ஐம்பெரும்காப்பியங்கள்
"பொருட் தொடர்நிலைச் செய்யுள்", காப்பியம் எனப்படும். காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்
முதல் அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம் (1951 ஜூன்): சமூகம் மற்றும்
கல்வி நிலையில் பின் தங்கியிருப்பவர்களின முன்னேற்த்திற்கான சிறப்பு
நடவடிக்கைகள் எடுப்பதை 39
ஆவது சட்டபிரிவு தடை செய்யாது.
தமிழகம்
முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் முதல்
வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிகள்
மேற்கொள்ள கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்ட தாரி ஆசிரியர்கள் கூடுத லாக 24,650 பேர்
தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கி
12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.
டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான
சான்று சரிபார்ப்பு இன்று தமிழகத்தில் 29 மையங்களில் நடக்கிறது. கடந்த
ஆண்டுக்கான டிஇடி தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில்
நடந்தது. இதையடுத்து பிப்ரவரி மாதம் மதிப்பெண்ணில் 5 சதவீதம் தளர்வு வழங்க
அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் சுமார் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று
சரிபார்ப்பதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட் டன.
நடப்பு கல்வி ஆண்டில், இலவச மற்றும் கட்டாய
கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட
ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு வசதியாக, தனியார் பள்ளிகளுக்கு, கடந்த ஆண்டு
தர வேண்டிய, 25 கோடி ரூபாய் நிலுவை தொகையை, தமிழக அரசே வழங்க முடிவு
செய்து உள்ளது.
மதுரையில்
மாணவர்களுக்கான வேலைவாய்ப்பக 'ஆன்லைன்' பதிவுகள் தொடர்பாக, ஏழு மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
ஆபாச வெப்சைட்களை முடக்கக் கோரியும், ஆபாச
படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த
வழக்கறிஞர் கமலேஷ் வஸ்வானி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அரசு வழங்கிய ரூ.1.32 கோடி கல்வி உதவித்
தொகையை, மாணவர்களுக்கு வழங்காமல், அதை அரசுக்கே சென்னை தொலைதூர கல்வி
நிறுவனம் திருப்பி அனுப்பியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் 44 நிகர் நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார்
பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு தர முடியாது என
தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
விண்ணப்ப படிவத்தில் பூர்த்திசெய்யப்பட வேண்டியவை பற்றிய மாதிரி... படங்களுடன்...
கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான
மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின்
முடிவு இன்று (மே 5 - திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.
GPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL PHONE NUMBER ஐ
பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது .
எனவே GPF சந்தாதார்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி
மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து
பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறைப்படி
பின்பற்றப்பட வில்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபற்றி
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்
ளனர்.
பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்
மாணவர்களின் வசதிக்காக 570 பொறியி யல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை
மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
அரசுக் கொள்கைகளால் தேசத்தின்
குடிமக்களுக்கு - குறிப்பாக வருங்காலத் தலைமுறையினருக்கு - இழைக்கப்பட்ட
மிகப் பெரிய வஞ்சனைகளைப் பட்டியலிட்டால், கல்வி கடைச்சரக்காக
மாற்றப்பட்டிருப்பது நிச்சயமாக அந்தப் பட்டியலில் இடம்பெறும். இதை
எதிர்த்து நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களின் பலனாக, கல்வி உரிமைச்
சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு,
குடும்ப நல நிதி வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு
கண்டனம் தெரிவித்துள்ளது. குடும்ப நல நிதியை 8 வாரத்துக்குள் வழங்க நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
அகில
இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது.
தமிழகத்தில், 22 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மத்திய சுகாதாரத் துறையின்
கீழ் இயங்கும், மருத்துவ பல்கலைகளில்,
15 சதவீதம் இடங்களை நிரப்புவதற்கு, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்
தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ பல்கலைகளில், 15 சதவீதம் இடங்கள் மூலம்,
3,000 எம்.பி.பி.எஸ்.,
மற்றும், 250 பி.டி. எஸ்., இடங்கள், இந்த நுழைவுத்தேர்வு மூலம்
நிரம்புகிறது. நாடு முழுவதும், 50 நகரங்களில், 929 மையங்களில், 5.5 லட்சம்
மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில், சென்னையில் அமைக்கப்பட்டிருந்த,
35 தேர்வு மையங்களில், 22 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
சத்துணவு
மையங்களில், சுமார் 28 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல்
உள்ளதால், மாணவர்களுக்கு தரமான உணவினை, உரிய நேரத்திற்குள் வழங்க முடியாத
நிலை ஏற்பட்டுள்ளதாக சத்துணவு அமைப்பாளர்கள் அரசின் மீது குற்றம்
சாட்டியுள்ளனர். தமிழகத்தில் துவக்கப்பள்ளிகளில் 27,108 மையங்கள்,
உயர்நிலைப்பள்ளிகளில் 15,043 மையங்கள், தேசிய
குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளிகளில் 339 மையங்கள் உள்பட மொத்தம்
65,000 சத்துணவு மையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 220 நாள் மாணவர்களுக்கு
சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு மையங்களிலும், ஒரு அமைப்பாளர்,
ஒரு சமையலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 40
ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்காக பி.இ. விண்ணப்ப தேதியை நீட்டிப்பது தொடர்பாக
பரிசீலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம்
கூறினார்.
தேர்தலின் போது அரசு அலுவலர்களுக்கு மருத்துவ விடுப்புச் சான்று வழங்கியது
தொடர்பாக திருவாரூர் அரசு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 மையங்களில், பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளிவர உள்ளதால், வெளிநாடுகளில் உள்ள மருத்துவ
கல்லூரிகளில், "டாக்டர் சீட்' வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்யும்
புரோக்கர்கள் அதிகரித்து உள்ளனர்.
இந்தியா என்பது கிராமங்களின் தொகுப்புதான். இந்திய கிராமங்களைப் பற்றி
எழுதுவது என்றால், ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் எழுதலாம். அவ்வளவு
பொக்கிஷங்களை அவை புதைத்துவைத்திருக்கின்றன. எனினும், குஜராத்தின் மதாபரும்
தேசாரும் எதனாலோ திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசித்திரமான பொதுநல வழக்கொன்று
வந்தது. உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற
வேண்டுமென்று கோரப்பட்டது. மனுநீதிச் சோழன் பற்றிக் கூறப்படும் கதையிலுள்ள
சம்பவங்கள் தற்போதைய சட்டத்துக்கு ஒவ்வாதவை என்றும் கூறப்பட்டது. உயர்
நீதிமன்றம் அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது.
உண்மையிலேயே மனுநீதிச் சோழன் தனது மகனைக் கொல்ல உத்தரவிட்டது தற்போதைய
நீதிமன்ற நடைமுறையில் சாத்திய மில்லை. மன்னராட்சியில் நிர்வாகத்தையும்
நீதித் துறையையும் அரசன் ஒருவனே கையாண்டிருந்தாலும், தற்போதைய அரசமைப்புச்
சட்டப்படி நீதித் துறைக்கும், நிர்வாக இயந்திரத்துக்கும் அதிகாரப்
பங்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, நீதிபதியே விரும்பினாலும் தன்னுடைய
மகனுடைய வழக்கை அவர் விசாரிக்க முடியாது.
இரட்டைப்பட்ட
வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பிரபல
மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார்