''வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க
வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சந்தீப் சக்சேனா
தெரிவித்தார். தமிழகத்தில், கடந்த மாதம், 15ம் தேதி, வரைவு வாக்காளர்
பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கு முன், வாக்காளர் பட்டியலில் பெயர்
சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஏராளமானோர் நேரடியாகவும்,
'ஆன் - லைன்' மூலமாகவும் விண்ணப்பித்திருந்தனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
10ம் வகுப்பு தேர்வு செய்முறைபயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
'அடுத்த ஆண்டு மார்ச்சில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், நேரடி
தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சியில் சேர, 30ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து பாடங்களையும்
எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள் மற்றும், 2012க்கு முந்தைய
பாடத்திட்டத்தில், அறிவியல் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மீண்டும் தேர்வு
எழுத, அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.
ரேஷனில் பருப்பு தட்டுப்பாடா? கலெக்டருக்கு உடனே தெரிவிக்கலாம்!
ரேஷன் கடைகளுக்கு, பாமாயில் மற்றும் பருப்பு வகைகளை, தேவைக்கு குறைவாக
வழங்கினால், அந்த விவரத்தை கடை ஊழியர்கள், மாவட்ட கலெக்டருக்கு உடனே
தெரிவிக்க வேண்டும்' என, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்
உள்ள, 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக
திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா, 30
ரூபாய்க்கும்; ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மாணவர்களை பள்ளி வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளி வேலை செய்ய
ஈடுபடுத்தக்கூடாது எனவும், மீறும் தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல் பயிற்சி"
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் படித்தல் எழுதுதல் திறன்
வளர்த்தல் பயிற்சி" என்ற தலைப்பில் 15/10/2015 மற்றும் 16/10/2015 ஆகிய
நாட்களில் பயிற்சி - செயல்முறைகள்
10th Study Material - Tamil Important Questions
Prepared by Mr. B. Panneer Selvam, B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
Primary & Middle Schools Annual Inspection Report Form Download
Thanks to Mr. S.Samuel Selvaraj B.Sc,M.A.,B.Ed
இன்று "பாலின்டிரோம்' தேதி தெரியுமா?
இன்றைய தேதியான 5.10.2015க்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. இதை அப்படியே பின்னால் இருந்து திருப்பி எழுதினாலும் 5.10.2015 என்ற தான்
வரும்.
மருத்துவ கல்லூரியில் சேர வருகிறது நுழைவுத்தேர்வு?
புதுடில்லி:பொது நுழைவுத் தேர்வு மூலம், மருத்துவக் கல்லுாரிகளில்
மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலான,
எம்.சி.ஐ., மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தேவை 1 கோடி ஆசிரியர்கள்; யுனெஸ்கோ தகவல்!
சர்வதேச
ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 05ம் தேதி கொண்டாடப்பட்டு
வருகிறது. யுனெஸ்கோ அமைப்பு, இந்தாண்டை. குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட
தீர்மானித்துள்ளது.சர்வதேச
அளவில் உள்ள நாடுகளில் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறாமல் அதிக
அவதிப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமல்லாது அவர்களது
எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு: விண்ணப்ப நிலவரம் இணையதளத்தில் வெளியீடு
குரூப்
1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா என்பது
குறித்த விவரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்
(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இன்று ஒட்டுமொத்த விடுப்பில் கருவூலத் துறை ஊழியர்கள்;கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் அறிவிப்பில்
கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபடுவோர் கருவூலத்துக்கான சாவிகளை
தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் அளிக்க வேண்டும். சாவியை
ஒப்படைப்பதில் எந்த அதிகாரியும் நியமிக்கப்படாவிட்டால், கருவூல அலுவலரே
தனது கைவசம் சாவியை வைத்துக் கொள்ள வேண்டும்.
பி.எட். சேர்க்கை: அக்.14 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
இளநிலை
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல்
கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.கலந்தாய்வு
முடிவில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில்
மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக். 14, 15, 16 ஆகிய
தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்
காலாண்டு
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததையடுத்து அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.
குறைவான மதிப்பெண் பெறும்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
அரசு
பள்ளிகளில், காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறையும், பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலி: தேர்ச்சி விகிதம் கேள்விக்குறி
விருதுநகர்: அரசு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களால் பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறையும் நிலை
ஏற்பட்டுள்ளது.
"அக்.8 வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு இல்லை'
அக்டோபர்
8-ம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர் சங்கங்களின் ஒரு நாள் அடையாள
வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முன்னேற்ற
சங்கம் பங்கேற்கவில்லை என அதன் நிறுவனர் தலைவர் பி.சா.துரைமணிராஜன்
தெரிவித்துள்ளார்.
Android lolli pop Operating System - Round up!
அரசன், ஆண்டி, அம்மிக்கல், ஆத்திச்சூடி இது போன்ற வார்த்தைகளை கடந்து வந்த
நாம்தான் 'ஆண்ட்ராய்ட்' என்ற வார்த்தையையும் கடந்து கொண்டு இருக்கிறோம்.
ஆண்ட்ராய்ட்
- இது ஒரு வகையான மென்பொருள். கணினிகளிலும், ஸ்மார்ட் போன்களிலும் உள்ள
மென்பொருள்களை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட தளம் (operating system). இந்த
தளத்தை பிரத்யேகமாக ஸ்மார்ட் போன்களிலும், டேப்லெட்டுகளிலும் இயக்க
பயன்படுத்துவர். இதை 2003ல், ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் நிறுவனம் (open
handset alliance) தொடங்கியது. பின்பு அதை 2005 ஆம் ஆண்டில் கூகுள்
நிறுவனம் வாங்கிக் கொண்டது.
2004 முதல் 2006 வரை தொகுப்புதியத்தில் பணியமர்த்தபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு!!
01.06.2006-யில் பணிவரன்முறைபடுத்தப்பட்டு
காலமுறை ஊதியம்பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன
நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் அரசுக்கு எவ்வளவு செலவினத்தொகை
ஏற்படும் என உத்தேச மதிப்பை உடனடியாக அளிக்குமாறு கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரம் தகவல்.
DEE - மாணவர்களை பள்ளி வேலை செய்ய ஈடுபடுத்த கூடாது - இயக்குனர் செயல்முறைகள்
தொடக்ககல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை பள்ளி வேலை செய்ய ஈடுபடுத்த கூடாது - மீறினால் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்
2015-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது, உடல் இயங்கியல் அல்லது மருந்தியல் துறைக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2015-ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு, வில்லியம் சி.கம்ப்பெல், சடோசி ஓமுரா மற்றும் யுயு து ஆகிய மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள 35 பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள்
விற்பனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டு, ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் பி.வி.
ரமணா தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை.
வங்கிகளுக்கு இம்மாதம், தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை.
எனினும்,பொதுமக்களுக்கு, பெரிதாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என வங்கி
அதிகாரிகள் தெரிவித்தனர்.அக்., 21 முதல் 23 வரை, ஆயுத பூஜை, விஜய தசமி,
மொகரம் ஆகிய பண்டிக்கைக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; 24ம்
தேதி, நான்காம் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்காது.
5 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம்: மேலும் பலரை நீக்க அரசு திட்டம்
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 5.08 லட்சம் பேருக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது.
மத்திய அரசின் அதிக பங்களிப்புடன் தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள்
நடைமுறையில் இருக்கிறது.
உதவி பேராசிரியர் பணி: நெட் தகுதித் தேர்வுக்கு நவ.1 வரை விண்ணப்பிக்கலாம்
உதவி பேராசிரியர் பணிக்கான “நெட்” தகுதித் தேர்வுக்கு நவம்பர் 1-ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.பல்கலைக்கழகங்கள்
மற்றும் கல்லூரிகளில் இலக்கியம், வரலாறு, புவியியல், சமூகவியல், பொது
நிர்வாகம், உளவியல் உள்ளிட்ட கலைப்பிரிவு சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி
பேராசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ நடத்தும் “நெட்” தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும்.
எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?
தொடரும் கலப்படங்கள், விதிமீறல்கள் | நுகர்வோர் சங்கத் தலைவர் விளக்கம்*சமையல்
எண்ணெய் பாக்கெட், பாட்டில் வாங்கும்போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க
வேண்டும் என்று இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் நிர்மலா தேசிகன்
கூறியுள்ளார்.