Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

JA காலிப்பணியிடங்களில் மாறுதல் / நியமனம் வழங்குதல் கூடாது என இயக்குநர் உத்தரவு.

      பள்ளிக்கல்வித்துறை :3.7.2014 நிலவரப்படி 1395 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டுள்ளது -இணை இயக்குநர்

முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

      அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம்நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு,

ஆசிரியர் பணியிடம் நிரப்ப பாஜக செயற்குழு தீர்மானம்:

                விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம், செஞ்சியில் நடந்தது. ஒன்றிய தலைவர் சரண்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் தீர்த்தமலை, குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொதுசெயலாளர் ஜானகிராமன், துணை தலைவர் சிவகுமார், விவசாய அணி தலைவர் தனசேகர், இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் வல்லம் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிற்றாறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தட்டச்சு தேர்வுகள் ஆக. 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளன:

          தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப இயக்ககம் சார்பில் தட்டச்சுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிரி&ஜூனியர், 8ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூனியர் பிரிவுக்கும், ஜூனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் சீனியர் பாடத்திற்கும் தேர்வு எழுதலாம்.
 

107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:

           அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது 107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:

"தாட்கோ" மூலம் 7,50,000 வரை கடனுதவி அளிக்கப்படுகிறது

       "தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இன்றிலிருந்து (05.07.2014) பத்துநாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்

மவுலிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்த முடிவு

         மவுலிவாக்கத்தில், 'சீல்' வைக்கப்பட்ட 11 மாடி கட்டடம் அருகே செயல்படும் அரசு பள்ளியில், சுழற்சி முறையில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

'கண்ணீர்' விட்ட ஆசிரியர்கள் மகிழ்ச்சி :


       தொடக்கக் கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்ட, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான 'மனமொத்த பணிமாறுதல்' உத்தரவுகள் நேற்று வழங்கப்பட்டன.
 

இம்மாதம் இறுதியில் வண்ண அடையாள அட்டை வினியோகம் .....

           தமிழகத்தில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, இம்மாதம் இறுதியில் துவங்குகிறது.இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார் கூறியதாவது:தமிழகத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு,சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில், ஒரே நாளில் 10 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். 
 

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் 450 பேருக்கு மதிப்பெண் மாற்றம்

             பத்தாம் வகுப்பு மறுகூட்டலில், 450 பேருக்கு, மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏப்ரலில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுதேர்வு முடிவிற்குப் பின், 15 ஆயிரம் மாணவர்கள், பல்வேறு பாடங்களில், மறுகூட்டல் கேட்டு, தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்தனர்.
 

BE - டாப் - 10 மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள்

        பி.இ., கலந்தாய்வு துவங்கியது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆர்வம் - டாப் - 10 மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள்.

முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு

          அரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக, ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 1,090 ஆரம்பப்பள்ளிகள், 307 நடுநிலைப்பள்ளிகள், 185 உயர்நிலைப்பள்ளிகள், 306 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1,888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது வழக்கம்.

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.

           தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. 
 

அரசு யார் பக்கம்?


பணக்காரக் குழந்தைகளும் ஏழைக் குழந்தைகளும் ஒன்றாகப் படிக்கக் கூடாதா?

         கட்டாய இலவசக் கல்வித் திட்டம் அமலானவுடனேயே சென்னை நகரத்திலிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் இப்படிச் சுற்றறிக்கை அனுப்பினாராம்: “இனி உங்கள் பிள்ளைகள் உங்களது வேலைக்காரர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்துதான் உட்கார வேண்டும். 

பல்கலைக்கழக மானியக் குழு!

         பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ள யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டதன் பின்னணி சுவாரஸ்யமானது.

பி.இ., கலந்தாய்வு துவங்கியது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆர்வம்!

சென்னை:
        சென்னை, அண்ணா பல்கலையில், பி.இ., பொதுப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், ஆர்வம் காட்டினர்.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்: இணையதளத்தில் நாளை வெளியீடு!

     பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.

செய்தித்துறை மூலம் காமராஜர் திரைப்படம் - பள்ளிகளில் டிக்கெட் விற்பனை



           தமிழகத்தின் முதல்வராகவும், பிரதமர்களைச் சுட்டிக் காட்டியவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கடந்த 2004-ல் திரைப்படமாக வெளியானது. 

கூடுதல் பணிப்பளு: பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி

         பகுதி நேர சிறப்பாசிரியர்களிடம் பணி நியமனத்தின்போது தெரிவிக்கப்பட்டதைவிட கூடுதல் வேலை வாங்குவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
 

கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு

                தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு

நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

            பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்பு

           தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறு குளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.



பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்

               பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்: 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழக அரசுக்கு நோட்டீஸ்...

தமிழக அரசுக்கு நோட்டீஸ்:
 
         உச்சநீதிமன்றம் ரத்துசெய்த குரூப் 1 அதிகாரிகள் 83பேர் பணியில் நீடிப்பதை எதிர்த்து வழக்கு.

பள்ளிகளில் மின் சாதனங்கள் இயக்க மாணவர்களுக்கு தடை

            பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளிகளில், நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும்.
 

முதுநிலை மற்றும் இளநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் பழனியப்பன் தகவல்

           அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த விரைவில் 3,500 ஆசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளார்கள் என்று சிங்காரப்பேட்டை பள்ளியில் நடந்த பொன் விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனி யப்பன் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கம்!

         பல்லடம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கப்பட்டுள்ளது.

பி.இ., கலந்தாய்வு துவக்கம்: 28 நாட்கள் நடக்கிறது

         பொறியியல் படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.

டி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவு திடீர் நிறுத்தி வைப்பு : கண்ணீரில் 'கவுன்சிலிங்' ஆசிரியர்கள்

          தொடக்கக்கல்வி துறை கவுன்சிலிங்கில், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்கள் (டி.இ.இ.ஓ.,க்கள்)அளித்த 'மனமொத்து' பணிமாறுதல் (மியூட்சுவல் டிரான்ஸ்பர்) உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பணிமாறுதல் பெற்றும் ஆசிரியர்கள் விருப்ப பள்ளிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.

ஆசிரியர் பட்டயத்தேர்வு இன்று துவங்குகிறது.

         தொடக்க கல்வி பட்டயப்படிப்புக்கு, முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று துவங்குகிறது.

5 ஆண்டு சட்டப் படிப்பு இன்று முதல் கலந்தாய்வு.

         அரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்க உள்ளது.

சிட்பி வங்கியில் உதவி மேலாளர் பணி

        இந்திய சிறு தொழில் வளர்ச்சியில் (Small Industries Development Bank of India -SIDBI) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் தொழில்நுட்பம் உதவியாளர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு


         பணியாளர்கள் தேர்வு ஆணைய மேற்கு பிராந்தியத்தில் (SSCWR) காலியாக உள்ள 118 Draughtsman, Junior Technical Assistant, Naval Armament Depot, Dietitian Grade III, Senior Scientific Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிஎன்பிஎல் நிறுவனத்தில் கொதிகலன் மற்றும் டிஜி ஆப்ரேட்டர் பணி.

         தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL) காலியாக உள்ள 14 Semi Skilled (Boiler, TG Operators பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive