Quarterly Exam Questions 2024
Latest Updates
தனியார் பள்ளிகளில் விதியை மீறி முன்கூட்டி விண்ணப்பம் விநியோகம்
திருச்சி மாவட்டத்தில் 197 அரசு உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. அரசு பள்ளிகளின் மாண வர்
சேர்க்கைக்காக பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
அதில் மாணவர்களின் இடைநிற்றலை தடுத்திட உதவித்தொகை , சீருடை , புத்தகம்
உள்ளிட்ட 14 வகையான இலவச பொருட்கள் என பல திட்டங்களை செயல்படுத்தி
வருகின்றது.
பி.இ. கலந்தாய்வு: படிவங்கள் இணையதளத்தில் வெளியீடு
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு
விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட
வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்படும் கடைசி நேர திண்டாட்டத்தைப்
போக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த சிறப்பு ஏற்பாட்டைச்
செய்துள்ளது.
95அடி உயர சிலை
திருச்சி, சமயபுரம் அடுத்த சிறுதாவூரில் அமையவுள்ள 95அடி உயர சிலைக்கு (பெரியார் உலகம்) தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதியுதவி.
பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு
அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு
இயக்குநர் உத்தரவு
பள்ளிக்கல்வி - பனிரெண்டாம் பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளிவரவுள்ளதால், மாணவர்களின் மதிப்பெண் சான்றுகள் இணையதளம் மூலம் பதிவு செய்ய மாணவர்களின் விவரங்கள் 02.05.2014க்குள் பெற உத்தரவு
Director's Proceeding - Click Here
கல்வித்துறை அலுவலகங்களில் மாதந்தோறும் குறைதீர்வு கூட்டம்: ஆசிரியர்கள் கோரிக்கை Tamil Hindu
கல்வித்துறை அலுவலகங்களில் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். ஆசிரியர்களின் குறைகளைப் போக்க ஒவ்வொரு கல்வி அலுவலகத்திலும் மாவட்டந்தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
TNPSC Free Online Test Results
TNPSC Group 2A Model Exam - 2014 | Free Online Test |
- Result (Upto 11.4.2014) - Click Here
TNPSC VAO Model Exam - 2014 | Free Online Test |
- Result (Upto 11.04.2014) - Click Here
இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?
இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.
வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டை வினியோகம் செய்வது எப்படி?
வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ள
வாக்குச் சாவடியில் இணைக்கப்பட்டு உள்ள வாக்காளர் சீட்டுகள், ஒப்புதல் பெற
வேண்டிய பதிவேட்டுடன் வழங்கப் படும். இவ்வாறு வழங்கப்படும் வாக்காளர்
சீட்டில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தங்களுடைய முழு அசல் கையொப்பத்தை
போட்டு, வினியோகம் செய்ய வேண்டும்.
10th ( SSLC ) - March 2014 Public Exam Official Key Answer
March - 2014 Official Key Answers
- English 1 - Key Answer - Click Here
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 10,126 அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது
திருப்பூர்
மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடு படும் 10,126 அரசு ஊழி யர்களுக்கு தபால்
ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜி.கோவிந்த ராஜ்
தெரிவித்தார்.ஆலோசனை கூட்டம்திருப்பூர் மாவட்ட கலெக் டர்
அலுவலகத்தில் வேட் பாளர்கள் ஆலோசனை கூட் டத்தை தொடர்ந்து கலெக்டர்
ஜி.கோவிந்தராஜ் தலைமை யில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில்
கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-திருப்பூர் மாவட்டத்தில் ஆண்
வாக்காளர்கள் 9 லட்சத்து 79 ஆயிரத்து 993 பேர், பெண் வாக்காளர்கள் 9
லட்சத்து 60 ஆயிரத்து 748 பேர், திருநங்கை வாக்காளர் கள் 107 பேர் என்று
மொத்தம் 19 லட்சத்து 40 ஆயிரத்து 848 வாக்காளர்கள் உள்ளனர்.
10ம் வகுப்பு: விடைத்தாள் இன்று முதல் மதிப்பீடு.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்ரம் 10) தொடங்க உள்ளது.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 13ம் தேதி 2ம் கட்ட பயிற்சி.
வாக்குச்சாவடிகளில்பணிபுரியும் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வரும்13ம் தேதி நடக்கிறது. இதில் 15 ஆயிரம் அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
SSLC கணித வினா கடினம் அல்ல! - பாடசாலை வாசகர் குணசேகரன்
பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வுத்தாள் கடினமானது அல்ல.செய்முறை மற்றும்
வரைபடம் கேள்விகள் மிகவும் எளிது.5 மதிப்பெண் கேள்வியில்
வெண்படம்,சார்பு,இயல் எண்களில் வர்க்கம்,பகடை,அணி,நாற்கரத்தின் பரப்பு,பகடை
இந்த கேள்விகளை சுமாரான மாணவர்கள் கூட எளிதாக விடையளிக்கலாம்.2 மதிப்பெண்
வினாக்களில் குறைந்தபட்சம் 10 க்கு 4 வினா எளிதாக எழுதலாம்.1 மதிப்பெண்
வினாக்கள் ஒவ்வொரு பாடத்தின் பின் கொடுக்கப்பட்ட வினாக்களிலிருந்துதான்
கேட்கப்படுகிறது,அவ்வினாக்கலை செய்து பார்க்கவேன்டிய அவசியம் இல்லை .இந்த
கேள்விக்கு இந்த விடை என்று நினைவில் வைத்து எழுதினாலே குறைந்தபட்சம் 10
மதிப்பெண்கள் எடுக்கலாம்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற
மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படி 90
சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை
பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநில
அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.2014
முதல் அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி வழங்க
முடிவு செய்துள்ளது.
விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் கழக கூட்டம், மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட
செயலாளர் வீரசத்தியராமசாமி, மாவட்ட பொருளாளர் சரவணகுமரன் உட்பட பலர்
பங்கேற்றனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள்
அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, தேனி மேரி மாதா மேல்நிலைப்பள்ளியில்
நடைபெறும் மதிப்பீட்டு மையத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம்
வழங்கப்பட்டது.