Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சமச்சீர் பாடத்திட்டத்தை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் ஆய்வில் பரிந்துரை
சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம்
குறைந்துள்ளது. எனவே, இந்தப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தும் வகையில்
முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமச்சீர்
பாடத்திட்டத்தின் தாக்கம் தொடர்பாக டான் பாஸ்கோ கல்வி, ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி மையம் மற்றும் டேலன்ட்ஈஸ் ஆகிய அமைப்புகள் சார்பாக ஆய்வு
நடத்தப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர்களுக்கு பவானிசாகர் பயிற்சி
தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி - பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்கள் விவரம்
5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது
31.07 க்குள் 5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது- தொடக்கக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் (த.அ.உ) பதில்
2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்?
FLASH NEWS : 2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.
ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் BRT கட்டாய இடமாறுதல்!
ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய இடமாறுதல்; அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி
BRT சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…….
ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கும் முன் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு கலந்தாய்வு, சொந்த ஒன்றியத்தில் / சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…….
6.25 லட்சம் பேர் எழுத உள்ளகுரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
6.25 லட்சம் பேர் எழுத உள்ளகுரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைய ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கவும்
பொதுத்துறை
வங்கி திட்டம் மூலம் ஓய்வூதியம்
பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் புதிய
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைய தங்களது
விவரங்களை ஜூன் 30ம் தேதிக்குள்
உரிய படிவத்தில் அளிக்க வேண்டும் என்றார்
மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது..
உடனடி தேர்வு 'ஹால் டிக்கெட்'
பத்தாம் வகுப்பு உடனடி தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்,'
தேர்வுத் துறை இணையதளத்தில் ெவளியிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொது
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக, வரும், 23ம் தேதியில் இருந்து, 30ம் தேதி வரை, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது.
2,846 காலி பணியிடங்களை நிரப்ப29ம் தேதி குரூப் 2 போட்டி தேர்வு
சென்னை:தமிழக அரசின், பல துறைகளில், குரூப் 2 நிலையில் காலியாக உள்ள, 2,846
இடங்களை நிரப்ப, வரும், 29ம் தேதி போட்டி தேர்வு நடக்கிறது. தகுதியான தேர்வர்களுக்கு,
டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், நேற்று,
'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: வரும், 29ம்
தேதி காலை, 'குரூப் 2ஏ' (நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள்) தேர்வு
நடக்கிறது. 2,846 பணியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதை,
6.25 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
கல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில்தமிழ்நாடு
கல்வி
மேம்பாடு நிலைப் பாட்டில் உள்ள முதல் 5நகரங் களில் தில்லி இடம் பெறவில்
லை. இந்த பட்டியலில் புதுச் சேரி முதலிடத்தை பெற்று இருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.
பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு!
தமிழகம்
முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும்
வகையில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30
வருடங்களாக ஒரே வகையான உணவு வழங்கப்பட்டு வருவதால் குழந்தைகளின் தற்கால
தேவைகள் மற்றும் விருப்பங்களின்
அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு மையங்களில் 13 வகையான
கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சறுக்கும் தமிழ்; சரியும் தேர்ச்சி விகிதம்; சிறப்பு கவனம் செலுத்தப்படுமா?
பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மற்ற பாடங்களை காட்டிலும்,
தமிழ் பாடத்தில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது,
வரும் கல்வியாண்டிலும் தொடராமல் இருக்க, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
பசங்களை படிக்க எழுப்பி விடுங்க; பெற்றோருக்கு காலை 5 மணிக்கு இனி போன் வரும்!
பசங்களை படிக்க எழுப்பி விடுங்க; பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு: காலை 5 மணிக்கு இனி போன் வரும்!
பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன? பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலர்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில்,
தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி
பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை
செயலர், சபிதா தெரிவித்தார்.சலசலப்பு:சமீபத்தில் நடந்து முடிந்த இரு பொதுத்
தேர்வுகளிலும், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது. வழக்கமாக, தேர்ச்சி
சதவீதம், 90க்குள் தான் இருக்கும்.
'கடை கடையாக' அலையும் பெற்றோர்:பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு
பிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்களின்
பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்கி அலைந்து வருகின்றனர்.ஜூன் 16 முதல் பிளஸ் 1
வகுப்புகள் துவங்கின. வகுப்புகள் துவங்கிய நாளிலேயே அரசு பள்ளிகளில்
மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க கல்வித் துறை நடவடிக்கை
எடுத்தது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: தேர்வர்கள் கவனத்திற்கு..
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் அதற்கான
விண்ணப்பத்தை தனித்தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். நடப்பு
கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி
தனித்தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்து பாடங்களையும் எழுத உள்ளவர்கள்),
ஏற்கனவே 2012க்கு முன் பழைய பாடத்திட்டத்தில் எழுதி, அறிவியல் பாடத்தில்
தோல்வியுற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பெயர் பதிவு
செய்திராத, தனித்தேர்வர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில்
சேர பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
குழப்பங்களை தவிர்க்க இணையதளத்தில் கலந்தாய்வு அழைப்பு கடிதம்
சென்டாக் கவுன்சிலிங்கிற்கான அழைப்பு கடிதத்தை
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி
சேர்க்கைக்கான கவுன்சிலிங், புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில்
உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடக்க உள்ளது. முதல் கட்டமாக, எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ். படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 24ம் தேதி துவங்கி இரண்டு
நாட்கள் நடக்கிறது.
"சிறிய கடி பெரிய அச்சுறுத்தல்" - வருமுன் பாதுகாத்தல் சார்பாக இயக்குனர் அறிவுரை
தொடக்கக் கல்வி - உலக சுகாதார நாள் "04.04.2014" - "சிறிய கடி பெரிய அச்சுறுத்தல்" சிறு உயிரினம் மூலம் ஏற்படும் திசையன் எலும்பு நோய் (Vector Bone Disease) வருமுன் பாதுகாத்தல் சார்பாக இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு
HIVஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எந்தவித வேறுபாடின்றி நடத்திட உத்தரவு
தொடக்கக் கல்வி - உச்சநீதிமன்ற உத்தரவின் படி HIVஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எந்தவித வேறுபாடின்றி நடத்திட உத்தரவு
மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்-TNPTF
நடுநிலைப்பள்ளிகளில் தேவைப்பட்டியலில் உள்ள பட்டதாரி காலிப்பணியிடங்களை பதவி உயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற திங்கள்கிழமை மாவட்ட அளவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்க உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.
TNPSC VAO Official Answer Key Download (Exam Date:14.06.2014)
TNPSC VAO Exam Official Tentative Key Answer Download Now Available.
(Direct & Own Link is Available)
இம்மாதம் 14/06/2013 அன்று நடைபெற்ற VAO விற்கான விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது.