Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -:25.03.2024
வில்லியம் கோல்கேட் |
பால்: பொருட்பால்.
அதிகாரம்: இறைமாட்சி.
குறள்:383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.
விளக்கம்:
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
Sadness and gladness succeed eash other
வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.
பொன்மொழி :
புத்தகம் இல்லாத வீடும், ஜன்னல் இல்லாத வீடும் ஒன்றே .
- சிங்சௌ .
பொது அறிவு :
1. உலோகங்களின் இராஜா என்றழைக்கப்படும் உலோகம் எது?
இரும்பு.
2. எந்த ஒரு அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது?
பிளாட்டினம்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
புளித்த கீரை :புளித்த கீரையில் கொழுப்புச் சத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதால், இது இருதய வாஸ்குலர் நோய்களை தடுக்கிறது. புளித்த கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன
மார்ச் 25
நீதிக்கதை
புதையல் ரகசியம்
ஒரு ஊரில் ஒரு வயதான விவசாயி இருந்தார். அவரது மகன்களோ விவசாயத்தில் ஆர்வமின்றி இருந்தனர். தனக்குப் பிறகு அவர்கள் சம்பாத்தியம் இல்லாமல் துன்பப் படுவார்களே என அவர் கவலைப்பட்டார்.
ஒரு தந்திரம் வகுத்தார். இறக்கும் தருவாயில் இருந்த போது அவர்களை அழைத்தார். வயலில் தான் மிகம் பெரும் புதையலைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்.
அவர் இறந்த பின்னர் அவர்கள் மண்வெட்டி கடப்பாரைகளை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்று ஆழமாகத் தோண்டினர். அவர்களுக்குப் புதையல் கிடைக்க வில்லை. ஆனால் மண் நன்கு பண்படுத்தப்பட்டதால் அந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்பட்டு அதன் மூலம் நல்ல பணவரவு அவர்களுக்கு வந்தது.
நீதி: முன்னேறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை.
இன்றைய செய்திகள்