தமிழக
முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 2013-2014ஆம் கல்வியாண்டில்
தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்
தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்
பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நிதி
அமைச்சர் அருண் ஜேட்லி தனது கன்னி பட்ஜெட்டை ஜூலை 10ஆம் தேதி மக்களவையில்
சமர்ப்பிக்க உள்ளார். பங்குச் சந்தையிலும் கார்ப்பரேட் உலகிலும் பட்ஜெட்
பற்றிய பரபரப்பும், உற்சாகமும் தெளிவாகத் தென்படுகின்றன. ஆனால் விலைவாசி
உயர்வுக்கும் பணவீக்கத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கின்ற மாதச்
சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் பட்ஜெட்டை எதிர்பார்த்து அமைதியாகக் காத்திருக்கிறார்கள்.
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற PG-TRB challenging key answer தொடர்பான வழக்கில் இயற்பியலுக்கு 2 மதிப்பெண்ணும்,பொருளியலுக்கு 2 மதிப்பெனும்,வணிகவியலுக்கு 1 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
Time: 5p.m status.
Place: HC, Chennai.
TET all cases (12 cases) disposed.
இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”B” Series கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்? என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் ஏராளமான ஆசிரியர்கள் போலி
சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் பீகாரில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
அதற்கு முன்பு வரை பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களை
அடிப்படையாக வைத்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தொழிற்கல்வி ஆசிரியருக்கான 40 பணியிடங்கள்
காலியாக உள்ளன; ஆசிரியர் பற்றாக்குறையால், இரண்டு பள்ளிகளில், பொது
இயந்திரவியல் தொழிற்கல்வி, 3 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. அரசு
மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தொழிற்கல்வி
பிரிவு செயல்படுகிறது. பொது இயந்திரவியல், அக்கவுண்டன்சி, இன்ஜினியரிங்
ஆடிட்டிங், அலுவலக நிர்வாகம், டைப்ரைட்டிங் உள்ளிட்ட தொழிற்கல்வி
கற்பிக்கப்படுகிறது.
கடந்த 2013 ஆகஸ்டில் ஆசிரியர் தகுதி தேர்வு
நடந்தது. இத்தேர்விற்கு நவ. 5ல் வெளியிடப்பட்ட முடிவில் 27 ஆயிரத்து 92
பேர் பேர் தேர்ச்சி பெற்றனர். மீண்டும் ஜன. 10ல் விடைகளில் மாறுதல்
செய்ததில் 2 ஆயிரத்து 300 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி மதிப்பெண்ணை 60
சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைத்ததால் மேலும் 42 ஆயிரத்து 647 பேர்
தேர்ச்சி பெற்றனர். ஒட்டு மொத்தமாக தேர்ச்சியடைந்தவர்கள் எண்ணிக்கை 72
ஆயிரமாக உயர்ந்தது. இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து
முடிந்துள்ளது.
PG Trb commerce subject case - 1 mark added for 'B' series question no 150 - option 'B' or 'C' also get marks. So soon Re result will published for PG TRB Commerce subject.
Other cases stage soon we will publish.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை,
அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டமில்லை என்று அகில இந்திய அரசு
ஊழியர்களின் கூட்டமைப்பிற்கு மத்திய அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது.
TRB PG வழக்குகள் :இன்றைய (04.07.14)விசாரணைப்பட்டியளில் 100 க்கும் மேற்பட்ட வழக்குகள்
PG TRB சம்மந்தமான வெவ்வேறு பாடங்களுக்கான 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெரும்பான்மையான வழக்குகளில் Answer key சரி என்பதால் அவ்வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், ஓரிரு கேள்விகளில் மாற்றம் இருக்கக்கூடிய வழக்குகள் உள்ளன என்றும் அவை தீர்பின் முழுவிவரம் கிடைக்கும்போதுதான் தெரியவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ,
மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (ஜூலை 4) பரிசு
வழங்குகிறார்.
ஆசிரியர் பயிற்சி, முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்கான இணையதள
வழி கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது.
கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன
இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.
வரும், 20ம் தேதி நடக்கும், குரூப் 1 தேர்வுக்கு, தகுதி வாய்ந்த
விண்ணப்பதாரர் பெயர் பட்டியல் மற்றும், வரும், 27ம் தேதி நடக்கும், உதவி
பொறியாளர் தேர்வுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல்,
டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில்
வெளியிடப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு:வரும், 20ம் தேதி,
குரூப் 1 நிலையில், 79 காலி பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடக்கிறது.
இதற்கு, 1.65 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். சரியான
முறையில் விண்ணப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தியவர்களின் பெயர் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
ஊட்டி:கடைகளில் விற்கப்படும், பச்சை
பட்டாணியில், நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனம் கலந்து விற்கப்படுவது,
அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்துள்ளது.நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு
மற்றும் மருந்து நிர்வாக துறை அலுவலர்கள், நேற்று, ஊட்டி சுற்றுவட்டார
பகுதிகளில் உள்ள கடைகளில், சோதனை நடத்தினர். இதில், பல கடைகளில்,
காலாவதியான தின்பண்ட பாக்கெட்கள், குளிர் பானங்கள்; கலப்பட தேயிலை துாள்;
தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் என, 40 ஆயிரம்
ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல கடைகளில்,
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, பச்சை நிற பட்டாணியில், செயற்கை சாயம்
கலந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.
ஆசிரியர் கல்விக்கான தேசிய
குழு (என்.சி.டி.இ.,) விதிகளின் படி, ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் செயல்பட
வேண்டும்' என, பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) தலைவர் வேத பிரகாஷ்
அறிவுறுத்தியுள்ளார்.யு.ஜி.சி., தலைவர், அனைத்து ஆசிரியர் படிப்புகளை
வழங்கும் பல்கலைகள், மத்திய பல்கலைகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளுக்கு,
ஆசிரியர் கல்வி குறித்த கடிதம் அனுப்பி உள்ளார்.
‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் ”-என வள்ளுவர் வகுத்த
அழியாத கருத்தை ஆழ்மனதில் புகுத்தி அகிலத்தை வலம் வர ஒவ்வொரு மாணவனையும்
வழிகாட்டும் ஆசிரியர் தன் பணியில் (கற்பித்தல்) பன்முகத்திறன் பெற்றவராய்
விளங்கினாலும்,ஒவ்வொரு மாணவனையும் பட்டைத் தீட்டி அவரவர் வாழ்வில்
பளபளக்கும் வைரங்களாக மாற்ற வேண்டிய சிறந்த பொறுப்பை ஏற்கிறார்.
வேதாரண்யம் அருகே உள்ளது ராமகோவிந்தன் காடு
கிராமத்தில் 50 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளிக்கு மூடு விழா நடத்தப்பட்டுள்ளது. போதிய மாணவர்கள் இல்லாமை யால்
இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாம். கடந்த கல்வி யாண்டில் அய்ந்தாம் வகுப்பில்
மூன்று மாணவர்களும், இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவனும் படித்தனராம். 5ஆம்
வகுப்பில் படித்த மூன்று மாணவர்கள் 6ஆம் வகுப்புப் படிக்க வேறு பள்ளிக்குச்
சென்று விட்டனர். மூன்றாம் வகுப்புப் படித்த ஒரு மாணவனும் வேறு
பள்ளிக்குச் சென்று விட்டான்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது
புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான
ஷெரில் சாண்ட்பர்க் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். டெல்லி
உள்ள முன்னணி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்;
Date of Examination : 29.06.2014)POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES) FOR THE YEAR 2013-2014
இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி
கிறிஸ்டோபரின் பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை
உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி மாறுதல்
கலந்தாய்வில், ஒருவருக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டது. அரசு, நகராட்சி,
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2014-15 கல்வி ஆண்டுக்கான பதவி
உயர்வு, பணிநிரவல் மற்றும் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு ராஜவீதியிலுள்ள,
துணி வணிகர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. இதில், பட்டதாரி
ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாற்றம் குறித்த, ஆன்-லைன்
கலந்தாய்வு நடந்தது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும், மாநில அளவிலான, சதுரங்க போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு என்பது ஒரு அறக்கட்டனை மாதிரி. அரசின்
அதிகாரிகள்தான், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள். அந்த இரண்டுமே மக்கள்
நலனுக்காக செயல்பட வேண்டும் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும்கல்வி இயக்ககத்தில் கணினி விவர பதிவாளர்கள்
(டேட்டா, என்ட்ரி ஆபரேட்டர்)பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று
ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
இந்தியா (BOI) வங்கியின் கந்த்வா மண்டலத்தில் காலியாக உள்ள அலுவலக
உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
ஐடிபிஐ வங்கியல் நிரப்பப்பட உள்ள 500 Assistant Manager பணியிடங்களை நிரப்ப
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
குடும்பப்
பிரச்னை, தேர்வு பயம், வளர் இளம் பருவத்தினருக்குரிய பிரச்னைகள் போன்ற
காரணங்களால் மன அழுத்தத்துடன் உள்ள மாணவர்களையும், கற்றலில்
குறைபாடுள்ளவர்களையும் எப்படி அணுக வேண்டும் என்பது தொடர்பாக
ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பி.எட்., ஆசிரியர்களை
நியமிக்கக் கோரும் மனுவைப் பரிசீலிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைச்
செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
போக்கத்தவனுக்கு
போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழி
கூறப்படுவதுண்டு. இதன் அர்த்தத்தை அறியாமல் சிலர், ஏளனமாகக் கூறுவதுண்டு.
ஆனால், போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார்
வேலை என்பதன் சுருக்கம்தான் அது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
எல்-நினோ என்றழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தால் இந்த ஆண்டு
இந்தியாவின் பருவமழை குறையும் என்றும், அதனால், கடும் வறட்சி ஏற்படலாம்
என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பசிபிக் கடலின்
மேற்பரப்பில் நிலவும் வெப்பம் தான், இந்திய வானிலை மாற்றங்களை
தீர்மானிக்கிறது. இந்த வெப்ப நிலை சீராக இருந்தால், இந்தியாவின் வானிலை
வழக்கப்படி இருக்கும். இல்லாவிட்டால் மாறுதல் ஏற்பட்டு, கடும் வறட்சியோ,
அல்லது அதிக மழை பொழிவோ ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் மேற்கு பசிபிக் கடலோர
வெப்ப அளவு மற்றும் கடல் அழுத்தத்தை கணக்கிட்டு, இந்தியாவின் பருவநிலை
கணக்கிடப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், எந்தப் பிரிவு
மாணவர்கள் எத்தனை 'கட் ஆப்' மதிப்பெண்ணுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற
விபரம் வெளி யிடப்பட்டது.மருத்துவ கல்வித் துறையில் எம்.பி.பி.எஸ்.,
படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர
தயாராகி வருகின்றனர். அடுத்து அகில இந்தியா அளவிலான 'கோட்டா'வில் (15
சதவீதம்) சேர 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.