IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRASDATED :
02.07.2014
CORAM
'தமிழக
கல்வித் துறையில் நடந்து முடிந்த 'கவுன்சிலிங்' காலியிடங்கள் மறைப்பு,
அரசியல் குறுக்கீடு போன்றவற்றால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில்
உள்ளனர்,' என்ற தகவலால், மாவட்டம் தோறும் உளவுத் துறை போலீசார் விசாரணை
நடத்துகின்றனர்.
அரசுப்பள்ளிகளில்,
செயல்பட்டு வரும் ஆங்கில வழிக்கல்வி முறை மாணவர்களுக்கு இதுவரை
பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதனால், இவ்வழியில் பயிலும் மாணவ,
மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி
பெறாத தனியார் பள்ளிகளின் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சம்பளம் கிடையாது என்று
உத்தரவிட்டுள்ளதற்கும், அரசு ஊழியர்களிடம் கெடுபிடியாக செயல்பட்டு
வருவதற்கும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும், இட மாறுதல்
செய்யக்ககோரியும், நாளை(சனிக்கிழமை) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்
கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
பகுதிநேர கணினி ஆசிரியர்களின் அவசியம் - பள்ளிகளில் முடங்கிய கணினி வழி கற்றல் திட்டத்தை மீட்டெடுக்க நடவடிக்கை
மலைப்பகுதி பள்ளிகளில் சரியான நேரத்தில் வராத
ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் நந்தகோபால்
எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள
கூட்டரங்கில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.
கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் முன்னிலை வகித்தார்.
நரேந்திர மோடி பிரதமரான ஒரே மாதத்தில் விலைவாசி
குறைந்துவிடும், நிதிப்பற்றாக்குறை சரிகட்டப்படும், வேலைவாய்ப்பு
அதிகரிக்கும், அரசு இயந்திரம் அசாதாரண வேகத்தில் செயல்படும் என்பதுபோன்ற
அதீத எதிர்பார்ப்புகளின் பின்னணியில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது
முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். முந்தைய அரசு
தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில்தான் தனது
முதலாவது நிதிநிலை அறிக்கையை அருண் ஜேட்லி தயாரித்தாக வேண்டிய கட்டாயம்
இருந்ததை மறுப்பதற்கில்லை.
மத்திய பட்ஜெட்டில் கிடைத்துள்ள வரிச்சலுகையால்
மாதச் சம்பளம் பெறும் பிரிவினருக்கு ரூ. 40 ஆயிரம் வரை சேமிக்க வாய்ப்பு
கிடைத்துள்ளது. 2014-15 பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு
60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 2.5
லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை
(சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர்
கு.தேவராஜன் தெரிவித்தார். நாளை முடிவு தெரியும் கடந்த மார்ச் மாதம் தேர்வு
எழுதி தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் எழுதி உடனே கல்லூரியில் சேர்வதற்கு
வசதியாக அரசு பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி இந்த
வருடம் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு
கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 11 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும், 37 கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர்
பெருமிதம்.
மத்திய பிரதேச பணியாளர் தேர்வாணையம் 1646 உதவி பேராசிரியர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜலகண்டாபுரம், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 600 மாணவியருக்கு ஒரே
ஆசிரியர் பாடம் நடத்துவதால், கல்வித்தரம் குறையும் அபாயம் உள்ளதாக,
பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உடனடியாக 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆதார் அட்டை திட்டத்தில் எவ்வித
மாற்றமும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசின் கைவசம்
இல்லை என்றும், ஆதார் அட்டை திட்டம்
தொடரும் என்று லோக்சபாவில், திட்டக்குழு
அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்
அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில், 6,82,000 பேருக்கு
வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம், பணி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளர்
நலத்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே
பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்து 2
மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக் கல்வி
மையத்தில் எம்.எட். படிப்பை நடத்துவதற்கு தென் மண்டலத்திற்கான தேசியக்
கல்விக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து 2014-15-ம்
ஆண்டிற்கான முதுகலைக் கல்வியியல் (எம்.எட்) படிப்புக்கான மாணவர் சேர்க்கை
விண்ணப்பங்களை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் அண்மையில்
தொடக்கி வைத்தார்.
