1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
பழங்கால நாணயங்களை சேகரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்
கல்வித்துறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையில், கல்வியோடு
சேர்த்து மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு
தலைப்புகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில் பழங்கால நாணயங்களை
சேகரிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு கூடுதல்
மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட, தனியார் பள்ளி
ஆசிரியர்களை, நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், அடையாளம்
கண்டுள்ளனர்.
காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: வாலிபர் சாதனை
காற்று இல்லாமலே, காற்றாலையை இயக்கி
மின்சாரம் தயாரித்து செயல் வடிவம் காட்டியுள்ளார், பத்தாம் வகுப்பு வரை
மட்டுமே படித்துள்ள கிராமத்து வாலிபர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: இன்று அமைச்சரவை முடிவு - DINAMALAR
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 8
சதவீதம் உயர்த்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்ய உள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு
தொடர்பாக அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்
அகவிலைப்படி உயர்வை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த உள்ளது.
தொடக்க கல்வி பட்டயதேர்வு (D.El.Ed) விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கலாம்
Click Here 4 DOWNLOAD APPLICATION HERE...
"தொடக்க கல்வி பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்," என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்தார்.அகவிலைப்படி உயர்வு தாமதம், மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு
இது குறித்து மத்திய அரசு ஊழியர் மற்றும்
பணியாளர்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் திரு. K.K.N குட்டி அவர்கள்
அறிவித்துள்ள அறிக்கையில் 4வது ஊதிய குழு அறிவிப்பின் மூலம் 1986 முதல் 6
மாதத்திற்கு ஒரு முறை மார்ச் மற்றும் செப்டம்பரில் அகவிலைப்படி உயர்வுக்கான
அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்படும். இதை எக்காரணத்தை கொண்டும் இழக்க
நாங்கள் விரும்பவில்லை, எனினும் எந்தவித அறிவிப்பும் அரசிடம் இருந்து
வரவில்லை.
8% அகவிலைப் படி உயர்வு 22.04.2013 தேதிக்கு முன் அறிவிக்க வாய்ப்பில்லை என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 மாத
முதல் வழங்க வேண்டிய 8% அகவிலைப்படி உயர்வானது, மத்திய நிதி அமைச்சரின்
வருகைக்கு பின் அறிவிக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்
பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரை அழைத்து, நீ எதிர்காலத்தில் என்னவாக ஆக
விரும்புகிறாய் என்று கேட்டால், ஒன்று டாக்டர் அல்லது இன்ஜினியர் அல்லது
ஐ.ஏ.எஸ்., ஆகிய மூன்றில் ஏதேனுமொன்றை சொல்வார். இந்த மூன்றை தாண்டிதான்
வேறு அம்சங்களை பெரும்பாலான மாணவர்கள் சிந்திக்கிறார்கள்.
மாணவர்களுக்கு திருப்பூரில் கட்டுரை போட்டி
திருப்பூரில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவையொட்டி, மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!
1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.
2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.
2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை
அளிக்கப்படும் என சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படும்
எனவும், ஞாயிற்றுக்கிழமைக்கான உணவு கெட்டுப் போகாமல் சனிக்கிழமையன்றே
வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சிவன்மலையில் பென்சில் வைத்து பூஜை: பள்ளிக்கல்வி சிக்கலை சந்திக்குமா?
ஜூலை 1ல் வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் 8.8%ல் இருந்து 8.7%ஆக குறைப்பு
2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால
வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.