முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.
கல்வியே சிறந்த செல்வம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அது கொடுக்கக்
கொடுக்கக் குறைவுபடாhiதது; நெருப்பாலும், நீராலும் அழியாதது; திருடரால்
களவாடப்பட முடியாதது. "கல்வியா? செல்வமா? வீரமா?' என்ற கேள்விகளில் முதலில்
நிற்பது கல்வியே.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய 64 ஆவணங்களை மேற்கு வங்க காவல்துறை
வெளியிட்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள காவல் துறை அருங்காட்சியகத்தில்
நேதாஜி பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கான குறைந்த பட்ச
காப்பீட்டுத்தொகை 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
கடந்த 17 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்த கங்களை
வழங்கியும், அறநெறி வகுப்புகளை நடத்தியும் மாணவர் களிடையே
நற்கருத்துகளைப்போதிக்கும் பணியில் ஈடுபட்டுள் ளார் திருச்சியைச் சேர்ந்த
கரு.பேச்சிமுத்து (73).
திருச்சி திருவெறும்பூர் அருகே
யுள்ள குமரேசபுரத்தில் வசிக்கும் இவர், பெல் நிறுவனத்தில் முது நிலை
மேலாளராகப் பணியாற்றியவர்.
இந்தியாவில் 68 ஆயிரம் கிராமங்களை இணைக்கும் வகையில் 90 ஆயிரம் கிலோ
மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிழை குழாய் பாதை கட்டமைப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர்
பிரசாத் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர்
அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்'
பண்ணிக்கொள்வது நல்லது.அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை, 22ம் தேதி
(வியாழன்) விஜயதசமி, 23ம் தேதி (வௌளி) மொகரம், 24ம் தேதி (சனி), 25ம் தேதி
(ஞாயிறு) ஆகியவையே அந்த விடுமுறை நாட்கள்.ஒரே வாரத்தில் தொடர்ந்து 5
நாட்கள் விடுமுறை வருவதால் பல பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
புதுடில்லி:டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் கீழ் நியமிக்கப்பட்ட, 73
அதிகாரிகளின் நியமனம் குறித்த வழக்கின் தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல்
சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
சென்னை:'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு தாட்கோ மூலம்
ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்த திட்டங்களின் கீழ் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான, மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்), 20ம் தேதி நடக்கிறது; மூன்று லட்சம்
பேர் எழுதுகின்றனர்.
கல்வித்துறை
தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., எனப்படும், 'குளோஸ்டு
யூசர் குரூப்' முறையிலான, மொபைல்போன், 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக்
கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
திண்டுக்கல்:
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை
விழா (கலா உற்சவ்) போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும், அழிந்து
வரும் நாட்டுப்புறக் கலைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. போட்டிகள்இதற்காக, மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கலை விழா போட்டிகள்
நடத்தப்பட உள்ளன.
ஒருங்கிணைந்த
குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய
பரிந்துரைகள் குறித்து, நீதிமன்றத்துக்கு தெரிவிப்பதற்காக குழு அமைக்க
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தகர கொட்டகையில் செயல்படுவதால், மாணவர்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், ஏழு அரசு கல்லூரி, 14 அரசு
உதவி பெறும் கல்லூரிகள் உட்பட, 705 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவை,
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.
தமிழகத்தில்
அனைத்து சத்துணவு மையங்களும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு பெற அரசு
உத்தரவிட்டுள்ளது.சத்துணவு மையங்களில் விறகு அடுப்புகளால் சமையலர்,
உதவியாளர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படுவதாக
புகார் எழுந்தது. இதையடுத்து சத்துணவு மையங்களில் 'காஸ்' இணைப்பு
பெறப்பட்டு வருகிறது.
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர்
முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும்
மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம்
மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த
திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில்
பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 5
ஆண்டுகளுக்கு மேலாக 8184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணையை முதல்வர்
ஜெயலலிதா வழங்கினார்தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி
இருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் அமெரிக்காவிற்கு சுற்றுபயணம்
மேற்கொள்ள உள்ளார். அங்கு அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட முக்கிய அரசியல்
பிரபலங்களையும், முன்னணி தொழிலதிபர்களையும் சந்திக்க உள்ளார்.
ரூ.7½ லட்சம்
வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய
திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது.
மாணவர்களின்
படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக்
கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட
தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம்.
விநாயகர் சதுர்த்தியான இன்று வழிபாட்டில் தலையில் குட்டிக் கொண்டு
தோப்புக்கரணம் இடுவோம். இதற்கான காரணம் புராணத்தில் இடம் பெற்றுள்ளது.
ஒருமுறை அகத்தியர் கமண்டலத்துடன் வந்து கொண்டிருந்தார்.
முதல் பருவத் தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது
மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் என்பதால், தேர்வு முடிந்த பின்பு
பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி
வலியுறுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்புத் தனித்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு வருகிற 21 முதல் 23-ஆம் தேதி வரை அறிவியல் பாட செய்முறைத்
தேர்வு நடைபெற உள்ளது.
2014-15 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில்
முதல், இரண்டாம் மதிப்பெண் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு
முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர், பழங்குடியின கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக 10 புதிய
விடுதிகள் தொடங்கப்படும் என்று, அந்தத் துறையின் அமைச்சர்
என்.சுப்பிரமணியன் அறிவித்தார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிராக
தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சிபிஎஸ்இ (மத்திய பள்ளிக் கல்வி
வாரியம்) பள்ளி நிர்வாகிகளின் சங்கம் பதில் அளிக்க 2 வாரம் கூடுதல்
அவகாசத்தை உச்ச நீதிமன்றம் இன்று அளித்தது.
சமுதாய பிரச்னைகளுக்கு, கற்பனைத்திறனால், மாறுபட்ட கோணத்தில், பணிகளை
மேற்கொண்டு, தங்கள் திறனை தேசிய அளவில் கொண்டு செல்ல, ராகல்பாவி ஊராட்சி
ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.அரசு சார்ந்த மற்றும்
தனியார் தொண்டு நிறுவனங்கள் பலவற்றின் சார்பில், பள்ளி மாணவர்களின்
கற்பனைத்திறனை வளர்ப்பதற்கும், புதிய சிந்தனைகளை துாண்டும் விதமாகபள்ளி
மாணவர்களுக்குபல்வேறு போட்டிகளை நடத்துகிறது.
கொழுக்கட்டைக்கு மிகவும் முக்கியமானது அரிசிமாவு. இதை தயாரிக்கும் முறைப் பற்றி பார்ப்போமா?
இணையதளத்தின்
மூலமாக பொருள்களை வாங்குவதற்கான பிரத்யேக கடன் அட்டையை (simply click
credit card) புதன்கிழமை அறிமுகப்படுத்தியது பாரத ஸ்டேட் வங்கி.இதுகுறித்து
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாரத ஸ்டேட்
வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் ஜசுஜா கூறியதாவது:
பத்தாம்
வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள்,
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை வருகிற 19-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில்
'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பை
கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் குழு அமைப்பதில் அரசு மருத்துவமனைகளில்
தொய்வு உள்ளது.சுகாதார நலப்பணித்துறை மூலம் ஆரம்ப சுகாதார நிலையம்
செயல்படும் பகுதி வாரியாக 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தை மத்திய, மாநில அரசுகள்
அமல்படுத்தின.