தமிழகத்தில்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10 பணியிடங்களும்,
மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் 65 பணியிடங்களும் பல மாதங்களாக
காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என
தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழகத்தில் எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.சென்னை, அசோக் நகர் பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு இலவச சைக்கிள்வழங்கும் விழா
வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
வருமான சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், சிறுபான்மைப் பிரிவு
பள்ளி மாணவர்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட், 15ம் தேதி வரை
கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை நடுக்கத்தில் ஆசிரியர்கள்.
'பள்ளிகளில் செயல்முறை, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றாவிட்டால்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தொடக்கக் கல்வித்துறை
எச்சரித்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 4 ம் வகுப்பு
வரை செயல்வழி கல்விமுறை செயல்படுத்தப்பட்டது.
பள்ளி கல்வித்துறை மீது கலை ஆசிரியர்கள் புகார்.
இடமாறுதல் "கவுன்சிலிங்' உத்தரவில், ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை
பழிவாங்குவதாக, கலை ஆசிரியர் நலச்சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலை உடனடித் தேர்வு முடிவு வெளியீடு.
சென்னை பல்கலை பட்டப்படிப்புக்கான உடனடித் தேர்வு முடிவுகள், இன்று
வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, சென்னைப் பல்கலை வெளியிட்ட அறிவிப்பில்,
'இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு, ஜூலையில் நடந்த உடனடித் தேர்வு
முடிவுகள், இன்று, results.unom.ac.in/, www.unom.ac.in என்ற பல்கலை
இணையதளத்தில் வெளியிடப்படும்' என, கூறப்பட்டுள்ளது.
இறப்பு சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
உறவினர்கள் இறப்பு சான்றிதழ் அளித்தால் மட்டுமே இறந்தவர்கள் பெயரை
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிக்காக ரூ 233 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி
பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு, மிதிவண்டிகள் வழங்க 233 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் 12 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேஸ்புக்கை அதிக நேரம் பயன்படுத்துபவரா நீங்கள்?: பகீர் தகவல்.
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற பகீர்
தகவல் வெளியாகி உள்ளது.
Controversy RTI Letters About Vinayaga Mission Studies
Vinayaga Mission Studies:
- Yes (11.3.2014) | Vinayaga Mission University Studies Department Permission - RTI Letter
- Yes (16.6.2015) | Vinayaga Mission University Studies Eligible to Promotion - Court Judgement Copy
- Yes (25.3.2015) | Vinayaga Mission University MPhil Eligible to Incentive - RTI Letter
- Yes (18.1.2012) | Vinayaga Mission UGC Approved copy & DSE Auditor PDF Download Letter - RTI Letter Download
- No (10.7.2015) | Vinayga Mission Studies Not eligible to Promotion & Incentive - RTI Letter
- No (30.1.2015) | Vinayaga Mission M.Phil Not eligible to get incentive (Elementry Education) - RTI Letter Download
- No (27.10.2014) | Vinayaga Mission M.Phil Not eligible to get incentive (Secondary Education) - RTI Letter Download
- No (12.10.2012) | Vinayaga Mission University – M.Phil Not Eligible to Promotion or Incentive - RTI Letter
கலந்தாய்வு கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு வலுக்கிறது வகுப்பை புறக்கணிக்க ஆசிரியர் சங்கங்கள் முடிவு.
கலந்தாய்வு மற்றும் நிர்வாக மாறுதல் நிபந்தனைகளை தளர்த்தாவிட்டால், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு
செய்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதம் நடக்கும் ஆசிரியர் பொது மாறுதல்
கலந்தாய்வு, இந்த ஆண்டு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், புதிய
விதிமுறைகள் கொண்ட அரசாணையை அரசு அறிவித்துள்ளது.
செவிலியர் பட்டயப் படிப்பு: 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்
செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
சுருக்கெழுத்தர் பணிக்கு 29-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
சுருக்கெழுத்தர் பணிக்கு ஜூலை 29-ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி 25ம் தேதி துவக்கம்
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் புத்தக படிப்பு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியரின் கற்பனை திறன், பிற திறமைகளை வளர்க்கும் வகையில், அனைவருக்கும்
கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
பட்டமளிப்பு விழாவில் இனி பட்டாடை 'நோ'.
கல்லுாரி, பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி துணிகளை பயன்படுத்த, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கைத்தறித் துணி
வர்த்தகத்தை அதிகப்படுத்த, புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சம் இடங்கள் காலி: வேலை இல்லாததால் ஆர்வம் குறைந்தது.
பிளஸ்–2 தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில்சேர வேண்டும்' என்ற ஆர்வம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.
வருடந்தோறும் லட்சக்கணக்கானோர் என்ஜினீயர் பட்டம் பெறுகிறார்கள்.
அரசு ஊழியர் கோரிக்கை நிறைவேறாவிடில் 2003 தேர்தலில் சந்தித்த விளைவு ஏற்படும்: அலுவலர் சங்கம் எச்சரிக்கை
“அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கடந்த 2003ல் சந்தித்த
விளைவை தான் அ.தி.மு.க., அரசு சந்திக்க நேரிடும்,” என சிவகங்கையில்
ஊரகவளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் என்.சேகர்
பேசினார்.
பள்ளி பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை
பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும்
தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி
இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளில் பாதுகாப்பற்ற, ஆபத்தான
பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என
தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஏற்கெனவே
அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் கற்றல்திறன் மாறுபாடு : கற்பிக்கும் முறையே காரணம் - காந்திகிராம பல்கலை ஆய்வு
ஆசிரியர்களின் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையால் மாணவர்களின்
கற்கும்திறன் மாறுபடுகிறது என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்தது.
மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து
காந்திகிராம பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் ஜாகிதாபேகம் ஆய்வு
மேற்கொண்டார். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான
கற்பிக்கும் முறையை கடைபிடிக்கின்றனர்.
ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தர பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு
மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை, பள்ளிகள்
மூலமே வாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில்,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டில், 6ம்
வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல
திட்டங்களுக்காக, ஜாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ்
கேட்கப்படுகின்றன.