Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் செயல்படும், கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், அந்தந்த பகுதிபல்கலைகளின் கீழ் இருந்தன. கடந்த, சிலஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்பட்டது. இந்தபல்கலையில், தற்போது வரை, துணை வேந்தரே, கல்வி, ஆட்சிமன்றம் மற்றும் நிதிக்குழுவின்பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அப்பல்கலையின், கல்விக்குழுவிற்கான உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உள்ளார்.
பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி - Special Article
பத்தாம்
வகுப்பில் முப்பருவக் கல்வி
26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப்
பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக்
குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும்
வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester
pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக்
கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு,
ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்.
இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்களும் நீக்கப்படும்” என அறிவித்தார்.
2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது : பள்ளிக் கல்வித் துறை
வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம்
வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த
கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை நீடிக்குமா, இல்லையா என்ற
குழப்பம் தாற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
12th Latest Study Material
- Star Office - Year Questions (2007-13) - Bethel MHr.S.S, Ambur, Vellore Dt. - English Medium
10th Revision Test Question
Revision Test Model Questions
- 3rd Revision Test Questions - 2014 | Krishnagiri Dt | Tamil Medium - English Medium
- 2nd Revision Test Questions - 2014 | Krishnagiri Dt | Tamil Medium - English Medium
12th Latest Study Material
- Chemistry - Public 1 Mark Q&A (2006-2013) - A.Thangamani,PGA,Jothi Vidhyalaya MHrSS, Elampillai, Salem - English Medium
10th Maths Model Question
Maths Study Material
- Maths - Model Test Question - Mr. M.Muthukumarasamy, Sri Ramakrishna Sarada HSS, Salem - Tamil Medium, English Medium
10th Latest Study Material
Social Science Study Material
- Important Questions - Mr. K. Santhosha Sabarish, B.T.Asst., GHS, Arangal Durgam - Tamil Medium
அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.
ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.
ஒபாமாவுக்கு பேஸ்புக் சவால்
பேஸ்புக்கில் நேற்றைய ‘ஹிட்’ அதன் நிறுவனர்
மார்க் ஜுக்கர் பெர்க் போட்டுள்ள ஸ்டேட்டஸ்தான். 3 லட்சம் லைக், 2 லட்சம்
கமெண்ட், 1 லட்சம் ஷேர் என பேராதரவு பெற்றுள்ளது. ஏன் இந்த ஏகபோக ஆதரவு
என்ற கேள்வி எழுகிறதா… காரணம் இதுதான். கோடானுகோடி பேஸ்புக்வாசிகளின்
நலனுக்காகவும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க
அரசுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார்.
தேர்தல் பணி - பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வர வேண்டியதில்லை, பகலில் வந்தால் போதும்: தேர்தல் ஆணையம்
"தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்
ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி
அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது
குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது:
தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு
ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி
அமர்த்தப்படுகின்றனர்.
கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் தவிர ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்: பிரவீன்குமார்
நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் ஊழியர்கள்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற
அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல்
அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
எஸ்.எம்.எஸ்-ல் வாக்காளர் விவரம் : தேர்தல் கமிஷன் ஏற்பாடு
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை,
எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்ளும் வசதியை, தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி
உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறிய விரும்புவோர்,
"ஞுணீடிஞி' என டைப் செய்து, "ஸ்பேஸ்' விட்டு, புகைப்படத்துடன் கூடிய
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணை, டைப் செய்து, 94441 23456 என்ற
எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டும்.