எஸ்.எம்.எஸ்., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்
வசதி, துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. ரயில்வே முன்பதிவு மையங்கள், ஆன்-லைன்,
ரயில்வே ஏஜன்சிகள், ஐ.ஆர்.சி.டி.சி., ஆகியவை மூலம், ரயில் டிக்கெட்டுகள்
முன்பதிவு செய்யப்படுகின்றன.
"அரசு சார்புள்ள மற்றும் தனியார் பல்கலைகள், தொலை நிலைக்
கல்வி படிப்பு மையங்களை, படிப்பு எல்லை அல்லது மாநிலத்திற்குள் மட்டுமே
நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டு
உள்ளது.
விண்வெளியில்
உள்ள நட்சத்திரக் கூட்டத்தில் கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தை மூன்று
கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதை இங்கிலாந்து மற்றும்
ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.
"மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து
பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமான
பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை.
இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்
சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது
இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள்
விற்பனையாவதும் இந்தியாவில்தான்.
ஏடிஎம்
அட்டையுடன் தொடர்புடைய எஸ்எம்எஸ் சேவைக்கு ஒரு காலாண்டுக்கு ரூ.15
கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி
அமல்படுத்தியுள்ளது.
ஆ)
மேற்குறிப்பிட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும் தனி
ஊதியம் ரூ.750 ஆண்டு உயர்வுக்கும் அகவிலைப்படிக்கும் ஓய்வூதியத்திற்கும்
கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
நல்லாசிரியர்
ராமசாமி, இவர் தன் கிராமத்தில் மட்டுமின்றி தனது சுற்று வட்டார
கிராமத்தில் உள்ள எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது
என்பதற்காக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார், பணம் சார்ந்த
இந்த உலகத்தில் குணம் சார்ந்து வாழும் அந்த பெரியவரின் கதை இது.
ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளன்று,
பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 5.5
லட்சம் முதல், 6 லட்சம் வரை உயரலாம் என, எதிர்பார்ப்பதாகவும், டி.ஆர்.பி.,
வட்டாரங்கள் தெரிவித்தன.
ரெயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்கங்களில் 10.26
லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம்
மிகப் பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.
புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட
இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட
இயக்குநராக பணிபுரிந்த திரு.முகமது அஸ்லாம், இ.ஆ.ப அவர்களை சிறுபான்ன்மை நலத்துறை ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் பள்ளி திறந்து ஒருமாதம்
கடந்த நிலையில் தொடக்க கல்வி அதிகாரிகள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய
பள்ளி நாட்களை திட்டமிடுவதில் மெத்தனம் காட்டுவதாக ஆசிரியர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு,
ஜூலை, இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. அம்பேத்கர் சட்ட
பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி,
கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
கலந்தாய்வு மூலம், கல்லூரிகளில் சேரும்,
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ,
மாணவியருக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு மற்றும் அரசு
நிர்ணயிக்கும் கட்டணம், அரசால் வழங்கப்படும்.
யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், கல்லூரி
விரிவுரையாளர் தகுதிக்கான தேசிய தகுதி தேர்வு (நெட்), சென்னையில், நாளை
நடக்கிறது. சென்னையில், 11 மையங்களில், 14 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள
உள்ளனர்.
தொடக்கக்
கல்வி - அனைத்து வகை தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில்
தமிழ்வழி / ஆங்கில வழியில் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின்
எண்ணிக்கை விவரம் கோரி உத்தரவு.
தொடக்கக்
கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு
கணக்குத்தாள் தொகுத்து வழங்குவது குறித்து அரசு தகவல் தொகுப்பு விவர மைய
அலுவலர்கள் மற்றும் அரசு தணிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவில்
ஆய்வுக்கூட்டம் 03.07.2013 அன்று காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில்
நடைபெறுகிறது.
ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான
ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள
கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில்,
அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு, அரசு
பரிசுத் தொகை, இன்று வரை வழங்கப்படவில்லை.
பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப்
பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பதவி உயர்வு
பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
"தமிழகத்தில், பி.எட்., படிப்பிற்கு, சர்வதேச
தரத்தில், பாடத் திட்டங்களை உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர், விசுவநாதன் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4
தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால்,
கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு மவுசு அதிகரித்துள்ளது.
உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர
வேண்டாமென, மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும், இதுதொடர்பாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து
எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித்
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம்
முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.