தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு வந்தன. வேலூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
வெள்ளம் பாதித்த மாணவர்களுக்கு மீண்டும் இலவச புத்தகம், சீருடை
தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் இலவச பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், வேலுார், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை
சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழை நின்ற பிறகும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் வரும் 22-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.
ஒத்திவைக்கப்பட்ட பி.இ. தேர்வுகளுக்கு மறு தேதி: அண்ணா பல்கலை. அறிவிப்பு
தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விவரங்கள் பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் நடத்தப்படுவது எப்போது? பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்ப்பு
2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் எப்போது நடத்தப்படும் என்று பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு 'ஜாலி'
உ.பி.,யில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும், 'சத்' திருவிழா மிகவும் பிரபலம்.
7th CPC - மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7TH CPC TWO POSSIBLE FITMENT FORMULAE
The Pay Commission, if it followed the methods adopted by previous pay commissions to compute the increase to be recommended for revision of pay and allowances of government servants, minimum 40% increase can be recommended.
But According to the Medium-Term Expenditure Framework Statement tabled by Finance Minister Arun Jaitley in Parliament said
தலைமைஆசிரியர் திடீர் விடுமுறை வகுப்பறையின் பூட்டை உடைத்து பாடம் நடத்திய மாற்று ஆசிரியர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற் குட்பட்ட கஞ்சம்பட்டி அருகே உள்ள பொன்னேகவுண்ட னூரில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் மொத்தம் 11 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ஜெயலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். தினமும் தலைமை ஆசிரியரே வகுப்பறையை திறப்பது வழக்கம்.
FLASH NEWS : தொடர் மழை பாதிப்பு காரணமாக 3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு 22.11.2015 வரை தொடர் விடுமுறை
கனமழை காரணமாகவும், மழை வெள்ள நீர் வடிவதற்காகவும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 22 (22-11-2015) ஞாயிற்று கிழமை வரை விடுமுறை அறிவிப்பு.
TRB மூலம் (2012-2014) கணித பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றதை முறைபடுத்தி ஆணை வெளியீடு .
தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் அ.மே.நி.ப / அ.உ.பள்ளிகளில் கணித பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றதை முறைபடுத்தி ஆணை வெளியீடு
பள்ளி விடுமுறை தொடர்வது ஏன்?
மழை பாதிப்பு நீடிப்பதால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு, இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், மழை பாதிப்பு குறைந்த பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், எப்போது பள்ளி திறக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.
வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம் - அரசு ஊழியர்கள் முடிவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்று தலைமை செயலாளர் ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவு செயலாளர் ஆகியோருக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம் - இன்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளியை திறந்து வைக்கப்பட வேண்டும்
18-11-2015 வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இன்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளியை திறந்து வைக்கப்பட வேண்டும். அனைத்து AEEO /AAEEO's 10 முதல்15 பள்ளிகளை பார்வையிட்டு/ஆய்வு செய்து நாளை மாலை DEEO அவர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.
படிக்க உதவுங்கள்: பள்ளிகள் எஸ்.எம்.எஸ்.,
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, டிசம்பர் முதல் வாரத்தில், அரையாண்டுத் தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டிச., 23க்குள், இரண்டாம் பருவத் தேர்வுகளை முடிக்கவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. ஆனால், பருவமழையின் தீவிரம் காரணமாக, 10 நாட்களாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதனால், குறிப்பிட்ட காலத்திற்குள், பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சத்துணவு பொருட்கள்பத்திரப்படுத்த உத்தரவு
தொடர் மழையால், சத்துணவு மையங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் பாதிக்காதவாறு, பத்திரப்படுத்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 42,970 பள்ளி சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியர் சாப்பிடுகின்றனர்; 97 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
ஐ.ஐ.டி., நுழைவு தேர்வுதேதி அறிவிப்பு
'உயர்கல்வி நிறுவனங்களில், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு டிச., 17ல் துவங்கும்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 30 வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர் நவம்பர் 30-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
35 பள்ளி கட்டடங்கள் ராமநாதபுரத்தில் இடிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த 35 பள்ளி கட்டடங்களை இடிக்கப்பட்டன.பழுதடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் படிக்கும் மாணவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்; அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பழுதடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டுமென, கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது.
7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை இந்த வாரத்திற்குள் தாக்கல்: 15 சதவீதம் சம்பளம் உயர வாய்ப்பு!!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
FLASH NEWS : தொடர் மழை காரணமாக 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (18/11/2015) விடுமுறை
- வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
- காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- சென்னை (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- திருவள்ளுர் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
FLASH NEWS : தொடர் மழை காரணமாக 3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (18/11/2015) விடுமுறை
- காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- சென்னை (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- திருவள்ளுர் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (18.11.15) உள்ளுர் விடுமுறை.
*விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது_மாவட்ட ஆட்சியர்.
*28.11.2015 ஈடு செய்யும் நாள்..
DA: 50% அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது: