தமிழ்நாட்டில்
19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2555 எம்.பி.பி.எஸ். இடங்கள்
உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
அரசு ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு நிரப்பப்பட்டன.
அரசு
பள்ளிகளில் படித்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் தொழில்கல்வி படிப்புகளில்
சேருவதற்கு 185-க்கு மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 5
பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
சென்னையில்
மேலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த
கல்லூரியில் 2015-2016ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களது
படிப்பில் இலகுத்தன்மையையே பெரிதும் விரும்புகின்றனர். மேலும் பலருக்கு
கல்லூரிக்கு சென்று வகுப்புகளில் கட்டாயமாக கலந்து கொண்டு படிப்பதற்கும்,
பின்னர் குறிப்பிட்ட நேரம் கழித்து வீட்டுக்கு வருவதற்கும் விருப்பம்
இல்லை. அவர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் வீட்டிலேயே அமர்ந்து படிப்பதையே
விரும்புகின்றனர்.
தொடக்க கல்வி பட்டய (டிடிஎட்) படிப்பு
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 26ம் தேதியும், முதலாண்டு
மாணவர்களுக்கு ஜூலை 7ம் தேதியும் தொடங்குகிறது. தொடக்க கல்வி பட்டயத்
தேர்வு (டிடிஎட்) ஜூன் 2வது வாரத்தில் நடக்கும் என்று ஏற்கனவே தேர்வுத்துறை
அறிவித்தது.ஜூன் மாதம் மேற்கண்ட தேர்வுகள் நடக்கும் போது டிஎன்பிஎஸ்சி
நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு நடக்க உள்ளது.
அதனால் டிடிஎட் தேர்வு எழுதுவோர் பாதிக்கப்படுவார்கள் என்றும், தேர்வுத் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்,
19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு, 15 சதவீதம்
போக, மீதம், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு
பல் மருத்துவக் கல்லுாரியில், 85 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 14ம் தேதி துவங்கியது.
பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த, 9ம் தேதி
வெளியானது. 8.21 லட்சம் பேர் தேர்வெழுதியதில், 7.44 லட்சம் பேர் தேர்ச்சி
பெற்றனர். 77 ஆயிரம் பேர், தோல்வி அடைந்தனர்.
எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் காலத்தில்,
பணி வாய்ப்புகளும் கூட, தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றங்களுக்கு
ஏற்ப, பெரியளவில் மாற்றமடைந்து வருகின்றன.
தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து சுயநிதி கல்வி
நிறுவனங்களிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசாணைப்படி இலவச
கல்வி வழங்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இலவச கல்வி
சேர்க்கையில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் விபரம் குறித்து, அனைத்து
பள்ளிகளிலும் வெளிப்படையாக, பலகைகளில் தவறாமல் எழுதி வைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, தஞ்சை கலெக்டர் சுப்பையனிடம், இந்து மக்கள் கட்சி
மாநில செயலாளர் கணேஷ்பாபு மனு அளித்தார்.
அரசு கலைக் கல்லூரியில் வரும் 30ம் தேதி
நடக்கும் உடனடித் தேர்வுக்கு மொத்தம் 154 பேர் விண்ணப்பித்துள்ளனர்; மறு
மதிப்பீட்டுக்கு 73 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
உலகின் தலை சிறந்த அறிவியல் மேதைகள் கணிதத்தில் பெரும் புலமை பெற்று
விளங்குகின்றனர். அறிவியலின் மகத்துவத்தைக் கணிதம் மூலமே நன்கு அறிய
முடியும். கணிதம் இல்லாத அறிவியல் சிந்தனை உடலற்ற உயிருக்குச் சமம்.
அப்படிப்பட்ட ஆற்றல் பெற்ற கணிதத்தை இன்று நாம் அனைத்து விதத்திலும்
பயன்படுத்துகிறோம்.
சமூக
அந்தஸ்து, கூடவே கைநிறைய சம்பளம் போன்ற அம்சங்களால் ஐ.ஏ.எஸ். பணி நோக்கி
இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். பி.இ, பி.டெக். முடித்துவிட்டுத் தகவல்
தொழில்நுட்ப நிறுவனங்களில் லட்சத்தைத் தொடக்கூடிய அளவுக்குச் சம்பளம்
வாங்கும் இளம் பொறியியல் பட்டதாரிகளும் தற்போது அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ்
தேர்வெழுத முன்வருகின்றனர்.
மூன்று வருட பட்டபடிப்பு முடித்தவர்களின்
சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கினை நடத்துபவர்களின் கருத்து 09.05.2014
அன்று மேன்மை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு
விசாரணைக்கு ஏற்கப்பட்டு அன்றைய தினம் UCG மற்றும் தமிழக அரசுக்கு
நோட்டீஸ் அனுப்ப மாண்புமிகு நீதியரசர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் (
21.05.14) புதன்கிழமை காலை 9 மணியளவில் சான்றிதழ் வழங்கும் பணி
தொடங்கவுள்ளது.அந்தந்த பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்ட
கல்வித் துறையால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்தில் உள்ள, அனைத்து
பள்ளிகளிலும், சுத்திகரிக்கப்பட்ட, குடிநீர் வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர்
நகராட்சி சார்பில், இரண்டு துவக்கப் பள்ளி, நான்கு நடுநிலை, ஒரு உயர்நிலை,
ஒரு மேல்நிலை என, மொத்தம், எட்டு பள்ளிகள் செயல்படுகின்றன.
தமிழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் தேர்தல் நடத்தை
விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
UPSC சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் கட்டமான Preliminary தேர்வு விரைவில்
நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பத்தை www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ
இணையதளம் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த இரணியல்,
பளுகல் அரசு மேல்நிலை பள்ளிகள், படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி
ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.
இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான
எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த
திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.)
தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.