டேஷ்
அகாடமி... ஒரு பிரபலமாகக் கருதப்படுபவர் நடத்தும் பள்ளி. பல வருடங்களுக்கு
முன்பு, என் மகனுக்காக அந்தப் பள்ளியில் விசாரிக்கச் சென்றபோது, மிகவும்
சிறிய எழுத்தில், "இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை" என்று
போடப்பட்டிருந்தது, அங்கீகாரம் எப்போது கிடைக்கும் என்ற என் கேள்விக்கு
"விரைவில்" என்று பதில் வந்தது. பிள்ளையின் படிப்பு விஷயத்தில் இதுபோன்ற
பகீரத முயற்சிகளில் ஈடுபடும், அதுவும் அங்கீகாரமே இல்லாமல் செயல்படும்
பள்ளியில் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
கண் தானத்துக்கு '104'ஐ அழைத்தால் போதும்:டாக்டர்கள் குழு வீடு தேடி வரும்
தொலைபேசி வழியாக மருத் துவ ஆலோசனை பெறும்
'104' தொலைபேசி எண்ணை கண் தானத்திற்கும் அழைக்கலாம்; அழைத்த சிறிது
நேரத்தில் கண் தானம் பெற டாக்டர்கள் குழு வீடு தேடி வரும்.தமிழகத்தில்
பொதுமக்கள் தாமாக முன்வந்து அரசு கண் மருத்துவமனைகளிலும் கண் தான
வங்கிகளும் படிவங்களை பதிவு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் அதுபற்றி யாரிடம்
தெரிவிப்பது என தெரியாமல் கண் தானம் பற்றி மறந்து விடுகின்றனர்.
‘பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகளை சரி செய்ய வேண்டும்’ தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
பள்ளியில் திறந்த வெளி கிணறுகள் ஆபத்தான
வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
பிளஸ் 2 மறு மதிப்பீடு, மறு கூட்டல் முடிவுகள் ஓரிரு நாளில் இணையதளத்தில் வெளியீடு
தமிழகத்தில்
பிளஸ்-2 மாணவர்களின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மதிப்பெண்கள் தேர்வுத்
துறை இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
10ம் வகுப்பு செய்முறை வகுப்புக்கு பதிவுப்பணி
பத்தாம்
வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க தனித்தேர்வர்கள்,
அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் தங்கள் பெயரை பதிவு
செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும், 2015-16ம்
கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளில் செய்முறை பயிற்சியில் பங்கேற்காத
மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. நேற்று முதல் பெயர் பதிவுப்பணிகள்
துவங்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் பெற பொது இ சேவை மையத்தை அணுகலாம்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து
நிர்வகித்து வருகிறது.
எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை: ஜூன் 19 முதல் கலந்தாய்வு
தமிழகத்தில்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2015-16)
மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி
தொடங்குகிறது.
அரசு பள்ளிகள் தரத்தை மேம்படுத்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு உத்தரவு
அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும்
செயல்பாட்டில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
விரிவுரையாளர்கள் ஈடுபட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
இன்று எம்.பி.பி.எஸ்., 'ரேண்டம்' எண் வெளியீடு
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம் எண்' இன்று
வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், ஓமந்துாரார் அரசு மருத்துவக்
கல்லுாரியையும் சேர்த்து, 20 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல்
மருத்துவ கல்லுாரி உள்ளன. 2,655 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்.,
இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் போக, மற்ற
இடங்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், கலந்தாய்வு நடத்தி மாணவரை சேர்க்க
உள்ளது. இதற்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வரும் 15ல் இன்ஜி., கவுன்சிலிங் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில்,
பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தொழிற்கல்வி மாணவர்களுக்கான
இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி, வரும், 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மாணவர்கள் கண்டுபிடித்த 'யுபிஎஸ்' மின்கலம்:மின்தடையிலும் வேலை செய்யும்
கோடையில் இனி மின்வெட்டுக்கு பஞ்சமிருக்காது
என மனம் பதறும் வேளையில் எளிய விலைகுறைந்த யு.பி.எஸ்.,
கண்டுபிடித்துள்ளனர் மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும்
தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள்.
ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிட கோரிக்கை.
ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு முடிவின் போது மதிப்பெண்களையும் வெளியிட ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
CCE முறையின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
எல்ஐசியில் 679 வளர்ச்சி அதிகாரி பணி.
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தென் மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 679 Apprentice Development Officers (ADOs) பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் 2,350 பள்ளி செல்லா குழந்தைகள்; அதில் 957 பேர் குழந்தை தொழிலாளர்கள்.
