சாலைகள், தெருக்களில் எச்சில் துப்புவோர், குப்பைகளை வீசி,
சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்கெடுப்பவர்களுக்கு கண்டனம், அபராதம், சிறை
தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தை மத்திய கொண்டு வர உள்ளது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின், 'துாய்மை இந்தியா' திட்டத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Quarterly Exam Questions 2024
Latest Updates
இன்ஜி., மாணவர்களுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு பிளஸ் 1 பாடம்
'இன்ஜினியரிங் படிப்பில் சேரும்
மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த
வேண்டும்' என, கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம்
அறிவுறுத்தி உள்ளது.
பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை
மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படும், பார்வையின்மை, காது கேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை,
பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, வயது வரம்பு, 10
ஆண்டுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.
ஐந்தாண்டு சட்டப்படிப்புகவுன்சிலிங் துவக்கம்
தமிழ்நாடு
அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு, 'ஹானர்ஸ்' படிப்புக்கான மாணவர்
சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதல் நாளில், 150 பேர்
சேர்ந்தனர்.ஐந்து ஆண்டு, 'ஹானர்ஸ்' படிப்பில், பி.ஏ., - பி.பி.ஏ., -
பி.சி.ஏ., - பி.காம்., ஆகியவற்றுடன் எல்.எல்.பி., படிக்க, விண்ணப்பங்கள்
பெறப்பட்டன.
CPS -அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு
CPS-மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் படி பிடித்தம் செய்த தொகை ,அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு: GO: 124 Date: 22.4.2015
CPS-திருத்தம் செய்து செய்து வெளியிட்ட அரசாணை -நாள் 05.06.2015
Important Educational Department Latest Government Orders
TNTET & TNPSC Maths Quiz Self Test Series 1
TNPSC Group 2 & Group 4 Exams & TNTET Paper 1 & TNTET Paper 2 (Maths & Science) போன்ற தேர்வுகளில் கணித பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய தேர்வுகளில் தேர்வர்கள் எளிதாக வெற்றி பெற உதவியாக நமது பாடசாலை வலைதளம் ”சுய மதிப்பீடு” தேர்வுகளை தினந்தோறும் வெளியிட உள்ளது. பயன்பெற வாழ்த்துக்கள்!
TNPSC Maths Questions Self Test Study Material - Mensuration (அளவியல்) - Click Here
குறுந்தகடு மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறதா? - அறிக்கை சமர்பிக்க இயக்குனர் உத்தரவு
தொடக்கக்கல்வி - அனைத்து பள்ளிகளுக்கும் ஆங்கில கல்வி ஒலிப்புமுறை" யை[PHONETIC METHODOLOGY] பயிற்றுவிக்க கொடுக்கப்பட்ட குறுந்தகடு மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறதா? - அனைத்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களும் அறிக்கை சமர்பிக்க இயக்குனர் உத்தரவு
ஒதுக்கிய இடங்கள் 900 : விண்ணப்பமோ 14;2ம் ஆண்டு இன்ஜி., நிலை
பி.எஸ்சி., முடித்து இன்ஜி., நேரடி இரண்டாம் ஆண்டில் சேரும்
மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் வெகுவாக குறைந்துள்ளது.
ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த தண்டிப்பதைவிட, கற்றுத்தந்து பயிற்சியளிப்பதே சிறந்தது!
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகக் கல்வியியல் கல்வித் துறைத் தலைவர்
டெபோரா லோவன்பர்க் பால் சிறந்த கல்வி நிபுணர். ஆசிரியர் கல்வியியல்
கல்லூரிகளில் பெறும் பயிற்சியைவிட, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பெறும்
பயிற்சியைத்தான் அதிகம் மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறார். ஆசிரியராக
வேலைக்குச் சேர்ந்தவுடன் அவர்கள் சிறப்பாகப் பணிபுரிய பயிற்சித் திட்டம்
எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து ஒரு பாடத்திட்டத்தை அவர்
வகுத்திருக்கிறார்.
ஆக., 1ல் போராட்டம்: ஜாக்டோ குழு அறிவிப்பு.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 30 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை அமைத்து உள்ளன. இக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான சம்பளம்: காற்றில் பறக்கும் ஏஐசிடிஇ விதிமுறை
பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிகக் குறைவான சம்பளம்கொடுக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. சம்பள விஷயத்தில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) விதிமுறைகள் முறை யாக பின்பற்றப்படுவதில்லை என்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.
காலி பணியிடங்களை வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை
போடியில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு கூட்டம் மாவட்டதலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பாண்டிதுரை, பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை மே மாதத்தில் நடத்தாமல் ஜூன், ஜூலையில் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு பயிற்றுனர்கள் உண்ணாவிரதம்.
சிறப்பு பயிற்று னர்களை, அரசு ஆசிரியர் களாக அறிவித்து பணி நியமனம்செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் மாணவர்களுக்காக உள்ளடங்கிய கல்வி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்திய மறுவாழ்வு குழுமத்திடம் சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம்: சிறப்பாசிரியர்கள் திட்டம்
தமிழகத்தில் சிறப்பாசிரியர்கள் தொடர்ந்து புறக்கணிப்படுவதால் இந்திய மறுவாழ்வு குழுமத்திடம் சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்என்று அனைத்து மாவட்ட சிறப்புக் கல்வியியல் பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 140 இடங்களில் ஹெல்மெட் சோதனை: அதிகாரிகளுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவு
தமிழகம் முழுவதும் 140 இடங்களில் வரும் 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது தொடர்பாக சோதனை நடத்துமாறு ஆர்டிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சோதனை தொடர்பாக தினமும் அறிக்கை அனுப்பவும் போக்கு வரத்து ஆணையரகம் தெரிவித் துள்ளது.
'பயோ-மெட்ரிக்' வருகைப்பதிவு: பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியம்.
ஆசிரியர்களின் முறையான வருகைப்பதிவை உறுதிசெய்யும் விதத்தில், பள்ளிகளில்,
'பயோ-மெட்ரிக்' எனும் கைரேகை பதிவு முறையை அறிமுகம் செய்யவேண்டும் என
கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின்
வருகைப்பதிவை முறைப் படுத்தி கண்காணிக்கும் நோக்கில், 'எஸ்.எம்.எஸ்' முறை திருச்சிமாவட்டத்தில் மட்டும் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது
2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில
அளவிலான டாக்டர்.
இராதாகிருஷ்ணன் விருது பெறத் தகுதி வாய்ந்த
ஆசிரியர்கள் 10.08.15 க்குள் கருத்துருக்களை பள்ளிக் கல்வி
இயக்ககத்திற்கு அனுப்பிவைக்கும் வகையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகளில்,
சித்தா (பி.எஸ்.எம்.எஸ்.,), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்.,), யுனானி
(பி.யு.எம்.எஸ்.,), நேச்சுரோபதி மற்றும் யோகா (பி.என்.ஒய்.எஸ்.,), ஓமியோபதி
(பி.எச்.எம்.எஸ்.,) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகள்
உள்ளன.நடப்பாண்டில், இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஆறு
மருத்துவக் கல்லுாரிகளில் இன்று துவங்குகிறது.
70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்
தமிழகத்தில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு,
ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களை, ஜூலையில் நடத்த மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது.
நர்சு வேலைக்கு போட்டி தேர்வு
தமிழகத்தில்
உள்ள அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள்
உட்பட, 7,243 நர்சுகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 40,432 பேர்
விண்ணப்பித்தனர்.இவர்களுக்கான
போட்டித்தேர்வு, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, மற்றும் திருச்சி
நகரங்களில், 89 மையங்களில் நேற்று நடந்தது.
பள்ளிக்கல்வி துறையில் தேங்கும் வழக்குகள்.
கோவை மாவட்டத்தில், சட்டம், நீதிமன்றம் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு
இன்மையால், நாளுக்கு நாள் அதிரித்து வரும் நிலுவை வழக்குகளை சமாளிக்க
முடியாமல், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திணறி
வருகின்றனர்.
மதுரை மருத்துவ கல்லூரியில் முதலில் சேர்ந்த பழைய மாணவி
மதுரை
மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் முதல் மாணவியாக, கடந்த
ஆண்டு பிளஸ் 2 முடித்த பழைய மாணவி சனிக்கிழமை சேர்ந்தார்.
உலகில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர் 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள்
உலக அளவில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர், 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையில் நாயின் படம்: அதிர்ச்சியடைந்த மாணவர்
மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கான நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில், தனது புகைப்படத்துக்கு பதில் நாயின் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வு தொடங்கியது: விளையாட்டு வீரர்கள் தேர்வு
இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசுபட்டது: சர்வதேச அமைப்பு
இந்தியாவில் உள்ள மொத்த மேற்பரப்பு நீரில் 80 சதவீதம் மாசுபட்டது என சர்வதேச அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு
10-ம் வகுப்பு
மறுகூட்டல் முடிவு இணையதளத்தில் நாளை (திங்கள்கிழமை) வெளியிடப் படும் என்று
அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை
இயக்குநர் கே.தேவரா ஜன், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: