அன்புள்ள பாடசாலை வாசகர்களுக்கு வணக்கம்,
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளால் நமது தென்தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தேவையான உதவிகள் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அப்பகுதி மாவட்டங்களை சேர்ந்த நமது பாடசாலை வலைதள வாசக ஆசிரியர்கள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். பிற பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் இம்மக்களுக்கு உதவ விரும்பினால் கீழே நாம் தந்துள்ள ஆசிரியர்களை தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை பொருளாகவோ, பணமாகவோ வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
என்றும் அன்புடன் - பாடசாலை!
- நாகை மாவட்டம்: Mr. D. Tamilselvan, M.Sc.,M.A.,B.EdBiology Teacher
Srinivasa Higher Secondary school,Kollidam,Sirkali,Nagapattinam, Cell: 99424 15646
- புதுக்கோட்டை மாவட்டம்: திரு. சிகரம் சதிஷ் குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வியாளர் சங்கமம் Cell: 99941 19002