அரசு பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சத்துக்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை
நிறுத்தம் மேற்கொண்டிருக்கின்றனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத
பட்சத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும்
எச்சரித்திருக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம்
காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
வாக்காளர் பட்டியல்: இணைய தளம் மூலம் பெயர் சேர்க்கலாம்
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி
இருப்பதாவது:–வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 20.9.2015 மற்றும்
4.10.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வாக்குசாவடி மையங்களில் சிறப்பு
முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள
தவறியவர்கள், அடுத்த சிறப்பு முகாம் வரை காத்திருக்காமல் இணைய தளம்
(www.elections.tn.gov.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
அரசு பணி தேர்வில் எளிதில் வென்ற பட்டதாரிகள்: டிப்ளமோ செவிலியர்களுக்கு மீண்டும் சிக்கல்
7243 செவிலியர்களை தேர்வு செய்வதற்காக அரசு நடத்திய தேர்வில் பட்டதாரிகளே
அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். இதனால் டிப்ளமோ செவிலியர்களுக்கு அரசு வேலை
கிடைப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் தனியார் செவிலியர்
பள்ளிகளில் டிப்ளமோ படித்தவர்கள் அரசு வேலைகேட்டு 11 ஆண்டுகளாகப் போராடி
வந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு பால் பவுடர்: தமிழக அரசுக்கு கருணாநிதி யோசனை
உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவின் மூலம் கொள்முதல் செய்து, பள்ளிக் குழந்தைகளுக்கு பால் பவுடராக வழங்க வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவப் படிப்பு பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட
வேண்டும் எனமத்திய அரசை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 8) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.மாநிலம்
முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில்
பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்
குழுவின் (ஜேக்டோ) பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
'ஸ்டிரைக்' கில் குதிக்கின்றனர் 3 லட்சம் ஆசிரியர்கள்: தமிழகம் முழுவதும் இன்று அரசுப்பள்ளிகள் இயங்குமா?
தமிழகம் முழுவதும் இன்று, அரசு
பள்ளிகளைச் சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள்,15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில்
ஈடுபடுகின்றனர். இதனால், பள்ளிகள்
மூடப்படும் நிலையைத் தவிர்க்க, சத்துணவு அமைப்பாளர்கள்
மற்றும் சிறப்பு ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு
உள்ளனர். எனினும், பள்ளிகள் முழுமையாக இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடக்க வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு தமிழுக்கு தனிப்பயிற்சி! மாணவர் வாசிப்புத்திறன் மேம்படுத்த முயற்சி
மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன்,
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க வகுப்புகளை கையாளும்
ஆசிரியர்களுக்கு, தனிப்பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Recommendations of 7th Central Pay Commission would be implemented from 1st January, 2016: Finance Secretary
The Commission has been given time up
to December 2015 to submit its report on revising emoluments of nearly
48 lakh central govt employees and 55 lakh pensioners
தமிழக அரசு - ஆசிரியர்களுடன் நேரிடையாகப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இது தொடர்பாக இன்று தமிழ் மாநில
காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: ''தமிழகத்தில்
பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி,
உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய
அரசின் அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம், படி நிர்ணயம் உள்ளிட்டவை
வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களை தகுதித் தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பதை
தவிர்க்க வேண்டும்.
நானும் ஓர் சதாவதானி
நாள்தோறும் நான் பூசனை செய்யும் கோவில் “பள்ளிக்கூடம்”
கோவிலைச் சுற்றிவரும் பக்தர்கள் “பசங்க”
PHd Scholorship அதிகரிப்பு
ஆராய்ச்சி படிப்புக்கான (பி.எச்டி.) கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க
பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 1 படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவிகளுக்கு உதவித்தொகை
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று தற்போது
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவிகளுக்கு சி.பி.எஸ்.இ.,
மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
3 கோரிக்கை ஏற்பு; 12க்கு கைவிரிப்பு
ஆசிரியர்களின்
15 அம்ச கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை முடிவு
செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது: நிதி
சார்ந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, நிதித்துறைச் செயலருக்கு
கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளுக்கு கூடுதல் நிதி தேவை
என்பதால், தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என நிதித்துறை தெரிவித்துள்ளது.
'நெட்' தேர்வு விடைத்தாள் நகல் நவ., 10 வரை விண்ணப்பிக்கலாம்
நெட்
- நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்' என்ற தேசிய திறனாய்வு தேர்வு விடைத்தாள்
நகலை தேர்வர்களுக்கு வழங்க, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.
ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு அறிவிப்பு
நகர்
மற்றும் ஊரமைப்பு துறை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு, டிசம்பர், 13ம் தேதி
தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு துறையில்,
ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, போட்டித்
தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர், 13ம் தேதி, காலையிலும் மதியமும்,
இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, நவ., 4ம் தேதி
வரை, 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்
சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நேற்று மாலை
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு
இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
பள்ளிக்கல்வி இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை தோல்வி; திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ அறிவிப்பு
"ஜாக்டோ" அமைப்புடன் இன்று மாலை 4 மணிக்கு இயக்குனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.
கருவூல இயக்குனரை மாற்றக்கோரி ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு
கருவூலத்துறை இயக்குனரை மாற்றக்கோரி, தமிழகம் முழுவதும், கருவூல
கணக்குத்துறை அலுவலர்கள், 3,000 பேர், நேற்று, ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து
போராட்டம் நடத்தினர்.
ஆதார் அட்டை கட்டாயம் ஆகுமா? சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் “ஆதார்” என்ற பெயரில் அடையாள அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசும், பல்வேறு மாநில
அரசுகளும் சமையல் கியாஸ் இணைப்பு, வங்கி கணக்கு தொடங்குதல், ஓய்வூதியம்,
திருமணங்களை பதிவு செய்தல், சேமநல நிதி போன்ற சில பொதுச்சேவைகளுக்கு ஆதார்
அட்டையை கட்டாயமாக்கின.
வி.ஐ.டி., மாணவர் கின்னஸ் சாதனை
கோட்டா: பை எனப்படும், 70,000 கணித மதிப்பு எண்களை, நினைவுபடுத்திக்
கூறிய, வேலுார், வி.ஐ.டி., பல்கலைக்கழக மாணவரின் பெயர், கின்னஸ் உலக
சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி என்ன?
பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு விரைவில் அறிவிப்பு
வர உள்ளது.இதில் கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் பழைய முறை பின்பற்றபடுமா
இல்லை புதியமுறை அதாவது புதிய கல்வித்தகுதி பின்பற்றப்படுமா என
குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.
ஆசிரியைகள் இனி 'கோட்' அணிய வேண்டும் - சோதனை முறையில் அமலுக்கு வந்தது
சமூக விரோதிகள் மற்றும் குறும்புத்தனமான மாணவர்களின் கேலி, கிண்டல்களில்
இருந்து தப்பிக்கும் வகையில், அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு, மேலங்கி திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பருவ வயதை எட்டும் மாணவர்கள், சமூக விரோத
செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள், சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. மேலும், 18
வயது பூர்த்தி அடையாத, பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியைகளை கேலி, கிண்டல்
செய்யும் சம்பவங்களாலும், கல்வித் துறையினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.