Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் தேர்ச்சி குறைவு: தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு


           ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையும் பட்சத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அரசுச் செயலர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
 

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடுஅவகாசம் அளித்து கலெக்டர் உத்தரவு


          "பள்ளிகளில் சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள, 25 சதவீத இடஒதுக்கீடு படி, ஆதரவற்ற குழந்தைகளை சேர்க்க வரும், 20ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் கூறினார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 

பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு


 
 
           பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.

உதவிப் பேராசிரியர் தேர்வு நடைமுறையில் பிஎச்.டி. தகுதிக்கு முன்னுரிமை கூடாது


          ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையில் பிஎச்.டி. தகுதிக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என நெட், ஸ்லெட் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 

முதுகலை ஆசிரியர் தேர்வு: 82,000 விண்ணப்பம் விற்பனை


         முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்று முன்தினத்துடன், 82 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள்.

உருது மொழி மாணவர்கள் தமிழில் படித்து 100% தேர்ச்சி


          உருது மொழியை தாய்மொழியாக கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழில் படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

ஜெ.இ.இ., 2ம் கட்ட தேர்வு: தமிழகத்தில் 3,198 பேர் எழுதினர்


          ஜெ.இ.இ., இரண்டாம் கட்ட தேர்வில், தமிழகத்தில், 3,198 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவு, இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.

விண்வெளித் துறையில் சிறந்து விளங்கும் இந்தியா: இஸ்ரோ விஞ்ஞானி


         திருநெல்வேலியில் மத்திய அரசின் அறிவியல் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தின் விஞ்ஞானி இங்கர்சால் பங்கேற்றார்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்களில் கல்லூரி


        "முஸ்லிம்கள் அதிகமாக வாழும், 90 மாவட்டங்களில், கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும்; 10 சதவீதத்திற்கு அதிகமாக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில், கஸ்தூரிபாய் காந்தி மகளிர் பள்ளிகள் துவக்கப்பட வேண்டும்" என பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது.

ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வு: 69,400 பேர் எழுதினர்


        ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர, 14 முக்கிய நகரங்களில், 69 ஆயிரத்து, 400 பேர், தேர்வு எழுதினர்.

சென்னையில் டிராம் வண்டிகள் வரலாற்று சுவடுகள் !!! நீங்கா நினைவலைகள் !!!


* இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.

தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு கற்று கொடுப்போமே?



அன்புள்ள வாசகர்களே, 

         அரசு செய்தி குறிப்புகள், பல்வேறு அரசாணைகள், செயல்முறைகள், புதிய அறிவுப்புகள், CCE Manual உட்பட பல்வேறு அரசு சார்ந்த செய்திகள் தற்போது வரை வானவில் ஔவையார் Font-இல் வழங்கப்பட்டு வருகிறது. 

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியாகாததால் குழப்பம்


           தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, வெளியிட தாமதம் ஆவதால், பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு டி.சி., கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.

8 லட்சம் மாணவர்கள் அதிக மதிப்பெண்: பிளஸ் 1ல் விரும்பிய குரூப் கிடைக்குமா?


             பத்தாம் வகுப்பு தேர்வில், சென்டம் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கையில், முக்கிய, குரூப்களில் சேர, கடும் போட்டி நிலவும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை தேர்ச்சி விகிதம் 94.61%... வெற்றியின் பின்னணியில் சிறப்புப் பயிற்றுனர் பாலாஜி!




               பத்தாம் வகுப்புத் தேர்வில் வியத்தகு சாதனைகளில் ஒன்றாக, சென்னை வருவாய் மாவட்டம் 94.61 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது.


10ம் வகுப்பு: இரு பாடங்களில் 37 ஆயிரம் பேர் தோல்வி


         பத்தாம் வகுப்பு தேர்வில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 847 மாணவர்கள், தோல்வி அடைந்து உள்ளனர். இவர்களில், இரு பாடங்களில் மட்டும், 37,628 பேர், தோல்வி அடைந்து உள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள் 250 ஆக அதிகரிப்பு


        ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,245 ஆக உயர்ந்துள்ளது.

எம்.ஜி.ஆர்., திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை


         எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், புதிதாக துவக்கப்பட்ட, நவீன தொழில் நுட்ப பட்டயப் படிப்பில், சேர விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.இ., முதல் ஆண்டு மாணவர்களுக்கு கணித பாடத்தில் சிறப்பு பயிற்சி


          பி.இ., முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு, கணிதப் பாடம் துவங்குவதற்கு முன், 15 மணி நேரம் பயிற்சி அளிக்க, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, முதலில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி குறித்து, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

முதுகலை ஆசிரியர் தேர்வு: 82 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை


        முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்றுடன், 82 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள்.

ஜூன் 8ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு


        சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி முதுகலை தேர்வுகள், ஜூன், 8ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

             சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், எம்.ஏ., - எம்.காம்., உள்ளிட்ட முதுகலை, தொழில் படிப்புகளுக்கான தேர்வுகள், ஜூன், 8ம் தேதி துவங்கி, ஜூலை, 28ம் தேதி வரை நடக்கிறது.

கட்டாய படிப்பு கரை சேர்க்குமா?


          பள்ளிக் கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை, சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? மேற்படிப்பு என்பதே அடுத்து தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி பெறுவதற்கும் தான்.

S.S.L.C RESULTS DISTRICT WISE



அண்ணாமலைப் பல்கலைக்கழக தகவல் 28 மையங்கள் மூடப்பட்டன


        தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத்தின் 28 தகவல் மையங்களை மூட பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் உத்திரவிட்டுள்ளார்.
 

கல்வி அலுவலர்களுக்கான மாநில ஆலோசனைக் கூட்டம்


       ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படவுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தொடர்பாக கல்வி அலுவலர்கள் பங்கேற்ற மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் பிஷப் ஹீபர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
 

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீத விவரம்

          10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்ச்சி விகித அடிப்படையில் 97.29 சதவீத தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. வழக்கமாக முதலிடம் வகிக்கும் விருதுநகர் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் 32 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீத விவரம்:
1. கன்னியாகுமரி 97.29%
2. தூத்துக்குடி 95.42%

TET – Paper 1 ( Expected Cut Off)


         ஆசிரியர் தகுதித் தேர்வில் 150 க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் அனைவருமே ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர்கள்.

      இருப்பினும் தமிழகத்தை பொறுத்தவரை இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யும் முறை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வேலை வாய்ப்பில் உள்ள முன்னுரிமை அடிப்படையில் ரேங்க் எண் வழங்கப்படும்.


TNTET - Paper 2 (Expected Cutoff)


               ஆசிரியர் தகுதி தேர்வு 2013-ம் ஆண்டு தாள் - 2 எழுதிய (4௦௦௦௦௦) பேரில் 7 சதவிகிதம் பேர் அதாவது மொத்தம் 28000 பேர்  வெற்றியடை வாய்ப்புள்ளது. அவர்களில் தமிழ்,ஆங்கிலம் மற்றும் சமூகஅறிவியல் பாடத்தில் 18000 பேறும் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் 10000 பேறும் வெற்றிபெற வாய்புள்ளது.இதில் தனித்தனியாக பார்த்தால் தமிழ் - 4000,ஆங்கிலம் -8000,கணிதம் - 6000, அறிவியல் - 4000, சமூகஅறிவியல் - 6000. இவ்வாறு எதிர்பார்க்கலாம்.


ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிகள்!!!


           மாசுபட்ட உணவு உட்கொண்ட எல்லோருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. அதிலும் சில நேரங்களில் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பொழுது அல்லது செயலாக்கத்தின் பொழுது உணவானது தூய்மைக்கேடு அடைகிறது.
 

தமிழகத்தின் எழுத்தறிவு 80.1%.... கன்னியாகுமரிக்கு முதலிடம்


          தமிழகத்தில், எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை, 80.1 சதவீதமாக உள்ளது. எழுத்தறிவு பெற்ற பெண்கள், 73 சதவீதம் பேராக உள்ளனர். எழுத்தறிவு பெற்றோரில், கன்னியாகுமரி மாவட்டம், 91.7 சதவீதத்துடன் முதலிடத்திலும், சென்னை 90.2 சதவீதத்துடன், இரண்டாம் இடத்திலும் உள்ளன.
 

TET - ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

               TET -  ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:          

"ஓய்வூதிய தனியார்மயம் கூடாது ஆக.6 கோட்டை நோக்கிப் பேரணி"

 
             ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் 3 வது மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.
 

தொடக்கக் கல்வி - 2013-2014ம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல், பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


            தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.01.06.2013ன் படி 2013-2014 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல், பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர், தொடக்ககப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் விவரங்களை 01.06.2013 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு



              10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம். இவ்வகை படிப்புகள் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் தொடர்ந்து இவற்றை மீண்டும் தெரிந்துக்கொள்வது அவசியமே.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு

2. பட்டய படிப்பு (டிப்ளோமா)

3. சான்றிதழ் படிப்பு (ITI)


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive