எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2014
அன்று நடைபெறவிருந்த தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015
சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி திட்டத்தில் புதுமையை ஏற்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில்
"ஸ்மார்ட்' வகுப்பறை உருவாக்குவது குறித்து
பரிசீலிக்கப்படுகிறது.பள்ளிகளில் கற்றல் - கற்பித்தலில் புதுமையை
ஏற்படுத்தவும், மாணவர்கள் படிக்கும் சூழலை மாற்றும் வகையில் தொழில்நுட்பம்
நிறைந்த வகுப்பறைகளை உருவாக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை
உடனே நிரப்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர்
வெளியிட்ட அறிக்கை:-
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதில் மாற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை,
மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது. பரமக்குடி அருகே
பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில்
பிளஸ் 2 படிக்கிறார்.
இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 20 லட்சம் பேர் வரை
எழுத உள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் 11 லட்சம் பேரும், பிளஸ் 2
தேர்வில் 9 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த முழுமையான
விவரங்கள் சில நாள்களில் கிடைக்கும் என தேர்வுத்துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த
அக்டோபர் மாதத்தில் எம்.பில் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவிகளுக்கான
தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.
வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
இருபது ஆண்டுகளுக்கு பின், வரும், 2015ம் ஆண்டு, ஜனவரி முதல், மீண்டும் ஒரு
ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. இதுகுறித்து, 'ஒரு ரூபாய் கரன்சி நோட்டுகள் அச்சடிப்பு
விதிகள், 2015' என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் நோட்டு
அச்சடிக்க ஆகும் செலவு அதிகரித்ததாலும், அப்பணிக்கு நிகராக, அதிக
மதிப்புள்ள கரன்சிகளை கூடுதலாக அச்சிடலாம் என, 1994ம் ஆண்டு, மத்திய அரசு
முடிவு செய்தது.
JANUARY
1(Thu)- Vaigunda Egadesi
5(Mon)-Arudthra Darisanam
14(Wed)-Bohi
31(Sat)-Giarveen Mugaideen Abdul Kadhar
Half Yearly Exam Question Paper & Answer Key Download:
சார்
(SAR)
Specific Absorption Rate எனப்படும் மேற்கண்ட அளவானது மனித உடலால் (உடலின் பாகங்களால்)
உட்கிரகிக்கப்படும் கதிரியக்கத்தின் அளவினைக் குறிக்கும். செல்போன்கள் நம் கண்களுக்கு
புலப்படாத ரேடியா அலைகளால் நம் பேச்சு மற்றும் தகவல்களை பெறுகிறது என முன்னரே பார்த்தோம்.
இளையோர் - மூத்தோர் ஊதிய விகிதம் RTI குறித்த தகவல்கள் - Click Here
தமிழக அரசு ஊழியர்களின் பணித்திறனை
(Performance) மதிப்பிடுவது எந்தவொரு துறையிலும் நடைமுறையில் இல்லை. பணி
நியமனம் செய்வது போட்டித்தேர்வின் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு பதிவு
மூப்பின்படியோ நியமிக்கப்படுகிறார்கள்.
கோவை மாநகராட்சி கல்வி அதிகாரிகளுக்கும்,
உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், என்.எம்.எம்.எஸ்., தேர்வு
குறித்த விழிப்புணர்வு இன்மையால், 23 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள்
ஒருவரும் பங்கேற்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில்,
சேர்க்கைக்கான தேர்வில் கலந்துகொள்ள, வீரர், வீராங்கனைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் திறன் மேம்படுத்தல் தொழில்
முயல்வோர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையில்,
இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் உதவியுடன் செயல்படுகிறது. பயிற்சி மையத்தில், கூடுதல்
வசதியுடன், விஞ்ஞான பூர்வமான பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு
வீரர்களின் தரத்தை உயர்த்துகிறது.
நமது உடம்பை ஆரோகியமாக வைத்திருக்க
நடைப்பயிற்சி முக்கியம். இந்த நடை பயிற்சியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்
என்று சிலருக்கு கேள்விகள் எழும்பும். அவர்கள் கவனிக்க வேண்டியவை:
தனியார் இ-மெயில் சேவைகளை அலுவலகப் பணிகளுக்கு
உபயோகப்படுத்த வேண்டாம் என்று அரசுத் துறைகள், அமைச்சர்களை மத்திய தகவல்
தொடர்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரபலமான சில தனியார்
இ-மெயில் சேவைகளில் பகிரப்படும் முக்கியத் தகவல்கள், ரகசியங்கள் வெளியே
கசிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக தொற்று குறித்து விளக்கும், பெண்கள்
சிறப்பு மருத்துவர் டாக்டர் கலைவாணி ராமலிங்கம்: 'இகோலை' என்ற கிருமிகள்,
எப்போதுமே குடலில் இருக்கும். சிறுநீர்ப் பாதையில் சுத்தமின்மை, தண்ணீர்
போதிய அளவு குடிக்கவில்லை என்றால், அந்தக் கிருமிகள், கிட்னிக்கு உள்ளே
போகிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுகாதாரம் சரியில்லாத காரணத்தால்,
பெண்கள், சிறுமியர் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதால், 'யூரின் இன்பெக்ஷன்'
ஏற்படுகிறது.
ஆசிரியையின்
வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன்
மூலம் ரூ.43 ஆயிரம் சுருட்டியது
தொடர்பான புகாரை வாங்க மறுத்து,
கேளம்பாக்கம் போலீசார் அலைக்கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
மனிதர்கள் யாரும் என்ன நினைத்தாலும் தப்ப முடியாதது முதுமைதான். ஆண்டொன்று
போனால் நிச்சயமாக வயது ஒன்று போய்விடும். அதேபோல இளமையில் மேற்கொள்ளும்
உடல் உழைப்பு போல முதுமையில் உழைக்க முடியாது. வயதுக்கு ஏற்றபடி உடலில் பல
உடல் நலக்குறைவுகள் ஏற்படும். ஆக முதுமையில் உழைத்து வருமானம் ஈட்டவும்
முடியாது.
லோக்பால், லோக் ஆயுக்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள்
தங்களின் சொத்து விவரங்களை கட்டாயமாகத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி
வரை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, தற்போது அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல்
30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர்
துறை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.
‘நான் ஒரு கோமாளி..
இருபது வருடங்களாக குழந்தைகள் கொடுத்த காசில் சாப்பிட்டது எனக்கு கடவுள்
கொடுத்த வரம். இந்த பாக்கியம் யாருக்கும் கிடைத்துவிடாது’’ கண்கள் நனைய
பேசுகிறார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் வேலு சரவணன்.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள உளவியல் ஆலோசனை
மையத்தில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே ஆண், பெண் என 2 உளவியல்
நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளி
மாணவர்களின் மனஅழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும்
வகையில், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ‘நடமாடும் உளவியல் ஆலோசனை
மையங்கள்‘ தொடங்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
2014-ம் ஆண்டிற்கான உலகி்ன் சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய
விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. லண்டனில் இருந்து
வெளிவரும் நேச்சர் எனப்படும் அறிவியல் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல்
10 இடங்களை பெறும் விஞ்ஞானிகளை பட்டியலிட்டு வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
Maths Study Material
- Maths Group Test Questions | B. Mohan Kumar (English Medium) - Click Here
- Maths Model Test Questions | B. Mohan Kumar (English Medium) - Click Here