- ICT Award 2016 - Proceeding & Full Proposal - PDF Format -
தொடக்கக்
கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 ஆம் வகுப்புவரை
25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று
அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்தரவு...
மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ஒராண்டு தள்ளி வைக்க மத்திய அரசு அவசர சட்டம்
கொண்டு வந்தது.
தலைநகர் டில்லியில் விற்கப்படும், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
'கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல;
தூங்கவிடாமல் செய்வது'.
இது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன் வரிகள்.
தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது. அப்போது, புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பார்கள் என்று சட்டப் பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
மூட வேண்டிய, 500 மது கடைகளின் பட்டியலை, 'டாஸ்மாக்' நிறுவனம் தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,803 மது கடைகள் உள்ளன.
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து..மத்திய
அமைச்சர் ஜே.பி.நட்டாவின் விளக்கத்தை ஏற்று குடியரசு தலைவர் பிரணாப்
முகர்ஜி அவசர சட்டத்தில் கையெழுத்திட்டார்...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 25) காலை 9.31
மணிக்கு வெளியிடப்படுகின்றன.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட்
மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர்
ஜெயலலிதாவின் உத்தரவில்,
“ மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய
கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல்
வீடுகளுக்கு வழங்கப்படும்.
வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு,90 நாட்களுக்கு, ஒரு
முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்;
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, வங்கியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ஒரு வருடத்துக்கு
நிறுத்திவைக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜியை மத்திய மந்திரி ஜே.பி.நட்டா சந்தித்து உரிய விளக்கங்களை
அளித்தார்.
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்கள் பெறும், 'சென்டம்'
எண்ணிக்கை தான், ஒவ்வொரு ஆண்டும், கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில் பலத்த
போட்டியைஏற்படுத்துகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை
மறுகூட்டல் செய்ய புதன்கிழமை (மே 25) முதல் 28-ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை
9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.
ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும்
ஜூலை மாதம், 10ம் தேதி நடக்கிறது.
பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று(மே 24) முதல்
விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர்
மாலா தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி மகளிர் பள்ளியில் மாணவிகள் சேர்க்கைக்கு தனியார்
பள்ளிகளை விஞ்சும் வகையில் பெற்றோர், மாணவிகள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது.
நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப்
பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு
தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தலைமைச் செயலகம் சென்றார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு
முதல், 2ம் வகுப்புக்கும் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. தமிழகத்தில், பல்வேறு
வகை பள்ளிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டம் மற்றும்
மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
'பிளஸ் 2 மாணவர்களுக்கான உடனடி துணைத் தேர்வு, ஜூன், 22 முதல் ஜூலை, 4 வரை
நடக்கும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வுத்
துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும்
அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று
பிறப்பித்தார்.
விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு உள்ளிட்ட உத்தரவுகள்
அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இந்தாண்டு, 'ஸ்டேட் போர்டு' எனப்படும், மாநிலக் கல்வி முறையில் படித்து, பிளஸ் 2 தேர்வானவர்களுக்கு, மருத்துவ கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வகை செய்யும், மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டுள்ளார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், கோடைவிடுமுறையை நீட்டித்து, ஜூன், 1க்கு பதில், பள்ளிகள் திறப்பை, ஜூன், 8க்கு மாற்ற வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
'ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் உரிய காலங்களில் நடத்தினால்தான் கல்வித்துறையில் குவியும் வழக்குகள் பெருமளவில் குறையும்' என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி வலியுறுத்தினார்.
நமது நிருபரிடம் அவர் நேற்று கூறியதாவது:
சென்னை பள்ளிகளை திறப்பதை தள்ளி வைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்,
அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை டி.என்.பி.எஸ்.சி.,மூலம் துறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்ரல், 13ல் முடிந்தது.
அடுத்த ஆண்டு முதல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கான குழப்பத்தை தீர்க்க, கடந்த ஆண்டு, 'கட் ஆப்' மதிப்பெண்பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
கல்வித் தகவல் மேலாண்மை முறையில் இதுவரை 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பதிவு செய்வதற்கான கால அவகாசம் மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனத்தில், இன்ஜி., படிக்க சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், கடந்த ஆண்டு வினாக்கள் இடம் பெற்றன.