பயம் வேண்டாம்! - பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா
நீண்ட விடுமுறைக்கு பின், சென்னை,
திருவள்ளூர், கடலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் நேற்று
திறக்கப்பட்டன. முதல் நாளில், மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை
செய்யப்பட்டு, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. வெள்ளத்தில்
பாதித்தவர்களுக்கு, புதிய சான்றிதழ் வழங்கும் முகாமும் நேற்று துவங்கியது.
பள்ளி எப்போது திறக்கும் என்று ஆவலோடு இருந்தோம்: மாணவிகள் பேட்டி!!
1 மாத விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ–மாணவிகள்
இன்று உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
எழும்பூர் மாநில அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதலே
மாணவிகள் வகுப்புக்கு வரத்தொடங்கினர்.
ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பணி: மீதமுள்ள பணியிடங்களுக்கு வழக்கின் தீர்ப்பாணை பெற்ற பிறகே செயல்படுத்த இயலும்-CM Cell
கோரிக்கை நிலவரம்பெயர் S.SARAVANANகோரிக்கை எண் 2015/854545/S*கோரிக்கைத் தேதி 2*/11/2015முகவரி CUDDALORE - 606001.TAMILNADU .கோரிக்கைஆதி
திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன
அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
வெளியிடப்பட்டது.
Flash News:VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் -TNPSC
இன்று கடைசி நாளாக இருந்த நிலையில் VAO தேர்வுக்கு Online மூலமாக விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் TNPSC அறிவிப்பு.
7–வது சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது 6 மாதம் தாமதமாகும்?: குறைபாடுகளை நீக்க தீவிர ஆலோசனை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சம்பள விகிதம்
சீரமைக்கப்படும்.இதற்காக மத்திய அரசு ‘‘சம்பள கமிஷன்’’ ஏற்படுத்தி ஆய்வு
செய்து, அதனிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கும் .மத்தியில்பா.ஜ.க.
ஆட்சி அமைந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை, விலைவாசி உயர்வுக்கு
ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று
காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது, மாற்றுத்திறனாளி
வக்கீல் முகமது நசரூல்லா ஆஜராகி ஒரு மனுவை நீதிபதிகளிடம் கொடுத்தார். அந்த
மனுவில் கூறி இருப்பதாவது:–
சனிக்கிழமை வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்து கொள்ளலாம் - பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா
பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியதாவது:–
10–ம் மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு
வகுப்புகள் நடத்தப்படும். விடுமுறை காலம் அதிகமானதால் அதனை ஈடுசெய்யும்
வகையில் பாடங்களை முடிக்க சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளலாம்.
தேவைப்பட்டால் வகுப்பு நேரத்தை பள்ளிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப அதிகரித்து
கொள்ளலாம்.
10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம்: பள்ளி கல்வித்துறை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இவர்கள் வெறும் 'ஜாலி' வாத்தியார்கள் அல்ல! - அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
நான் அரங்குக்குள் நுழைந்தபோது 3 மணி இருக்கும். நுழைவு படிக்கட்டுகள் அருகே ஒருவர் அப்போதுதான் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி மெக்ஸிக்கோவில் கண்டுபிடிப்பு
உலகிலேயே முதன்முதலாக டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி மெக்ஸிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதியவர்கள் 12,000 பேர்; 'பாஸ்' செய்தது 20,000!
ஆக்ரா அம்பேத்கார் பல்கலை.,யில் பி.எட்., தேர்வு எழுதியவர்கள் 12,800பேர். ஆனால், 20,000 க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு முடிவுகள் உள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை - இயக்குநர்
வெள்ளம் பாதித்த பகுதி மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை, வதந்திகைளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் திரு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
- Source: News 7 TV Channel.
- Source: News 7 TV Channel.
டிச.18-ல் ஐஏஎஸ் முதன்மை தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட்
அறிவிக்கப்பட்டபடி சிவிஸ் சர்வீசஸ் முதன்மைத் தேர்வை வரும் 18-ம் தேதி தொடங்க யுபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரி பொறியியல் மாணவர்கள் திடீர் போராட்டம்: 16, 18-ம் தேதி தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
செமஸ்டர் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி முதல் ஆண்டு பொறியியல் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலிசிதாரர்களுக்கு பிரீமியம் தாமதமாக செலுத்துவதில் சலுகை: எல்ஐசி நிறுவனம்அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்கள் பிரீமியம் தாமதமாக செலுத்தும்பட்சத்தில் அபராதக் கட்டணத்தில் இருந்து விலக்கு உள்ளிட்ட சில சலுகைகளை எல்ஐசி வழங்கியுள்ளது.எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு, புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.
மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?
டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பதவியில் காலியாக உள்ள
813 பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர் 12ம் தேதி
அறிவித்தது. அன்றைய தினம் முதல் டிஎன்பிஎஸ்சியின் ஆன்லைன் மூலம் மட்டுமே
விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு
தேர்ச்சி கல்வி தகுதி என்பதால் போட்டிப் போட்டு லட்சக்கணக்கில்
விண்ணப்பித்தனர்.
அண்ணாமலைப் பல்கலையில் டிச.14 முதல் 28 வரை மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் முகாம்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள்
மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற
டிச.14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பல்கலைக்கழக ராஜா முத்தையா அனெக்ஸ்
அரங்கில் நடைபெறுகிறது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள்
சான்றிதழ் நகல்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழகஅரசு
உத்தரவிட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகாங்கயம் பள்ளி ஆய்வு கட்டுரை தேர்வு
திருப்பூர், :காங்கயம் பள்ளி மாணவியரின் ஆய்வு கட்டுரை, சண்டிகரில்
நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு
செய்யப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகம் தயார்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள்
விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில்
புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி
மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.