சென்னை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தை தொழிலாளர் மீட்பு குழு ஆகியோர் நடத்திய ஆய்வில், 2,350 குழந்தைகள், பள்ளி
செல்லா குழந்தைகள் என, கண்டறியப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ் ரேண்டம் எண் நாளை வெளியாகிறது: தரவரிசைப் பட்டியல் தாமதம்
தமிழகத்தில்
எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு 35 ஆயிரம்
மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வழக்கம் போல இந்த வருடமும் எம்.பி.பி.எஸ்
படிப்புக்கு கடுமையான போட்டி ஏற்படும் சூழல் உள்ளது.
கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 மாணவியின் விடைத்தாள் மாறியது: தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி
கிருஷ்ணகிரியை
சேர்ந்தவர் கவிதாமணி. இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா மேல்
நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்–2 பொது
தேர்வை எழுதினார்.
நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு
தொடக்கக் கல்வி - உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் 31.12.2009 முடிய பணி மாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு - திருத்தம் அளித்தல் - சார்பான இயக்குனரின் உத்தரவு
அவரவர் வழக்குகள் பட்டியலை வழக்கறிஞர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் நவீன சேவைவிரைவில் அறிமுகம்
வழக்கறிஞர்களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் பட்டி யலை
எஸ்எம்எஸ்மூலம் அனுப்பும் நவீன வசதி தமிழகம் முழுவ தும் விரைவில்
அறிமுகப்படுத்தப் படுகிறது. இதற்கான பணியை தேசிய தகவல் மையம் முழு வீச்சில்
மேற்கொண்டு வருகிறது
.
Lab Assistant Exam நாங்கள் நடத்தவில்லை - TNPSC அறிக்கை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பிரதமர் நரேந்திர மோடி பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?
பிரதமர் நரேந்திர மோடி
கடந்த மே
மாதம் 9-ம்
தேதி அறிமுகப்படுத்திய
சமூக பாதுகாப்புத்
திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா.
இந்தத் திட்டம்
ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.
பழைய வாக்காளர்களுக்கும் வண்ண ஸ்மார்ட் கார்டு
பழைய வாக்காளர்களுக்கும் வண்ணமயமான 'ஸ்மார்ட் கார்டு' வழங்க
தேர்தல் ஆணையம்
நடவடிக்கை எடுத்துள்ளது.ஜன.,5 முதல் வாக்காளர்களுக்கு'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான அடையாள
அட்டை வழங்கப்படுகிறது.
இவற்றில் உள்ள
'பார் கோடில்'
வாக்காளரின் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த அட்டை
குஜராத் அகமதாபாத்தில்
தயாரிக்கப்படுகிறது.
மழலையர் முன்பருவ கல்வி.வரைவு வழிகாட்டுதல்.வெளியீடு
மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான
(பிளே ஸ்கூல்)
வரைவு வழிகாட்டுதலை
தமிழக அரசு
வெளியிட்டுள்ளது. ஒன்றரை வயது நிறைவு செய்த
குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட
பல்வேறு கட்டுப்பாடுகள்
இதில் வகுக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளுக்கு 'சோலார்' விளக்குகள்:பொன்ராஜ் தகவல்
ராமேஸ்வரம்:“ராமேஸ்வரம் தீவில் உள்ள 22 அரசு பள்ளிக்கு, ஒரு கோடி ரூபாய்
செலவில் சோலார் மின் விளக்கு பொருத்தப்பட உள்ளது,” என அறிவியல் ஆலோசகர்
பொன்ராஜ் தெரிவித்தார்.
தட்டச்சு தேர்வு முடிவு வெளியிடாமல் அதிகாரிகள் அலட்சியம்:தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் மீது புகார்
திருச்சி:'தமிழகத்தில், பிப்ரவரி மாதம் நடந்த தட்டச்சு தேர்வு, மறு
கூட்டல் முடிவு வெளியாவதில் காலதாமதம், வணிகவியல் பள்ளிகள் ஆசிரியர்
பயிற்சி மையம் அமைவதில் முறைகேடு நடந்துள்ளது' என, தமிழ்நாடு வணிகவியல்
பள்ளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
நிலுவை வழக்குகளால்தள்ளாடும் கல்வித்துறை:சட்ட அலுவலர் அவசியம்
கல்வித்துறையில் சட்ட நுணுக்கம் தெரிந்தோர்
இல்லாததால் ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால்
மற்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிருப்தியில் ஆர்.எம்.எஸ்.ஏ., ஆசிரியர்கள்
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி
திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு சம்பளம்
கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் அதிருப்தியில் உள்ளனர்.கல்வித்
துறைக்கு உட்பட்ட இத்திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். மத்திய,
மாநில அரசுகளின் பங்களிப்பு நிதி மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.