Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் - கோரிக்கை வலுக்கிறது.

       திருச்சியை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.திருச்சியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

பண்டிகை கால சிறப்புச் சலுகை: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

            ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ப்ரீபெய்டு- செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

        நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 
 

லுங்கி, நைட்டி அணிந்து வர பெற்றோருக்கு தடை

        டி.என்.பாளையம், டி: கோபி அருகே அரசு பள்ளி ஒன்றில், பெற்றோர் லுங்கி, நைட்டி அணிந்து வருவதற்கு தடை விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 
 

விடுமுறை நாட்களில்ஆசிரியர்களுக்கு பயிற்சி

          பள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது.பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
 

புதிய இலவச பஸ் பாஸ் ஆசிரியர்களுக்கு உத்தரவு

         சென்னை:வெள்ளத்தில் தொலைந்து போன மற்றும் சேதமான இலவச பஸ் பயண அட்டையை மாற்றி தர, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

        மிலாது நபி விடுமுறை காரணமாக, 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியிட திட்டம்: ஸ்மிருதி இரானி

     மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) அனைத்து பாட புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளுக்கு சாக்பீஸ் வாங்ககூட காசு தராத கர்நாடக அரசு! விடுமுறை அறிவிக்க ஆசிரியர்கள் திட்டம்

        சாக்பீஸ் வாங்க கூட பணம் ஒதுக்காத கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசு பள்ளிகளை மூன்று நாள் முழுவதுமாக அடைத்து போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 

10th Study Material - Science

ஆக்கம் : மீனா.சாமிநாதன் M.Sc.,B.Ed., பட்டதாரி ஆசிரியர். இரா.நவநீதகிருஷ்ணன் M.Sc.,B.Ed., பட்டதாரி ஆசிரியர்,

புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம்.

புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம். மாண்புமிகு  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.ந.சுப்பிரமணியன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் டாக்டா் சி.விஜயபாஸ்கா் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Padasalai's Article Published in Dinamalar

மிக்க நன்றி - நம் இணைய வழி செய்தி.. நேற்றைய கோவை தினமலர் நாளிதழ்களில் வந்துள்ளது.
 

TNTET தேர்வு நடைபெறாததால் அல்லல்படும் ஆசிரியர்கள்!

                              ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனைகளால் பணி பாதுகாப்பு இல்லாமல் ( 23-08-2010 --- 15-11-2016 ) சிக்கலில் தவித்துக் கொண்டுள்ள (பணியில் உள்ள) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு...

7 வது ஊதியக்குழு -குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் 7 வது ஊதியக்குழு நிர்ணயித்தது எப்படி?-

          காய்கறி, பால், எண்ணெய், எரிபொருள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடிப்படையில் 7 வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயித்துள்ளது.
 

கருவூலகத்தில் "இன்டர்நெட்' சேவை... முடக்கம் :ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

         முதுகுளத்தூர் கருவூலக அலுவல கத்தில் 15 நாள்களாக "இன்டர்நெட்' சேவை முடங்கியுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு டிச. மாதத்திற்குரிய சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

வருங்கால வைப்பு நிதி: செலவுக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

     வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவசரத் தேவைக்காக எடுக்கப்படும் பணம், எந்த நோக்கத்துக்காகச் செலவிடப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

      மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

மீலாது நபி: அரசு விடுமுறை 24-க்கு மாற்றம்; வங்கிகள் 4 நாள்கள் செயல்படாது

   மீலாது நபி டிசம்பர் 24-ஆம் தேதி வருவதையொட்டி, அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது என்று தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

மீலாது நபி: அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

       மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு வருகிற 24, 27 தேதிகளில் நடத்தப்பட இருந்த அனைத்துத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

 

நிவாரண நிதி: அரசு ஊழியர்கள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல்

        கருவூல 'சாப்ட்வேர்' குளறுபடியால் வெள்ள நிவாரண நிதிக்கு அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

ஐந்து மாவட்டங்களில்இல்லை விளையாட்டு விடுதிகள் வீணாகிறது மாணவர்கள் திறமை

         விருதுநகர் உட்பட ஐந்து மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் இல்லாததால், மாணவர்களை வெளி மாவட்டங்களில் தங்கி படிக்க வைக்க பெற்றோர் தயங்குகின்றனர். இதனால் மாணவர்களின் திறமைகள் வீணடிக்கப்படுகிறது.
 

4 மாவட்டங்களுக்கு தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை. வெளியீடு

       வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 29 முதல் தொடங்க உள்ளன. 

How to Deduct Chief Minister's Public Relief Fund Amount via Web Payroll?

         முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பள பணத்தை ஆன்லைன் சம்பள பில்லில் பிடிப்பது எப்படி? - விளக்கம்.
PDF Tutorial Steps Available. Now.

Flash News:மிலாது நபி விடுமுறை டிசம்பர் 24-தமிழக அரசு அறிவிப்பு.

மிலாது நபி விடுமுறை டிச23க்கு  பதில் டிசம்பர் 24 க்கு மாற்றம் தமிழகஅரசு அறிவிப்பு.

CPS news : உயர்நீதிமன்றம் உத்தரவு ..

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றதேனி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டப்பன், கற்பகவல்லி , சுகிர்தா மற்றும் புஷ்பம் ஆகியோர்மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஓய்வூதியம் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இம்மனுக்களை விசாரணை செய்த நீதியரசர். ராஜா இவர்களுக்கு 2 மாத காலத்தில் ஓய்வூதிய தொகை வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

தகவல்-திண்டுக்கல் எங்கெல்ஸ்.

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரைகிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரைகிளையில்வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive