Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்

         கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது.

நேபாள நில நடுக்கம்: அரசுப் பணியாளர் சங்கம் ஒரு நாள் ஊதியம் அளிக்க முடிவு


      நேபாள நாட்டில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியார் சங்கத்தில் உள்ள பணியாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

மாணவர்களை துரத்தும் மதிப்பெண் பீதி! 'ரிசல்ட்' நேரத்தில் பெற்றோரே 'ரிலாக்ஸ்'

          கோடைக் காலம் துவங்கினாலே, விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மத்தியில், தேர்வு முடிவுகளை நினைத்து, பதட்டத்தில் பரிதவிக்கும் மாணவர்கள் பலர் உள்ளனர். இச்சமயத்தில், பெற்றோர் உஷாராக செயல்படவேண்டியது அவசியம் என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: இதுவரை 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்

           அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுக்கு இதுவரை 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி மே 6 ஆகும். அடுத்த மூன்று நாள்களில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொடுவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இரண்டு வாரங்களுக்குள் வழங்க உத்தரவு

          பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வு முடிவு வெளியான, இரண்டு வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்து, மாணவர்களிடம் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கத்திரி வெயில் இன்று தொடக்கம்: 26 நாள் வாட்டி வதைக்கும்

      அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 29–ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.

"பல்வேறு "சர்வர்'களை இணைக்க வேண்டியுள்ளதால் "ஸ்மார்ட் கார்டு' வரும் ஆண்டிலும் சாத்தியமில்லை

       "கல்வி மேலாண்மை தகவல் முறை இணையதளமும், மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' திட்டமும், வரும் கல்வியாண்டிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை' என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

வேலைவாய்ப்பு பதிவு அட்டைகள்பள்ளிகளில் கட்டு கட்டாக தேக்கம்

     பத்தாவது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை, மாணவ, மாணவியருக்கு தபாலில் அனுப்புவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

'க்யூசெட்' நுழைவு தேர்வுவிண்ணப்பிக்க நாளை கடைசி

         மத்திய பல்கலையில், மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வான, 'க்யூசெட்' தேர்வுக்கு விண்ணப்பம் அளிக்க, நாளை கடைசி நாள். பொது நுழைவுத் தேர்வு ஜூன், 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகம், கேரளா, ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும், எட்டு மத்திய பல்கலை.,களுடன் இணைந்து, இந்த நுழைவுத்தேர்வு நடக்கிறது.
 

மதுரை காமராசர் பல்கலை.யில்சுயவேலைவாய்ப்பு பயிற்சி

         மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுயவேலைவாய்ப்புக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. இதுகுறித்து அப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகளை முன்கூட்டியே தொடங்கத் திட்டம்

         பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான தயாரிப்பு வகுப்புகள் (பிரிட்ஜ் கோர்ஸ்) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு பயிற்சி

           பள்ளி மாணவியருக்கு தற்கொலை தடுப்பு மற்றும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், கிண்டி மற்றும் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக நேற்று முன்தினம் நடந்தது. தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது தவறு.
 

விண்ணப்பம் விநியோகம் தொடங்கவில்லை : பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்

       தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியாகும். மே மாதம் கலந்தாய்வுக்கான கால அட்டவணை வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும். 
 

சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி?

 
         தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. `உடலின் துப்புரவுத் தொழிலாளி’ என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றிலும் சிறுநீரகக் கற்கள் உருவாவது வாடிக்கை. 

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.

         AFMC என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியில், இந்தக் கல்வி ஆண்டுக்கான MBBS படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  இதற்கு AIPMT 2015 என்ற நுழைவுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். 
 

ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் ஆயிரம் படிப்புகள்...

          என்ன கோர்ஸ் படித்தாலும் இங்கே வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், எந்த நிறுவனத்தில் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். தமிழ்நாட்டில்  பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிப் படிப்பை வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற கல்லூரிகளிலேயே படித்து முடித்துவிடுகிறார்கள். வெளிவாய்ப்புகள் பற்றிய  தேடல் இல்லாமலே வாழ்க்கையை நகர்த்திவிட்டு நகரத்துக்கு வந்து கஷ்டப்படுகிறார்கள். 

நீண்டகாலமாக அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல்ஸ் மீதும் நடவடிக்கை

          நடப்பு கல்வியாண்டில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து, நீண்டகாலமாக அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல்ஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி எச்சரித்துள்ளார்.

உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு... : அரசு இலவச பாடப்புத்தகம் கிடைக்குமா?

         மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கு தொடுதலை பற்றி சொல்லி கொடுங்க

         குழந்தைகள் பள்ளி, ட்யூஷன், கோச்சிங் கிளாஸ், வார இறுதி வகுப்புகள், மற்ற பள்ளிகளுக்கு சென்று பங்கேற்கும் போட்டிகள், ட்ரெயினிங் சென்டர், இன்னும் என்னென்ன இடங்களுக்கு யாருடன் சென்று வந்தாலும், விசாரணை போல இல்லாமல் தோழமையுடன் நடந்ததை கேட்டறிய வேண்டும்.

கல்வி உதவித்தொகைக்குஅவசியமாகுது ஆதார் எண் !!

      'பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை ட்டாயமாக தெரிவிக்க வேண்டும்,'என, அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்

     தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு இந்த மாதம் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியானது பண பரிவர்த்தனையை சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றியதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் துவங்க அரசாணை வெளியீடு

       தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக, ஏழு ஒன்றியங்களில், புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை துவக்க, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அரசாணையில் கூறியிருப்பதாவது:கடலுார், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலுார், நீலகிரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் அதிகமாக உள்ளனர்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும் பள்ளிக் கல்வி இயக்குனர் வேண்டுகோள்

       அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தாய்த்தமிழ்ப் பள்ளியில் பணி செய்வது எனக்குப் பெருமை - க.பி.உதயலக்குமி

தாய்த்தமிழ்ப் பள்ளி

       ”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால் சாவா மருந்து. தமிழ் என்றும் அழிவதில்லை என்பது இதன் பொருள். ஆனால் இன்று தமிழகத்தில் இந்நிலை மாறி தமிழ்மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அப்படி அழிந்து கொண்டிருக்கின்ற தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற, வளர்க்க தொடங்கப்பட்ட பள்ளி தான் தாய்த்தமிழ்ப் பள்ளி. இப்பள்ளி இன்றளவும் தமிழின் இனிமையையும், செழுமையையும் மாறாமல் பாதுகாக்கின்றது.

தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய பள்ளிகள்??

           தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த 2005-06-ஆம் ஆண்டில் இருந்து 2013-14-ஆம் ஆண்டு வரைதொடக்கக் கல்வி தொடர்பாக மாவட்ட கல்வித் தகவல் முறையில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தேசிய கல்வித் திட்டமிடல், நிர்வாகப் பல்கலைக்கழகம்(சமஉடஅ) ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. 
 

 

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரிடம் எடுத்துரைக்கப்படும்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

          பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து மக்கள் முதல்வரிடம்  எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். 

மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி

           பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு.

தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: அரசு உத்தரவு

         தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய செயலாளராக பணியாற்றும் எம்.ஆசியா மரியம் நகராட்சி நிர்வாக துணை ஆணையராகவும், சென்னை மாநகராட்சியில் மாவட்ட வருவாய் அதிகாரியாக (தேர்தல்கள்) பணியாற்றும் எஸ்.செந்தாமரை வேளாண்துறை கூடுதல் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சொத்து கணக்கு விபரம் : அதிகாரிகளுக்கு அரசு கெடு

       மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து மத்தியபணியாளர் நலன் பயிற்சிகள் துறை அமைச்சகம் அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 
 

BT to PG Promotion Panel

         பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல். இயற்பியல், கணிதம் வணிகவியல், புவியியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1) 30.04.2015

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive