Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
650 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள் அரசு ஆய்வு
ஆசிரியர் குறை தீர்க்க கமிட்டி அமைக்க உத்தரவு
விரைவில் தேர்வு: அருள் அறிவிப்பு
இன்று "இளைஞர் எழுச்சி நாள்" - அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு
5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலப்பாடங்கள் ஒலி வடிவில்.
மாணவர்கள் சரியான உச்சரிப்புடன் வாசிக்க உதவும் என்ற நோக்கத்தில் பகிரப்படுகிறது.
சாலை பாதுகாப்பு விதிமுறை உறுதிமொழி எடுக்க உத்தரவு
கலை தேர்வுக்கு குறைந்தது மவுசு
100 மருத்துவக் குறிப்புகள்... நோட் பண்ணுங்க!
புது வாக்காளர் அட்டை தேர்தல் அதிகாரி தகவல்
மாணவர் விடுதியில் 25 சமையலர் காலி பணியிடம்: அக்.30-க்கு விண்ணப்பிக்கலாம்
மேல்நிலை எழுத்தர் தேர்வு: இணையதளத்தில் நுழைவுத் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு
தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:---கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு?
கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம்செய்து அறிவிப்பாணை வெளியீடு
வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை!
ராமநாதபுரத்தில் ரத்தாகின்றன 365 சத்துணவு அமைப்பாளர் இடங்கள்
விவிஐபிக்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு!
CPS Subscription & Govt Contribution Fund - Interest Alloted equal to PF
CPS-பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை மற்றும் அரசின் பங்களிப்பு தொகை அரசின் பொதுக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டு பொது வருகால வைப்பு நிதிக்கு இணையான வட்டி வழங்கப்படுகிறது -நிதி துறை பதில்
தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு!
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அரசு டிரைவர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள, டிரைவர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சென்னை, கோவை, திருச்சி, மதுரை சரக தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் வாகனங்களுக்கு, டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர்.
அதேபோல், சென்னை தொழிலாளர் கமிஷனர் அலுவலகவாகன ஓட்டுனர் பணயிடம், குன்னுார் தொழிலாளர் துணை கமிஷனர் அலுவலகம், கோத்தகிரி தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளர் அலுவலகம், ஆகியவற்றுக்கும் டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவிக்கு ஓட்டுனர் உரிமத்துடன், இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை, www.labour.tn.gov.in இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை, தேனாம்பேட்டை; கோவை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் பின்புறம்; திருச்சி மான்னார்புரம், காஜா மியான் தெரு; மதுரை, எல்லீஸ் நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடம் ஆகியவற்றில் உள்ள, தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்திலும், விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.“பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நவ.,6ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்,” என, தொழிலாளர் ஆணையர் அமுதாதெரிவித்துள்ளார்.
வங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்
வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பதுஅமலுக்கு வந்துள்ளது.வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.
இதற்கு மேல், ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, தற்போதுஇலவசமாக இருக்கும் வங்கிகளின் இணைய சேவைக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும், 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'அக்., 1 முதல், வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிக்கும்படி, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, பல வங்கிகளில் அமலுக்கு வந்து விட்டது' என்றார்.
அறிவிப்பு இல்லை:
தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது:வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிப்பது பற்றி, எந்த முன் அறிவிப்பும் இல்லை. வங்கியின் இணையதளங்களிலும் இது பற்றி குறிப்பிடவில்லை. வங்கிக்கு செல்வோரின் எண்ணிக்கையை குறைப்பதோடு,எந்த நேரத்திலும் பண பரிவர்த்தனையை செய்யும் நோக்கில், ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவையை, வங்கிகள் தான் அறிமுகம் செய்தன.தற்போது அவற்றுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சேவை கட்டணத்தை தவிர்க்க, காசோலைகளுடன் மீண்டும் வங்கிக்கு செல்லும் நிலை ஏற்படும். வங்கிகளின் நவீன சேவைகள், வாடிக்கையாளர் மீது கட்டண சுமையை ஏற்படுத்துகின்றன. நான் கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கியில், இணையம் மூலம் செய்யும் பண பரிமாற்றத்துக்கு, சேவை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மருந்து கடைகள் நாளை 'ஸ்டிரைக்': இன்றே மருந்து வாங்குங்க...
நாடு முழுவதும், மருந்து வணிகர்கள் நாளை, 'ஸ்டிரைக்' நடத்துவதால்,பொதுமக்கள், தேவையான மருந்துகளை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும்' என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
'ஆன் - லைன்' வழிமருந்து விற்பனையை அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 'இது, ஏற்கனவே உள்ள மருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தைபாதிக்கும். தரமற்ற, போலி மருந்துகள் வரத்துக்கும் வழி வகுக்கும்' எனக்கூறி, இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.மத்திய அரசின் முயற்சியை கைவிடக்கோரி, நாளை, நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.இதனால், எட்டு லட்சம் மருந்து கடைகள் மூடப்படுகின்றன. 'தமிழகத்தில் உள்ள, 30 ஆயிரம் மருந்து கடைகளும், இன்று இரவு, 12:00 மணி முதல், நாளைநள்ளிரவு, 12:00 மணி வரை, 24 மணி நேரத்திற்கு மூடப்படும்'என, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை வழங்க இன்று முதல் சிறப்பு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை வழங்குவது தொடர்பான சிறப்புக் கூட்ட அமர்வு செவ்வாய்க்கிழமை(அக்.13) தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இம்மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்குதல், தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆணை வழங்குதல் தொடர்பான சிறப்பு கூட்டமர்வு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.குழித்துறை கல்வி மாவட்டத்துக்கு மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
தக்கலைகல்வி மாவட்டத்துக்கு தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்.14 ஆம் தேதியும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்.15ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டமர்வு நடைபெறும்.அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் உரிய படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து இணைப்புகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
விடைத்தாள்களை பாதுகாப்பாக எடுத்து செல்ல புதிய வழிமுறைகளை கையாள வேண்டும்: கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு பாது காப்பாக எடுத்துச்செல்ல புதிய முறையை கையாள வேண்டும் என கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருச்சி மாவட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத் தலைவர் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 8.3.2010-ல் பிளஸ் 2 இயற்பியல் தேர்வு நடைபெற்றது. முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 262 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்காக கோவைக்கு தபாலில் அனுப்பியபோதுஅவை மாயமாயின. இதனால் அந்த 262 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது.பொதுத் தேர்வு விடைத்தாள் களை திருத்தும் மையங்களுக்கு அனுப்பும்போது அதிகாரிகள் கவனக்குறைவுடன் உள்ளனர். தபால்களுடன் சேர்த்தும், தனியார் பஸ்களிலும் பிற தபால்களுடன் சேர்த்து அனுப்புகின்றனர். இவற்றைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதா கர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நிர்மலாராணி வாதிட்டார். திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆனந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், எடுக்கப்பட்ட நட வடிக்கைகளை விளக்கியிருந்தார்.இதையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு: தேர்வுத்தாள் மாய மானது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தேர்வுத் தாள் மாயமாகும்போது தேர்வு எழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, பொதுத் தேர்வு முடிந்ததும் விடைத் தாள்களை திருத்தும் மையங் களுக்கு மிகுந்த பாதுகாப் புடன் எடுத்துச் செல்ல வேண்டும். இதற் காக புதிய வழிமுறைகளை உரு வாக்கி அமல்படுத்த வேண்டும்.இந்த வழக்கில் மறுதேர்வு எழு திய மாணவர்களுக்கு இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனுவை சம்பந்தப்பட்ட மாண வர்கள் தாக்கல் செய்யவில்லை. இழப்பீட்டுக்காக சம்பந்தப்பட்ட மாணவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தலைவராக கே.அருள்மொழி நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு.
தமிழக அரசு தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் நேற்றிரவு வெளியிட்டுள்ளஅரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பதவியேற்ற காலத்தில் இருந்துஇன்னும் 6 ஆண்டுகளோ அல்லது அவரது 62 வயது வரையிலோ அவர் இந்த பதவியில் இருப்பார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
IAS குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம்வரவேற்பு
இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது.இதுகுறித்து யுபிஎஸ்சி-யின் செயலர் ஆஷிம் குரானா, தில்லியில் செய்தியாளர்களிடம்கூறியதாவது:
இந்த ஆண்டு ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4.63 லட்சம் பேர், கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடந்த முதல்நிலைத் தேர்வை எழுதினர். நாடு முழுவதும் 71 நகரங்களில் உள்ள 2,186 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 50 நாள்களுக்குள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும், வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்க உள்ள முதன்மைத் தேர்வுக்கு, இணையவழியில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று ஆஷிம் குரானா தெரிவித்தார்.இந்தத் தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.