அரசு தொடர்பான அடிப்படை தேவைகளுக்கான விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை
சமர்ப்பிக்கும்போது, அதிகாரிகளின், 'அட்டஸ்டேஷன்' தேவையில்லை; சுய ஒப்புகை
மட்டுமே போதுமானது' என,மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'மாணவர்கள், பஸ்
படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் படிக்கும் பள்ளி
தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி வாகன ஆய்வு
கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, சிறந்த
பள்ளிகளுக்கு பரிசாக, ரூ.80 லட்சம் வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதை யொட்டி,
சிறந்த அரசு பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்பு திட்டம் ஆண்டுதோறும்,
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காலக்கெடு நேற்றுடன் முடிந்தும்,
மூன்று மருத்துவ கல்லூரி இடங்களுக்கு முறையான அனுமதி இன்னும்
கிடைக்காததால், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு
ஆண்டும், காமராஜர் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக, அனைத்து வகை
பள்ளிகளிலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு, அரசு
பள்ளிகளுக்கு நிதி வழங்காததால், பெயரளவிற்கு, நேற்று விழா நடந்தது.
புதுடில்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு பாடதிட்டத்தில்
ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடுத்து, அடுத்த மாதம் நடக்கவிருந்த, முதல்நிலைத்
தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு, தேர்வாணையத்திற்கு மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
நாளை சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கை.
புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.அதில் பள்ளிகள் தரம்
உயர்வு ,புதிய ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது
.
முதுகலை ஆசிரியர் பட்டியல்: ஒரு வாரத்தில் வெளியீடு- தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை TRB
தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை
பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு மற்றும் பள்ளிகள் பெயர் விவரப் பட்டியல்,
நாளை (ஜூலை 17) நடக்கும் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் வெளியாகுமா'
என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
'அரசு பொறியியல் கல்லூரிகளில், 193 உதவி பேரராசியர் பணியிடங்களை நிரப்ப,
அக்., 26ம் தேதி தேர்வு நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பொது
மாறுதல் கலந்தாய்வு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற
நீதிபதியை நியமிக்க கோரி TNHSPGTA சார்பில் தமிழக
முதல்வருக்குஅனுப்பப்பட்டுள்ள கடிதம்
தொடக்கக்
கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால
வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள்
வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை
உதவி இயக்குநர்கள் / ஆய்வாளர்கள் கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக்
கல்வி இயக்குனர் உத்தரவு
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள்
வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன
ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது,
புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச்
சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும்
பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில்
அமைக்கப்பட்டுள்ளது.
Flash News: TRB TNTET New Weightage, Provisional Mark List Now Published TRB Official Website.
- For View TNTET Provisional Selection list notification - Click Here
- For View TNTET New Weightage Individual Query - Click Here
உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும்.
உதவி பேராசிரியர் பணி நேர்காணல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம்
தகவல்.உதவி பேராசிரியர் பணிக்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக
நடைபெறவுள்ளது.நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் 18-ம் தேதி
வெளியிடப்படும்.கூடுதல் விவரங்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப்
பார்க்கலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
அமைச்சர் அறிவிப்பு:
மாற்றுத் திறனாளிகளுக்காக இலவசத் தகவல் மையம் அமைக்கப்படும்.பேரவையில்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பின்
அறிவிப்பு.
தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளை
கூடுதலாககண்காணிப்பதற்கு அரசாணை வெளியாகியும் கல்வித்துறை அதிகாரிகள்
அனுமதிக்க மறுப்பதாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண்ணில்சந்தேகம் இருந்தால் அவர்கள் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி
வரை மாவட்டங்களில் நடத்தப்படும் சரிபார்ப்புக்கு செல்லலாம். ஆசிரியர்
நியமன பட்டியல் 30-ந் தேதி வெளியிடப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு
விரைவில்வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள்
தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள்,
சிறப்புஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242
பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரத்தை ஆசிரியர் தேர்வுவாரியம் திங்கள்கிழமை
வெளியிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்'
என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது.
தொடக்கக்
கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில்
30.06.2013 முதல் 31.12.2014 வரை பணி ஓய்வு பெற்ற / ஓய்வு பெற உள்ளவர்கள்
விவரம் கோரி உத்தரவு
பெருந்தலைவர் காமராஜர் 1954 ல் ஏப்ரல் 13ல்
தமிழ் புத்தாண்டு அன்று தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.
பொற்கால ஆட்சிக்கு அப்போது தான் பூபாளத்துடன் பொழுது புலர்ந்தது. தமிழகம்
தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில் கர்மவீரர் காமராஜர் முதலமைச்சராக
பொறுப்பேற்றார்.
சிறுபான்மை மொழிவழி பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் விரைவில் தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான
அறிவிக்கை வெளியீடு.காலிப்பணியிட விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு
வாரியம் வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு திருத்திய ஊதியம் 2009 - ஆறாவது ஊழியக் குழு - திருத்திய ஊதியத்தில், ஊதிய மறு நிர்ணயம் அனுமதித்தல் சார்பான தெளிவுரை
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்
ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த
மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் மத்திய
மந்திரிசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது.