Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்.5ம் தேதி முதல் துவக்கம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 5ம்
தேதி முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரூப் 2ஏ
தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது.
TNPSC.யில் ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் முதல் முதலாக சுயவிவர திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன்
நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு எழுதுவோர்
தனது விவரங்களை பதிவு செய்ய புதிய திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தி
உள்ளோம்.
வோக்ஸ்வேகன் முறைகேட்டை கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி
விர்ஜினியா : ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தை, பிரத்யேக
சாப்ட்வேரின் மூலம் குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில்
ஈடுபட்டது.
அரசின் புதிய கல்விக்கொள்கை; பள்ளி கல்லூரிகளுக்கு உத்தரவு
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவ, மாணவியரின் கருத்துகளை கட்டாயம் பெற வேண்டும் என, பள்ளி கல்லூரிகளுக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் பணி.
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசு வேலைகளில் சேர இனி நேர்முகத்தேர்வு கிடையாது புத்தாண்டு முதல் அமல்
மத்திய அரசு, இனி இளநிலை பணி இடங்களுக்கு
நியமனங்கள் செய்கிறபோது நேர்முகத்தேர்வு நடத்துவதில்லை என முடிவு
எடுத்துள்ளது. இது ஜனவரி 1–ந் தேதி புத்தாண்டு முதல் அமலுக்கு வருவதாக
தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை
இளநிலை உதவியாளர் 32 பணிக் காலியிடங்களுக்கு
பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதால், வியாழக்கிழமை (அக்.1)
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு தகுதியுடையோர் வந்து பரிந்துரை
விவரத்தினை தெரிந்து கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பில் பேரிடர் மேலாண்மைப் பாடம் அறிமுகம்
தமிழகத்தில்
எட்டாம் வகுப்பில் மூன்றாம் பருவத்துக்கான சமூக அறிவியல் பாடத்தில்
பேரிடர் மேலாண்மைப் பாடம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என, மாநிலக்
கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தெரிவித்தது.
டிசம்பர் தேர்வுக்கு கடைசி தேதி: சென்னை பல்கலை அறிவிப்பு
சென்னைப்
பல்கலை தொலைநிலைக் கல்வியில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கு,
டிசம்பர் மாதம் நடக்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டு
உள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொலை
நிலைக் கல்வியில், டிசம்பரில் தேர்வு எழுத விரும்புவோர், கண்டிப்பாக,'ஆன் -
லைனில்' பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதோருக்கு தேர்வு எழுத அனுமதி
இல்லை.
கல்லூரி கல்வி இயக்குனராகமீண்டும் கூடுதல் பொறுப்பு
கல்லுாரி
கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர்
நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழகத்திலுள்ள, 800 கலை மற்றும் அறிவியல்
கல்லுாரிகளில், 2.25 லட்சம் பேர் படிக்கின்றனர்; 10 ஆயிரம் ஆசிரியர்கள்
பணியாற்றுகின்றனர். கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், கல்லுாரி கல்வி
இயக்குனர் பதவிக்கான நியமனத்தில், சில ஆண்டுகளாக தொடர்ந்து குளறுபடிகள்
நடக்கின்றன.
CBSE - UGC National Eligibility Test for JRF (NET) December 2015
CLICK HERE TO APPLY ONLINE.....
Important Date:
Starting Date of online application:01-10--2015
Last date of online payment : 01-11-2015
Last date for fee payment : 02-11-2015
Date of Examination: 27-12-2015
Starting Date of online application:01-10--2015
Last date of online payment : 01-11-2015
Last date for fee payment : 02-11-2015
Date of Examination: 27-12-2015
பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி
கடந்த மாதம், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக நடந்த கலந்தாய்வில், ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வை நிராகரித்ததால், 928 இடங்கள் நிரம்பவில்லை. இதை நிரப்ப, மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, புதிய முன்னுரிமை பட்டியலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ஆக., 24ம் தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலரும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வை நிராகரித்தனர்.
ANNAMALAI UNIVERSITY :- Admission to B.Ed. , 2015 - 16 COUNSELLING SCHEDULE..
*Date :07.10.2015
(Wednesday)
>English 08.30 A.M
(Wednesday)
>English 08.30 A.M
Microsoft Cloud Computing Service Starts in Tamilnadu
தமிழகத்தை டிஜிட்டல்மயமாக்க உதவும் மைக்ரோசாப்ட் மேகக்கணினி சேவை: முதல்வர்ஜெயலலிதா தொடங்கிவைத்தார்
சென்னையில் மைக்ரோசாப்ட் நிறு வனம் அமைத்துள்ள தரவு மையத் தில் இருந்து வழங்கப்படும் மேகக் கணினி சேவையை முதல்வர் ஜெய லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மருத்துவக் கலந்தாய்வு விவகாரம்: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை முதலில் நிரப்ப உத்தரவு
அனைத்து மாநிலங்களிலும் 2015-16 ஆண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர்
சேர்க்கையில் முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும்
என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தனியார் கல்லூரிகளுக்கு பல ஆண்டுகளாகவழங்கப்படாத சம்பளம் சாரா செலவினம் ;நீதிமன்றத்தை அணுக தனியார் கல்லூரிகள் முடிவு
மதுரை: தனியார் கல்லுாரிகளுக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள சம்பளம்
சாரா செலவினங்களை வழங்க கோரி நீதிமன்றத்தை அணுகுவது என மதுரை காமராஜ்
பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மதுரையில் சங்க
ஆண்டு பொதுக் கூட்டம், தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
கல்லுாரிகள் வளர்ச்சிக்காக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஸ்டெனோ தட்டச்சர் பணி.
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிவில் சப்ளைய் கார்ப்பரேஷனில்
ஸ்டெனோ தட்டச்சர் கிரேடு -III பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு -IIIகாலியிடங்கள்: 10
பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கும் அங்கீகாரம் விதிமுறை தளர்ந்தது!
அரசு நிர்ணயித்த அளவுக்கு, இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம்
வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், போதிய வசதிகள் இல்லாமல், சிறிய
இடத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப்
பள்ளிகள் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என, தமிழக
அரசு, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
பரப்பளவு
மழை பெய்தபோது செல்போனில் பேசியவர் மின்னல் தாக்கி பலி
மழை பெய்தபோது செல்போனில் பேசிய வாலிபர் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக
இறந்தார். அருகில் இருந்த நண்பர் படுகாயமடைந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த
கழிவந்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (23), தனியார் நிறுவன
ஊழியர். இவர், கடந்த 27ம் தேதி தனது நண்பருடன் கூடுவாஞ்சேரியில் இருந்து
பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, மின்னல், இடியுடன் கூடிய பலத்த
மழை பெய்தது.