மதுரை:தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு
அறிவிப்பில், கல்வித்துறை தொடர்ந்து மவுனம் காத்து வருவதால், ஆசிரியர்கள்
குழப்பத்தில் உள்ளனர்.நடப்பாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும்
பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலை பட்டதாரி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல், ஆகஸ்டில்
நடத்தி முடிக்கப்பட்டது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தலைமை ஆசிரியர் காலியிடம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சிவகங்கை:தமிழகத்திலுள்ள அரசு உயர்,மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
காலிபணியிடங்கள் குறித்த விபரங்களை, அனுப்ப பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமை ஆசிரியர்
பதவி உயர்வை சிலர் விரும்பவில்லை. இலவச நலத்திட்ட உதவிகளை வழங்குதல், சில
பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையேயான கோஷ்டியை சமாளித்தல், தேர்ச்சி விகிதம்
அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை மனதில் வைத்து பதவியை தவிர்த்தனர்.
எஸ்.சி.,--எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித் தொகை தாமதத்தால் பாதிப்பு
வத்தலக்குண்டு:பி.எட்., கல்லுாரிகளில் படிக்கும் எஸ்.சி.,-எஸ்.டி.,
மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் அரசு தாமதிப்பதால் மாணவர்கள்
பாதிக்கப்படுகின்றனர்..தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்.சி.டி.இ.)
கண்டிப்பு காட்டியதைத் தொடர்ந்து, தமிழக அரசு பி.எட்., படிப்பை இரண்டு
ஆண்டுகள் என அறிவித்தது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், 'போஸ்ட் மெட்ரிக்
ஸ்காலர்ஷிப்' எனப்படும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
மத்திய அரசின் நிதிஉதவியுடன், மாநில அரசால் வழங்கப்படுகிறது.
ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை
மதுரை:கல்வித் துறையில் தற்காலிக பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கும்
பணி தொடர்பாக, ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை, மதுரையில் நேற்று முன்
தினம் நடந்தது.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார்.
இணை இயக்குனர் (என்.எஸ்.எஸ்.,) பொன்னையா தலைமை வகித்து, கணக்கெடுக்கும் பணி
குறித்து விளக்கினார். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர்,
துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட
கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
பள்ளிகளில் தொழிற்கல்வி கேள்விக்குறி:ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 2,500 மேல்நிலைப்பள்ளிகளில் 3,௦௦௦ தொழிற்கல்வி
ஆசிரியர்கள்உள்ளனர். கடந்த 1990ல் தொகுப்பூதிய ஆசிரியர்கள்,
நிரந்தரப்பணிக்கு மாற்றப்பட்டனர்.'தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு
ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே
உத்தரவிட்டது.
கல்வி உரிமைச் சட்டம்: முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு ரூ. 8 கோடி; தமிழக அரசு வழங்கியது
இலவசக்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத
இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டவர்களுக்கான கட்டணத் தொகையில் முதல்
கட்டமாக ரூ. 8 கோடி தனியார் பள்ளிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக,
சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்கான முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள கற்றலில் குறைபாடுடைய மாணவர்களுக்கான "கேர்
இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிகேவியரல் சயின்ஸ்' கல்வி மையத்தில் 2015-2016
கல்வியாண்டில் ஓர் ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
திறந்தநிலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த 4 ஆண்டுகளில் 277 மெட்ரிக். பள்ளிகளுக்கு அனுமதி
கடந்த
4 ஆண்டுகளில் புதிதாக 277 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், மெட்ரிக். பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களின் எண்ணிக்கை 11 லட்சம் அதிகரித்துள்ளது.
தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் இடம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி எம்.பூஜாலட்சுமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக அரசு கடைபிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்கி தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 2015-16-ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,777 இடங்களுக்கான பி.எட். படிப்பில் சேருவதற்கு சுமார் 7 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம்
தமிழகம் முழுவதும் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த 21 கல்லூரிகளிலும் பி.எட். சேர்ந்து படிக்க 1,777 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படித்து முடித்த பட்டதாரிகள் சேர்ந்து படிக்க கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளில் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது.
பி.எப். புகார்களுக்குத் தீர்வுகாண புதிய திட்டம் தொடக்கம்
தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு
நிதி தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய திட்டம்
தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஒ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல் மாணவர்களுக்கு அக்.1 முதல் மாபெரும் வளாக நேர்முகத் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
பொறியியல் மாணவர்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் மிகப்பெரிய அளவில் வளாக
நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செப்.28-ல் பி.எட். கலந்தாய்வு தொடக்கம்: 16-ம் தேதி முதல் அழைப்புக் கடிதம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேர 6
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரியை
தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு வரும் 28-ம் தேதி தொடங்குகிறது.
மூத்தோர்- இளையோர் ஊதிய விகிதம் சமன் செய்யும் அரசு ஆணை
தேர்வுநிலை பெறுவதற்கு முன்னரே பதவி உயர்வு பெற்றவர், தேர்வுநிலை பெற்ற பின்னர் பதவி உயர்வு பெற்றவர், மூத்தோர்- இளையோர் ஊதிய விகிதம் சமன் செய்யும் அரசு ஆணை
Important Educational Department Latest Government Orders
முதல்வர் பரிசு தொகை திட்டம்; மாணவர்களின் விண்ணப்பம் வரவேற்பு
முதல்வரின் பரிசு தொகை வழங்கும் திட்டத்திற்கு, மாணவ, மாணவியரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு முதல்வரின் பரிசு தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு, ஒரு மாணவருக்கு 3,000 ரூபாய் வீதம், தொடர் கல்வி படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது.
SSA திட்டம்: மத்திய அரசு நிதி 50% ஆகக் குறைகிறது
அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான (சர்வ சிக்ஷா அபியான்) தனது நிதிப் பங்களிப்பை 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
10th Maths Study Material
Maths Study Material
- Maths Lesson wise questions | Mr. Elangovan - Tamil Medium
- All other Study Materials | - Click Here
12th Study Material Computer Science
- Computer Science | 1 Mark Quiz - Android App | Mr. B. Sampath Kumar- Click Here
Mr. B Sampath Kumar
டி.ஆர்.டி.ஓ.,வுக்கு முதல் பெண் டைரக்டர் ஜெனரல்
ராணுவ
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையான, டி.ஆர்.டி.ஓ.,வின்
புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட மஞ்சுளா, நேற்று முன்தினம்
பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம், இந்த பதவிக்கு வந்த முதல் பெண் என்ற
பெருமையை பெற்றுள்ளார்.கடந்த
1962ம் ஆண்டு, ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் பிறந்த மஞ்சுளா,
உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல்
பட்டம் பெற்று, 1987ல், டி.ஆர்.டி.ஓ., பணியில் சேர்ந்தார்.
ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? நாம் என்ன செய்ய வேண்டும்..?
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில்
ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும்
கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம்
நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்?