Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு, வரும், 26ம் தேதி வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

              சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), சென்னை மண்டல, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.
 

தொழில்நுட்ப தேர்வு: 14 ஆயிரம் பேர் பங்கேற்பு.

         ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட பாடங்களுக்கான, தொழில்நுட்ப தேர்வு, நேற்று துவங்கியது.
 

SPECIAL TET:மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு.

               மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர்.
 

சத்துணவு உட்கொண்டால் மட்டும்தான் இலவச சீருடையா? - பெற்றோர்கள் அதிருப்தி.

          அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் ஏராளமானோர் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் அரசின் கல்விச் சலுகைகள், மாணவ, மாணவியருக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சமமாக கிடைப்பதில்லை.

பதவி உயர்வு வழங்க மறுத்த உத்தரவு ரத்து!

         முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க மறுத்து மாற்று திறனாளிகளுக்கான நலத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

காலி பணியிட விவரம் சேகரிப்பு - விரைவில் ஆசிரியர்கள் நியமனம்

                   தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு- இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.


2012 இல் தேர்வு எழுதியோருக்கும் 5% தளர்வு கேட்டு மீண்டும் முதல்வரிடம் மனு

2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார் உள்படபல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.

பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது-சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது எனசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு: விருப்ப மனு பெறாததால் தயக்கம்.

தமிழகத்தில் ஆசிரியர்மாறுதல் கவுன்சிலிங்கிற்கு இதுவரை விருப்பம் கோரி விண்ணப்பம் பெறாமல் இருப்பதால், ஆசிரியர்கள் தயக்கம் அடைந்துள்ளனர்.

SPECIAL TET:மே 21ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு.

பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மே 21ம் தேதி சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,
அனைத்து மாவட்டங்களிலும் பார்வையற்றோருக்கு அரசு நிதியுதவியுடன் ஏப்ரல், மே மாதங்களில் 40 நாட்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு ஆர்வமில்லை.

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை, உள்ளிட்ட காரணங்களால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது.

ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரம் ரத்தாகுமா? பரபரப்பை ஏற்படுத்திய அரசின் கடிதம்.

அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரிய சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 20.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட தாமதம் ஏன்?

அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகள் பட்டியலை அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாக, பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

தனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் மோடி


இந்தியா


மொத்தம் 543 இடங்கள்

பெரும்பான்மைக்கு 272

இரட்டைப்பட்டம் ஒருங்கிணைப்பு கூட்டம். 18.5.2014 அன்று திருச்சியில் நடைபெறுகிறது

இரட்டைப்பட்டம் பயின்று முடித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹேட்டலில் வருகிற 18.4.2014 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.

பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்த வலியுறுத்தல்.

மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பேனல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆசிரியரெல்லாம் நொந்து இருக்காங்க...தினமலர் டீக்கடை பெஞ்ச்

ரெண்டு அமைச்சர்களும் நழுவியதால, ஆசிரியரெல்லாம் நொந்து போயிருக்காங்க பா...'' எனக் கூறியபடியே, பெஞ்சில் வந்தமர்ந்தார் அன்வர்பாய்.

பத்தாம் வகுப்பு சான்றிதழை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தல்.

பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள மாணவர்கள், பத்தாம் வகுப்பில் வேலைவாய்ப்புக்கு பதிவுசெய்த சான்றிதழை தயார் நிலையில் வைத்துக்கொள்ள, கோவை மண்டல வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் ஜோதிமணி அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன்: மோடி வெற்றி உரை

இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்றும், நாட்டை மறுகட்டமைப்பு செய்வேன் என்றும் மோடி தனது வெற்றி உரையில் கூறினார்.

Election Result - Time 8.00 pm

இந்தியா

Promotion & Transfer கலந்தாய்வு ஜூன் மாதத்தில் நடைபெற வாய்ப்பு????

           10.05.2014 அன்று SSTA மாநில தலைவர்கள் தொடக்ககல்வி இயக்குனரை சந்தித்து மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் ஜூன் முதலாவது வாரத்தில்  வைக்கவேண்டும் என்று SSTA  சார்பில் வலியுறுத்தப்பட்டது.  இயக்குனர் அவர்கள் மே 28 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும், எனவே அதன்பின்னர் உடனே அதற்கான பணிகளை மேற்கொள்கிறோம் என்று கூறினார்.
 

தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவு செய்ய உத்தரவு

               தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம் இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப் பதிவேட்டில் பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் கூறினார்.
 

ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு

            ரத்தத்தில் சர்க்கரை அளவு, சாப்பிடுவதற்கு முன் 60 முதல் 110 மி.கி.-க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 80 முதல் 140 மிகி.முக்குள் இருக்க வேண்டும்.

ஓட்டு எண்ணிக்கை முடிவுகள்இணையதளத்தில் வெளியீடு.



           தேர்தல் முடிவுகளை உடனுக்குடன், இணைய தளத்தில் வெளியிட, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு உயர்வு

 
              காலை வர்த்தக தொடக்கத்தில் பாஜகவின் வெற்றி முகத்தை அடுத்து இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.

ஓட்டு எண்ணும் பணி துவங்கியது ; நாடு முழுவதும் பா.ஜ., முன்னிலை

              கடந்த ஒன்றரை மாத காலமாக நடந்து முடிந்த தேர்தல் இறுதி முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.

பிளஸ் 2 தோல்வி - பதிவுமூப்பு விபரம் பதிவுசெய்ய தேவையில்லை.

              பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்திருந்தால், வேலை வாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்ய தேவையில்லை,&'&' என முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தெரிவித்தார்.

ஜூனிற்குள் பதவி உயர்வு: ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

              மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 'பேனல்' வெளியிடப் பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' விரைவில் நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழிக்கல்வி : ஆண்டு தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட கேள்வி தாள்

           அரசு பள்ளிகளில், பெயரளவிலே ஆங்கில வழிக்கல்வி திட்டம் செயல்படுகிறது.இங்கு நடந்த ஆண்டு தேர்வில், தமிழிலே கேள்வி தாள் வழங்கப்பட்டது,பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 

பிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து வேலைவாய்ப்பக அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரே சீனியாரிட்டி

             பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் ஒரே சீனியாரிட்டி வழங்கப்பட உள்ளது.
 

அரசுப் பள்ளிகளில் தொடரும் அவலநிலை - தேர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும் அரசு

             விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி அரசு பள்ளி கட்டடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. முறையான குடிநீர், கழிப்பறை வசதியில்லை. சில இடங்களில் பள்ளிகள் முட்புதர் சூழ்ந்தும் காணப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தொடக்க கல்வித்துறையில் விடுப்பு எடுத்த ஆசிரியர்,அலுவலர் விபரம் சேகரிப்பு

 
              தொடக்க கல்வித்துறையில் விடுப்பில் உள்ள ஆசிரியர், அலுவலர் விவரங்களை சேகரிக்க அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பலரும் முறையாக விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் விடுமுறையில் உள்ளதாகவும், விடுமுறை காலம் முடிந்த பின்னரும் பணியில் சேராமல் இருப்பதாகவும் தொடக்க கல்வித்துறை இயக்குநருக்கு தகவல்கள் சென்றுள்ளன. இதனால், அவர்களின் விவரங்கள் சேகரிப்பட உள்ளது.இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive