இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை சிடி
வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர்.
இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான, பாடத்தினை
இ-கன்டன்ட் என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த
திட்டமிட்டுள்ளனர்.
இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே
நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில்
நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல்
உருவாகியுள்ளது.
தொழில் கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நம் வாசகர்களின் மன உறுதியை சோதிக்கும் வகையில் இங்கு ஒரு செல்போன் Ringtone தரப்பட்டு உள்ளது. Download செய்து மனைவியின் Caller Ringtone ஆக வைத்து கொள்ளலாம். பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல....
முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக, 10ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் கோப்பு, இரு
வாரங்களாக, முதல்வர் அலுவலகத்தில் காத்திருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின
மாணவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், கல்வி கட்டணங்களை
உயர்த்தி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தால், 74
ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர் எனத தெரிவிக்கபப்ட்டுள்ளது.
வகுப்பறைகளுக்கே சென்று அரசு பள்ளி மாணவர்களுக்கு பல் நோய் சிகிச்சை
அளிக்க, சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே இடத்தில் சிகிச்சை
அளிக்கின்றனர். முடியாத பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கவும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கையில், கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள், பள்ளி மாணவியரிடம்
கண்ணியக் குறைவாக நடந்து கொள்வது தொடர்வதால், மாணவியரின் கல்வி
கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு,
கவுன்சிலிங் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட சம்பள கணக்கு
"சாப்ட்வேரில்" உள்ள குளறுபடியால், மூன்று மாதங்களாக ஓய்வுபெற்ற தலைமை
ஆசிரியர்கள் மற்றும் பலர் நிலுவை தொகையை பெற முடியாமல் தவித்து
வருகின்றனர்.