பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருவதாக நேற்று (செப்டம்பர் 19) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்கனக்ட் கட்டணங்களை வசூலிக்கும் பிரச்சனையில் டிராய் ஜியோவை ஆதரித்துள்ளதால், போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா அதிருப்தியில் உள்ளன.
சென்னை
குடிநீர் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில்
பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்
கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை காவிரி ஆற்றில் திருப்பதி ஜீயர் தலைமையில் மகாபுஷ்கர விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு செப்டம்பர் 20 ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி விரைவு ரயில்களில் பயணிகளின் பட்டியல் ஒட்டும் பணி விரைவில் நிறுத்தப்பட உள்ளது என ரயில்வே வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டையை
சேர்ந்த மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வினால் கடும்
மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள மாணவர்களுக்கு திரைப்பட பிரபலங்களை கொண்டு மனநல
ஆலோசனை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
'நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி
உதவியில், ௩,௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி
புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.