வெறும் 16 வயதில், ஒரு பத்திரிகையின் முதன்மை
ஆசிரியராக திகழ்ந்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் 11ம்
வகுப்பு படிக்கும் டில்லி மாணவர் சகில் பன்சால்.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 30ம் தேதி தொடங்கும்என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள சிறப்புப் பிரிவு மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கு 30ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 31ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழி உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணபித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த மூன்று படிப்புகளுக்கும் மொத்தம் 320 இடங்கள் இருப்பதாகவும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தப் படிப்புகளுக்காக மொத்தம் 18ஆயிரத்து 78 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை மாணவர்கள் அணுகலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எங்கள் மகள் 500-க்கு 490 மதிப்பெண்கள்
எடுத்திருந்தாள். கொண்டாட்டமாகக் கழிந்தது அந்த நாள். நாள் முழுக்கப்
பேசிக் களைத்த எங்களுக்கு அன்று மாலைதான், பத்தாம் வகுப்புத் தேர்வு
முடிவைப் பார்த்தவுடன் பெற்றோர்கள் எல்லோரும் வாகனங்களைப் பிடித்துக்கொண்டு
மேற்குத் தமிழகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மறுகூட்டலில் மதுரை மாணவி
செர்ரி ரூத், 12 மதிப்பெண் கூடுதலாக பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம்
பிடித்தார்.
'பிளஸ்
2 உடனடி தேர்வை எழுதிய தனிதேர்வர்களுக்கு, நாளை காலை, 11:00 மணிக்கு,
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதன்
விவரம்:மாணவ, மாணவியர், நாளை, 12ம் தேதி காலை, 11:00 மணி முதல்,
தேர்வெழுதிய மையங்களுக்கு, நேரில் சென்று, மதிப்பெண் சான்றிதழை
பெறலாம்.
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வெழுதி மதிப்பெண் சான்று பெற்றவரில்,மறுகூட்டலுக்கு
விண்ணப்பித்தவருக்கு, மறு மதிப்பெண் சான்று வழங்கும் பணி துவங்கி உள்ளது.
பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன்தெரிவித்தார்.
Friends..SBI has activated the link to Download Admit Card/Call Letter for the upcoming SBI Clerk Exam 2014.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனியார்
டிவிக்கு அளித்த பேட்டியில், தேசிய
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சொத்து உருவாக்கம் என்ற
வகையில் இணைக்கப்படும்.
ஓட்டப்பிடாரம்
அருகே உள்ள பசுவந்தனை அரசு
மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச
லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு
ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி
என்ற காந்தி தலைமை தாங்கினார்.
நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் முன்னிலை
வகித்தார். பசுவந்தனை பள்ளி தலைமை ஆசிரியர்
சூலியனடெய்சிமேரி வரவேற்று பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய
அரசின் முதல் பட்ஜெட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5
ஐ.ஐ.எம்.,கள்மற்றும் 12 புதிய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்று
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகள்
* நாட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5 ஐ.ஐ.எம்.,கள் அமைக்கப்படும்
* பல் மருத்துவ வசதியுடன் கூடிய, 12 கூடுதல் அரசு மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,
ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்
மட்டுமே பொருந்தும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் விளக்கம்
அளித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பிற துறைகளில் பணியாற்றி
ஓய்வு பெற்றோருக்கும் இந்த மருத்துவக் காப்பீடு பொருந்துமா? என்பது
தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
REVISED RESULT AND PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION
தென்பகுதி பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடுமாறு பணிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டதையடுத்து குறித்த ஆசிரியருக்கு நஷ்டஈடாகக் கிடைத்த 3 லட்சம்
ரூபா பணத்தை அவர் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு அன்பளிப்பாக
வழங்கியுள்ளார்.
KEY ANSWER question No.33 in 'D' SERIES
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 29 ஆண்டுகளுக்கு பிறகு, 49 வயதானவருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்துள்ளது.