Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உச்சநீதிமன்ற டி.இ.டி வழக்கில் ஏற்பட்டது ஏமாற்றமல்ல! தேதி மாற்றம் மட்டுமே!

        உச்சநீதிமன்றத்தில் இன்று 14.07.2015 வரவேண்டிய வழக்குகள் மேலும் ஒரு வார காத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மனம் தளர வேண்டாம் ஏன் இந்த காலமாற்றம் என குழம்ப  வேண்டாம்.. நமது வழக்கு வேறு விதமான முடிவுகள் வந்துவிடுமோ என வருததமடைய வேண்டாம் என்பதை தெளிவு படுத்தும் பொருட்டே இந்த பதிவு...

ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு 20-ம் தேதி தொடங்குகிறது

      அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.இதைத் தொடர்ந்து, கலந்தாய்வு வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது.
 

கருணை வேலை கோரும்போது விரும்பும் பணியை கேட்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

      ‘கருணை வேலை கேட்டு மனு செய்வோர் அரசு வழங்கும் பணியை ஏற்க வேண்டும். தாங்கள் விரும்பும் பணியைத்தான் தர வேண்டும் என கேட்க முடியாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர் அமுதவள்ளி.


'நல்லாசிரியர்' விருது ஆசிரியர்கள் ஆர்வம்.

   மதுரையில் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களைமதிப்பீடு செய்வதற்கு முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்விருது பெற தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு - "கடமை வீரர்" , "பாரத ரத்னா " காமராசர் வாழ்க்கை வரலாறு

கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசர் 

காமராஜரின் பிறந்த தினமான (15/03), "கல்வி வளர்ச்சி தினமாக'  கடைபிடிக்கப்படுகிறது. காமராஜர் பிறந்த தினத்தை  கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து பள்ளிகள் தோறும் கொண்டாட  வைத்தது, தமிழகத்தில் ஏழைகளும் கல்வி பயில காமராஜர் ஆற்றிய பணிக்கு  மிகச்சரியான புகழாரம்.

 
 
 
 

ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு 26, 27 தேதிகளில் நடக்க வாய்ப்புள்ளது.

        ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை & விதிமுறைகள் இன்று 13-7-2015 கையழுத்து ஆகிவிட்டது. எந்த நேரமும் வெளியிடப்படலாம் .

                இன்னும் ஒரு வார காலத்திற்குள் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. 26, 27 தேதிகளில் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது.

அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத் திட்டம்?

     பிளஸ் 1 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டில் (2016-17) புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.இந்தத் துணைக் குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. 

தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையம்: பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல்

     தேசிய ஆன்-லைன் கல்வி உதவித் தொகை இணையத்தில் பல்கலைக்கழகங்கள் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.அதோடு, மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே பரவலாக விளம்பரப்படுத்துமாறும் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

CPS-வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு -ஆகையால் வழக்கு விசாரணைக்கு இன்று (13.07.2015 ) வரவில்லை

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் திருஎங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்டபொது நல வழக்கு(வழக்குஎண்.(11897/2015) இன்று நீதிமன்ற எண்.9ல்விசாரணைக்கு வரஇருந்தது வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு -ஆகையால் வழக்கு விசாரணைக்கு இன்று (13.07.2015)வரவில்லை. அடுத்துவரும் வேலைநாட்களில் விசாரணைக்கு வழக்கு வரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

பள்ளிகல்வித்துறை&காவல்துறை இணைந்து வழங்கும் சாதிகளற்ற சமுதாயம் படைப்போம் கலைப்பயணம்

        தமிழ்நாடு அரசு --பள்ளிகல்வித்துறை&காவல்துறை இணைந்து வழங்கும் சாதிகளற்ற சமுதாயம் படைப்போம் கலைப்பயணம்- வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் !!

வாட்ஸ் அப்-ல் விரைவில் லைக் பட்டன் வசதி அறிமுகம்?

       வாட்ஸ் அப் - ல் லைக் பட்டன் வசதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய இளைய தலைமுறைகள் தங்களுக்குள் முக்கிய தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்ப அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ் அப்.. இதுவே இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாக கருதபடுகிறது.
 

கிளாஸ் ரூமிலேயே கிளாசில் மது - போதையில் பிளஸ்-2 மாணவர்கள்.

          சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி கூட பிளஸ் 2 மாணவர்கள் பள்ளியிலேயே மது அருந்திய விஷயம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 
 

பி.எப்., கணக்கு விவரங்கள் இனி தமிழிலும் அறியலாம்

      தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின் கணக்கு இருப்பு மற்றும் பிற தகவல்களை, தமிழில், எஸ்.எம்.எஸ்., மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
 

பணி பாதுகாப்பு: ஆசிரியர்கள் தீர்மானம்.

      மதுரையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சங்க மாநில செயற்குழுக்கூட்டம் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜெயசந்திரன், ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். 
 

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி புறக்கணிப்பு

          மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில்,ஆங்கில வழி கல்விக்கு,போதிய வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால்,புறக்கணிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
 

ஜூலை 18ல் 'ஜாக்டோ' ஆயத்த கூட்டம்

         'ஜாக்டோ' தொடர் முழக்க போராட்டத்திற்கான மாநில ஆயத்த கூட்டம் ஜூலை 18ல் திண்டுக்கல்லில் நடக்கிறது.மத்திய அரசுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராடி வந்தன. அரசு செவி சாய்க்காததால் 27 சங்கங்கள் ஒன்றுசேர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை (ஜாக்டோ) அமைத்துள்ளன.

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகம்

    பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.
 

ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டத்தால் அவினாசிலிங்கம் பல்கலையில் பரபரப்பு; காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

         கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகம் மத்திய அரசின், பல்கலைகழக மானியக்குழு நிதியுதவி பெறும் நிலையில், ஒப்பந்தத்தை மத்திய மனித வள மேம்பாட்டு துறையில் ஜூன் 30ம் தேதியுடன் (எம்ஓயு) புதுப்பிக்க வேண்டும்.ஆனால் பல்கலைகழக அறக்கட்டளை நிர்வாகம் ஒப்பந்தத்தை புதுப்பிக்காதால், பல்கலைகழக பேராசிரியையைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களாக பல்கலைகழகம் இழுத்து மூடப்பட்டன. நேற்று பல்கலைகழகம் திறக்கப்பட்டது.
 

மாணவர்களை அடித்த தலைமையாசிரியரை மாற்றக் கோரி முற்றுகை

    பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவர்களைத் தலைமையாசிரியர் அடித்ததாகக் கூறி, அவரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளியை பெற்றோர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

 

உதவித் தொகை அறிவிப்பால் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு போட்டி!

புதுச்சேரிபி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு கல்வித் உதவி தொகை வழங்கப்படும் என, அறிவித்துள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களிடையே கடும் போட்டியோடு, பலத்த எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. 

TET வழக்குகள் விசாரணை தேதியில் மாற்றம்!

          உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவேண்டிய டி.இ.டி வழக்குகள் 21.07.2015க்கு மாற்றி மாற்றப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள்- ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு முடிவு


அதிகம் படித்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள்- ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு முடிவு

     இனி உங்கள் குழந்தையிடம் அதிகம் படித்தால் நல்ல வேலையுடன், வசதியாக வாழலாம் என்பதுடன் மற்றவர்களை விட நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்றும் சொல்லலாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

பி.எட். பட்டப்படிப்பு 2 ஆண்டாக மாற்றம்: விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது

      தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி படிப்பான பி.எட். பட்டயப்படிப்பு ஒரு ஆண்டு படிப்பாக இருக்கிறது. இதை இரண்டு ஆண்டு பட்டப்படிப்பாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
 

யுஜிசி கல்வி உதவித்தொகை அறிவிப்பு

     சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான எம்.ஃபில், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive