பேச்சு வார்த்தையின் போது எழுத்துப் பூர்வமாக அரசு எந்த உறுதியும் தராததால் நர்சுகளின் போராட்டம் நேற்று ஐந்தாவது நாளாக நீடித்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டு முறை
பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் இந்திய
குடியரசு கட்சி எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் வலியுறுத்தினார்.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தொழில்வரி
உயர்த்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆணையாளர் சித்ரா வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அரசு பணி வேண்டி, 90 லட்சத்து, 13 ஆயிரத்து, 163 பேர்,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
ஆதார் அடையாள அட்டை, தபால் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால்,
இணைய தளம் வாயிலாக, ஆதார் அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,' என,
திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி செல்ல இயலாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்க
மாநிலம் முழுவதும் 400 பகல் நேர பாதுகாப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று(
03.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர்,
வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றது.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
வெளிநடப்பு செய்தார்.சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது ஆசிரியர்
தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர்
கிருஷ்ணசாமி பேசினார்.
பிராண முத்திரை :
பயிற்சி மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம்.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் அருகே வினோபா பவே
நகரில் உள்ள காஷ்மிர் வித்யா மந்திர் என்ற பள்ளி உள்ளது. இங்கு படித்து
வந்த 7ஆம் வகுப்பு மாணவன் மீது ஓழுங்கினமாக நடந்துகொண்டதாக கூறி சிறுவனின்
பெற்றோரை அழைத்து பள்ளி நிர்வாகம் எச்சரித்து டிசி கொடுக்க முடிவு செய்தது.
ஆசிரியர் தகுதி தேர்வில் கல்வித் துறை
அரசாணையின்படி மதிப்பெண் தளர்வு வழங்க தாழ்த்தப்பட்டோர் ஆணையம் போன்று
மாற்றுத் திறனாளி ஆணையமும் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை
மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
வலியுறுத்தியுள்ளது.
தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 25
அம்ச கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை அணிந்து கொண்டு பணிபுரிவது
என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சிறந்த இன்ஜினியர்களை அளிப்பதில் வடஇந்திய
மாநிலங்கள் குறிப்பாக டில்லி மற்றும் பீகார் முன்னிலை வகிப்பதாக ஆய்வில்
கண்டறியப்பட்டு்ள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் கட்டட மற்றும் இதர
கட்டுமான பணியாளர்களின் நல வாரியம், கல்வி உதவித் திட்டத்திற்காக,
மேற்கூறிய பணியாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
குறிஞ்சாக் கீரையில் இருவகை உண்டு. சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான்.
சிறுகுறிஞ்சான் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத
மருத்துவங்களில் இதன் பயன்பாடு அதிகம். இது கொடி வகையைச் சார்ந்தது.
மரங்களில் கொடியாகப் படரும். கசப்புச் சுவை கொண்டதால் இதனை
பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.இதன் இலை, வேர் மருத்துவப் பயன்
கொண்டது.
பத்தாம்
வகுப்பு மாணவர்கள் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க
மனப்பாடப்பகுதி பாடல்கள் இனிமையான இசை மற்றும் ராகத்தில் பாடப்பட்டு ஆடியோ
சி.டி.க் களாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.
இந்திய ஆட்சிப் பணிக்கு இணையாக பொறியாளர்கள் அரசுத் துறையில் உயர் பதவியை
அடைய, ஐ.இ.எஸ்.(Indian engineering service) தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை யு.பி.எஸ்.சி. நடத்துகிறது. மூன்று நாட்கள்
நடக்கும் இத்தேர்வில், எழுத்துத் தேர்வில் 1,000 மதிப்பெண்களும், நேர்முகத்
தேர்வில் 200 மதிப்பெண்களும் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்
அளிக்கப்படுகின்றன. மொத்தம் 5 தாள்கள். இத்தேர்வை சிவில், மெக்கானிக்கல்,
எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்களும் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்டு
டெலிகம்யூனிகேஷன் இன்ஜினீயர்களும் எழுதலாம்.
2005-க்கு முன்னர் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை
மாற்றி புதிய நோட்டுகள் வழங்கும் ரிசர்வ் வங்கியின் திட்டத்தால், தங்கம்
விலை கணிசமாக உயரக்கூடும் என வர்த்தகத் துறையில்
இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பணிபுரியும்
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் புதியதாக நியமனம் செய்யப்பட உள்ள பட்டதாரி
ஆசிரியர்களால் எதிர்ப்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த
மாணவிக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்த தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம்
உத்தரவு.இதுகுறித்து கூறப்படுவதாவது: திருச்சி கிராபோர்டு ரெயில்வே
குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாஜூதாபர்வீன்(வயது 33). இவர், மதுரை
ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:
கணினி பட்டதாரி ஆசிரியர்கள், தொடர்ந்து பணி
வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக,
தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும், ஆசிரியர்களிடையே குழப்பம்
நிலவுகிறது. இதையடுத்து, வரும் 2ம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்த
முடிவுசெய்துள்ளனர்.
பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு வழங்கப்படும்
எண்கள் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இதனால், காப்பியடித்தல்,
விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடு தடுக்கப்படும்,'' என, முதன்மை கல்வி
அலுவலர் ஆனந்தி தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவ,
மாணவியருக்கான செய்முறை (பிராக்டிகல்) தேர்வு, வரும் 6ம் தேதி
துவங்குகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் விவேகானந்தா
வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்தது.
மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம்
செலவழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உத்தர பிரதேச
முதல்வர், அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். உத்தர பிரதேசத்தில், மதிய உணவு
நேர இடைவேளையில், அதிகாரிகள் பலர் வீட்டுக்கு சென்று விடுவதாக, புகார்
வந்தது.
அரசு பணியிடங்களை நிரப்புவதில், தாமதம்
ஏற்படுவது ஏன்' என, தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் விளக்கமளித்து
உள்ளார். மதுரை, அமெரிக்கன் கல்லூரியில், மாணவர்களுக்கு,
வேலைவாய்ப்புக்கான, வழிகாட்டுதல் குறித்த, கருத்தரங்கு நடந்தது.
மாநிலம் முழுவதும் செயல்படும், உயர்நிலை,
ல்நிலைப்பள்ளிகளில் முதுகலை மற்றும் பட்டதாரி தமிழாசிரியர்களின்
பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், இப்பாடத்தில் தேர்ச்சி விகிதம்
குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தகுதிதேர்வில் சலுகை கோரி வழக்கு...
2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014)
வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது.
தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100%
அகவிலைப்படி பெறுவார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice
& Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும்
பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...
2014-ம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும்
கணினிமயாமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் கேள்விக்கு
சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
4 ஆண்டுகளை, பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 90% பேர்
கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள்: இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது
யுனெஸ்கோ கடும் விமர்சனம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி
உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு
அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்.
புதுடில்லி:
இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில்,
மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி
மற்றும் வேலைவாய்ப்பில், இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதர
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள்
இடம்பெற்றுள்ளன.