Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கூட வாகனங்களில் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் தமிழக அரசின் 3 துறைகள் இணைந்து உத்தரவு

         இந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூட வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகளை தமிழக அரசின் 3 துறைகள் வெளியிட்டு உள்ளன. 

அரசு, தனியார் நிறுவன அலுவலகங்களில் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல்; புகார் அளிக்க குழுக்கள் அமைக்க வேண்டும்: சென்னை மாவட்ட ஆட்சியர்

       பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிக்க சென்னையில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள் குழுக்கள் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தினார்.

பாலிடெக்னிக்விண்ணப்பம் விற்பனை துவக்கம்

            அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம், வரும் 18ம் தேதி முதல், விற்பனை செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 41 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடைபெறும், 
 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழால் பதிவில் சிக்கல்

          பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம், பள்ளிகளில், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு கல்லுாரிகளில் வழங்கப்படும் தற்காலிக பட்டப் படிப்பு சான்றிதழ் போல், பிளஸ் 2 மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்

               பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே 80 சதவீத மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  8.8 லட்சம் மாணவர்கள்: தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர்.  மே 7-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
 

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும்; முதன்மை செயலாளர் த.சபீதா

             தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.

ஆண்களின் டாப் பிரச்னைகள்!

Image result for male body problems          உடல்ரீதியான பலவீனத்தைவைத்து ‘வீக்கர் செக்ஸ்’ என்று பெண்களைத் தான் சொல்கிறோம். வலிமையான பாலினமாகக் கருதப்படும் ஆண்கள் தான், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் என அபாயகரமான நோய்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள்.
 

சிவில் சர்வீஸ் 2011 ல் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு சலுகை

           கடந்த, 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு, இந்த ஆண்டு கூடுதலாக, ஒரு வாய்ப்பு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்திய, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூலையில், ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால் அதுவே இறுதியானது

            'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம் குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர். 
 

பிளஸ் 2 சான்றிதழ் பிழை திருத்த தலைமையாசிரியர்க்கு அதிகாரம்

            பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் வழங்கும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால், தலைமையாசிரியரே திருத்தம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், 'மதிப்பெண் சான்றில், மதிப்பெண் விவரத்தில், 'கை' வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
 

தொடக்ககல்வி பட்டயத்தேர்வு.அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்

            தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

Android App For Lab Asst Exam 2015 Now Available in Google Playstore



  • Study Materials
  • Free Online Tests
  • Syllabus
  • Notification
  • Science New Samacheer Kalvi Books PDF Download
  • All Other Latest Lab Asst Exam Information Available in This Android App. 

10,000 கோடி ஊழல்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் படங்களுடன் பரபரப்பு பேனர்கள்!

         தமிழகத்தில் ஊழல் புகார் கூறப்பட்டு 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் படங்களுடன் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயன்பாட்டுக்கு வந்தது கோவையில் முதல் அஞ்சலக ஏடிஎம்


     கோவையில் கட்டமைக்கப்பட்ட அஞ்சலக ஏடிஎம், மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று முதல் கொண்டு வரப்பட்டது. அஞ்சல்துறை தமிழகத் தலைவர் எம்.எஸ்.ராமானுஜன் புதிய ஏடிஎம் மையத்தைத் தொடங்கி வைத்தார்.
 

DSE ; SGT/SPL TEACHER'S TO BT SOCIAL SCIENCE PANEL RELEASED

DSE ; SGT/SPL TEACHER'S TO BT SOCIAL SCIENCE PANEL RELEASED

12th Special Exam June - 2015 Regarding Proceeding

DGE PROCEEDINGS REGARDING HSC SPECIAL EXAM JUNE-2015

தலைமைஆசிரியர் டார்ச்சர் -ஆசிரியை தற்கொலை : புதுக்கோட்டை சிஇஓ காலில் விழுந்து கணவர் கதறல்:நக்கீரன்

            புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி புவனேஸ்வரி(25). இவர் தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இந்த பள்ளி தலைமையாசிாியர் மதிவாணன், புவனேஸ்வரிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த ஆசிாியை கடந்த 7ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு: இருபது செல்பேசிகளுடன் எட்டாம் வகுப்பு மாணவர் கைது

     சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகேயுள்ள உலிபுரம் ஊராட்சிக்குள்பட்ட மூக்காகவுண்டன்புதூர். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கு அலுவலக பயன்பாட்டுக்கு வைத்திருந்த இரு மடிக்கணினிகளை திருடிச்சென்றனர்.

கல்வி உரிமைச் சட்டத்தை கேள்விக்குறியாக்கும் மசோதா! எம். மார்க் நெல்சன்

            மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, கல்வி உரிமைச் சட்டத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். இதனால், குழந்தைகளின் வளர்ச்சியும், கல்வியும் பாதிக்கப்படுவதோடு பழைய நிலைக்கே அவர்கள் தள்ளப்படும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

யுபிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் இல்லை: மத்திய அரசு

            யுபிஎஸ்சி தேர்வுகளில் இந்த ஆண்டு மாற்றம் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரம் யுபிஎஸ்சி தேர்வு முறை குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு யுபிஎஸ்சி தேர்வு முறை, தேர்வு எழுதுவோரின் தகுதி, அதற்கான பாடதிட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தகுதி தேர்வு முடிவு வெளியாகாததால் குழப்பம்

          உதவி பேரா சி ரி யர் பணிக் காக கடந்த டிசம் பர் மாதம் நடத் தப் பட்ட ‘நெட்’ தகு தித் தேர்வு முடிவு இது வரை வெளி யா கா த தால் குழப் பம் நீடிக் கி றது. அடுத்த மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (15ம் தேதி) கடைசி நாளா கும்.
 

பிளஸ் 2 அறிவியல், வணிகவியலில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது ஏன்? தலைமை ஆசிரியர்களிடம் ஆய்வு

        பிளஸ் 2 தேர்வில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் குரூப், வணிகவியல் பாடத்தில் மதிப்பெண் குறைந்த தற்கான காரணங்களை மாநகராட்சி கல்வித் துறை ஆராய்ந்து வரு கிறது. 

+2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் மாற்றுச்சன்றிதளையும் வழங்க வேண்டும் - அரசுத்தேர்வுகள் இயக்குனர்

        +2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் மாற்றுச்சான்றிதழையும் வழங்க வேண்டும். அதில்  மாணவர்களுக்கு வழங்கும் பிரதியில் மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்  என்ற இடத்தில் REFER ORGINAL CERTIFICATE என எழுத வேண்டுமென  அரசுத்தேர்வுகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

தவறு, தவிர்க்க மாணவர்களுக்கு ஒரே மதிப்பெண்,டி.சி.,

         சில தவறு, குளறுபடி தவிர்த்து பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி: இதுவரை 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்

           பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், 80 ஆயிரத்துக்கு அதிகமானோர் விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

பிளஸ் 2 துணைத்தேர்வு பதிவு துவக்கம்

            பிளஸ் 2 தேர்வில், 78,722 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வுக்குப் பதிவு செய்து, பல காரணங்களால் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு, ஜூன் இறுதி வாரத்தில் நடக்க உள்ளது. 
 

சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு எப்போது?

            மத்திய பாட திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 29ம் தேதிக்குள் வெளியாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடந்த, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, முடிவுகள், முறையே, வரும் 19ம் தேதியும், 29ம் தேதியும் வெளியிட,  சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விடைத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிந்தால், அதற்கு முன்பே கூட வெளியிடப்படலாம்.

'மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு தேவை'-தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

          தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில், கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என, தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்ஜி., கல்லூரிகளில் ஐ.டி., இடங்கள் குறைப்பு: பல இடங்களில் எம்.சி.ஏ., பாடப்பிரிவு ரத்து

          தமிழகத்தில், அண்ணா பல்கலைக்குட்பட்ட பல பொறியியல் கல்லூரிகளில், ஐ.டி., படிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. சில கல்லூரிகளில் எம்.சி.ஏ., - எம்.டெக்., படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive