தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய
குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர்
பங்கேற்று இருக்கின்றனர். அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில்
பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும்
குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள்,
மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும்
அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.
இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்களிடம்
விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் ஒரு
குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல்
மற்றும் கற்பித்தலில் புதிய உத்திகள் கையாண்டிருந்தால், அவற்றை
இணையதளத்தில் பதிவுசெய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2012 முதல் பள்ளிக் கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளியில், இறந்த மகன் உடலை, அரசு
மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய
வேண்டும்' என, திருச்சி மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்வரியிடம், பெற்றோர் கோரிக்கை
விடுத்தனர்.
ஊரா ட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநல
நிதி கணக்கு தொடர்பாக, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் பதிவு செய்யும்
பணி நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான
தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர்.அரசுப்
பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு
அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது
என்பதையும் காட்டுகிறது.
தனியார்
கல்லூரிகளில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய
நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவை நியமித்துள்ளதாக தமிழக
அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவ, மாணவியரின்
திருத்தம் செய்யப்பட்ட இறுதிப்பட்டியல் சரிபார்ப்பு (டிச.24) புதன்கிழமை
மதுரையில் முதன்மைக் கல்வி அலுவலர் இ.ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலையில்
நடைபெறுகிறது.
கையால் எழுதப்பட்ட, குறைந்த பக்கங்கள் கொண்ட மற்றும் காலாவதி தேதி
நெருங்கிய பாஸ்போர்ட்தாரர்களுக்கான சிறப்பு முகாம் சென்னையில் வரும் 27ம்
தேதி நடக்கிறது. கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஒட்டப்பட்ட
புகைப்படம் கொண்ட பாஸ்போர்ட்டுகள் சர்வதேச அளவில் கடந்த மாதம் 24ம் தேதி
முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நற்சான்று வழங்கும் தலைமையாசிரியர்கள் கல்வித் துறையின் உத்தரவால் அவர்களுக்கே நற்சான்று கேட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளை தேடி அலைகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: குரூப்
2 பதவியில் அடங்கிய உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்காளர் மற்றும்
நேர்முக எழுத்தர் ஆகிய பதவியில் காலியாக உள்ள இடங்களுக்கான எழுத்து தேர்வை
டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 29ம் தேதி நடத்தியது.
தபால்காரர், தபால் காப்பாளர் (மெயில் கார்டு) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்
தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம்
மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ்
சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும்
ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள
இயக்குனர் உத்தரவு
அ.தே.இ-பத்தாம்
வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த வாரத்தில்
சில செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்தி தவறானது என தேர்வுகள் இயக்ககம்
அறிவிப்பு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரதரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய
ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர்.
மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் அவர்
தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே போல் கல்வியாளர் மதன் மோகன் மால்வியாவுகும்
பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம் ஆண்டுக்கான
மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. மேற்கண்ட தேர்வு
எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றுகள் வினியோகம் செய்யப்படும்.
மாணவர்கள் படித்த அந்தந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அவற்றை பெற்றுக்
கொள்ளலாம்.
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால்,
நேற்று காலமானார். சில மாதங்களுக்கு முன், அவர் மகன் கைலாசம் இறந்தார்.
இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து நாட்களுக்கு
முன், காய்ச்சல், மூச்சுத்திணறலால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி தொடங்க
தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள
மாணவர்களின் பட்டியல்கள் தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. தற்போது
அவற்றை சரிபார்க்கும் பணியில் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலை. 31வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், 606 பேருக்கு தமிழக கவர்னர் ரோசய்யா பட்டம் வழங்கினார். இந்த
பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 72,720 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்
வழங்கப்பட்டது. விழாவில், டெல்லி பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு (யுஜிசி)
துணைத்தலைவர் பேராசிரியர் தேவராஜ் பேசியதாவது:
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு
மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 8ம்
வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.
தொடக்கக் கல்வி
டிப்ளமோ படிப்பில் முதலாண்டு, இரண்டாமாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள்
தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை புதன்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத கால குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி
தொழில்நுட்பப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும், சென்னை தெற்கு
ரோட்டரி சங்கமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக
வழங்கும் இந்த இலவசப் பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு
படித்திருக்க வேண்டும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு
(சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக,
பல்கலைக்கழக தேர்வாணையர் பெ.விஜயன் தெரிவித்துள்ளார்.