Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Public Exam Differences


Public Exam Time Management


கால மேலாண்மை
          பத்தாம் வகுப்பிற்கு எழுதுவதற்குக் கால அளவு 2.30மணி வரை என்பது யாருக்கும் தெரியும். இந்த இரண்டைரை மணி நேரத்தில், சிலர் சீக்கிரமாக முடித்துவிட்டு என்னசெய்வது என்று முழிப்பார்கள்.

தேர்தலுக்கு தயாராகும் ஓட்டுச்சாவடிகள்.


           லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள மின்வசதி, கட்டட வசதி உள்ளிட்டவற்றை, வீடியோவில் பதிவு செய்யும் பணியை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டுஉள்ளது.
 

தமிழக துவக்க பள்ளிகளில் ஆங்கிலவழி சேர்க்கை துவக்கம்.

 
             நடப்பு கல்வியாண்டில், வகுப்புகள் இன்னமும், முடிவடையாத நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், வரும், கல்வி ஆண்டிற்கான, ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கைதுவக்கப்பட்டுள்ளது.
 

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: 8 லட்சம் பேர் எழுதினர்.


            சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.


           தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் செயல்படும், கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், அந்தந்த பகுதிபல்கலைகளின் கீழ் இருந்தன. கடந்த, சிலஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்பட்டது. இந்தபல்கலையில், தற்போது வரை, துணை வேந்தரே, கல்வி, ஆட்சிமன்றம் மற்றும் நிதிக்குழுவின்பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அப்பல்கலையின், கல்விக்குழுவிற்கான உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உள்ளார்.

பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி - Special Article



பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி

            26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்களும் நீக்கப்படும்என அறிவித்தார்.   

13 லட்சம் அரசு ஊழியர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு?

            புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, காலிப்பணியிடத்தை நிரப்பி, சம்பள வரையறை உள்ளிட்ட, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதி வழங்குபவர்களுக்கு, 13 லட்சம் அரசு ஊழியர்கள் ஆதரவு அளிப்பர்,'' என, அரசு ஊழியர் சங்க மாநில செயலர், தமிழ்செல்வி தெரிவித்தார்.
 

2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது : பள்ளிக் கல்வித் துறை

 
            வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை நீடிக்குமா, இல்லையா என்ற குழப்பம் தாற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
 

ஏப்.10க்குள் +2 விடைத் தாள் திருத்தி முடிக்க திட்டம்

            நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 25ம் தேதியுடன் முடிகிறது. தேர்வு விடை தாள்கள், அந்தந்த மாவட்டங்களில் திருத்தப்படுவதில்லை.
 

12th Latest Study Material

Computer
  • Star Office - Year Questions (2007-13)  - Bethel MHr.S.S, Ambur, Vellore Dt. - English Medium

10th Revision Test Question

Revision  Test Model Questions  

12th Latest Study Material

Chemistry
  • Chemistry - Public 1 Mark Q&A (2006-2013) - A.Thangamani,PGA,Jothi Vidhyalaya MHrSS, Elampillai, Salem - English Medium

10th Maths Model Question

Maths Study Material

10th Latest Study Material

Social Science Study Material
  • Important Questions - Mr. K. Santhosha Sabarish, B.T.Asst., GHS, Arangal Durgam - Tamil Medium

10th Social Science Study Material

Social Science Study Material
  • Social Science 2 Mark Script & Map for Slow Learner - Tamil Medium

12th March - 2014 Exam Expected Key Answers


Physics - March 2014 | Public Exam | Expected 3 Mark Key Answers - Tamil Medium

இது சாத்தியமா ?

         இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டும் , தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராகவே பிற ஒன்றியம், பிற மாவட்டம் மாறுதல் பெற விரும்பும் தோழர்களே !                                      

TNPSC :மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி.


            நேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜூன் 8-ம் தேதி நடக்கிறது.
 

அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.

          ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.


மாயமான மலேசிய விமானத்தின் அரிய சில தகவல்கள்

 
         மாயமான மலேசிய விமானத்தின் பைலட்டின் பெயர்  ஜஹாரி அஹமத் ஷாஹ்   33வருடங்களாக   பைலட்டாக   இருக்கும் இவருக்கு 53 வயது ஆகிறது.   மொத்தம்  18,365   மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். விமானம் ஓட்டுவதை தொழிலாகப்   பார்க்காமல்   விருப்பத்தின் பெயரால் செய்தவராம்.
 

ஒபாமாவுக்கு பேஸ்புக் சவால்

 
           பேஸ்புக்கில் நேற்றைய ‘ஹிட்’ அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் போட்டுள்ள ஸ்டேட்டஸ்தான். 3 லட்சம் லைக், 2 லட்சம் கமெண்ட், 1 லட்சம் ஷேர் என பேராதரவு பெற்றுள்ளது. ஏன் இந்த ஏகபோக ஆதரவு என்ற கேள்வி எழுகிறதா… காரணம் இதுதான். கோடானுகோடி பேஸ்புக்வாசிகளின் நலனுக்காகவும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க அரசுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார்.
 

கண்தானம் செய்வது எப்படி?

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.
2. மின்விசிறியை இயக்கக்கூடாது.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கல்வித் தகுதி குறித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.


          தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் யுஜிசி விதிமுறைகளின் அடிப்படையில் தகுதியானவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 

தேர்தல் பணி - பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வர வேண்டியதில்லை, பகலில் வந்தால் போதும்: தேர்தல் ஆணையம்


                "தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்படுகின்றனர்.
 

தனியார் பள்ளியில் படித்த குழந்தைகள் உள்ளூர் அரசு பள்ளியில் சேர்ப்பு


            தொண்டி அருகே, வேன் விபத்தில் 3 மாணவ, மாணவிகள் பலியானதை அடுத்து கவலையடைந்த பெற்றோர்கள், தொண்டி பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து சொந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்தனர். தொண்டியிலிருந்து 2 கி.மீ.தூரத்தில் உள்ளது.
 

துணைவேந்தர்கள் நியமன வழக்கு தள்ளுபடி

            பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.,) விதிமுறைகளை பின்பற்றி, துணைவேந்தர்களை நியமிக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல்கலைக்கழகங்கள், ஊழியர் சங்கங்களின், தமிழக கூட்டமைப்பின் அமைப்பாளர், கிருஷ்ணசாமி, தாக்கல் செய்த மனு:
 

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் தவிர ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்: பிரவீன்குமார்


              நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கடத்தல் ரூ.2.50 கோடி கேட்டு மிரட்டல்

       ஜோலார்பேட்டை அருகே, 2. 50 கோடி ரூபாய் கேட்டு, அரசு உதவி பள்ளி தலைமை ஆசிரியரை, மர்ம நபர்கள் கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒய்வூதியத்தாரர்களின் மாதிரி கையொப்பம், கைரேகை, கணினியில் பதிவு

         "ஏப்ரல், 1ம் தேதி முதல் ஓய்வூதியர்களின் நேர்காணல் போது மாதிரி கையொப்பம், கைரேகை கணினியில் பதிவு செய்யப்படுகிறது,'' என, மாவட்ட கருவூல அலுவலர் பத்மா தெரிவித்தார்.

ஒட்டுப்பதிவு நேரம் காலை 7 மணி முதல், மாலை 6 மணி வரை அதிகரிப்பு

          ஓட்டுப்பதிவு நேரம் அதிகரிப்பு குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: தேர்தலின்போது, வெயில் கடுமையாக இருக்கும் என, கருதப்படுவதாலும், மற்ற காரணங்களாலும், ஓட்டுப்பதிவு நேரம், வழக்கமான நேரத்தை விட, இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

அரசு இணையதளங்களில் தமிழக முதல்வர் படம் முடக்கம்

           தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலை தொடர்ந்து, அரசு துறை சார்ந்த இணையதளங்களில், தமிழக முதல்வரின் படங்கள் முடக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தால், தமிழக முதல்வர் படத்துடன் கூடிய அரசின் சாதனை விளம்பரங்களை அகற்ற, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது.
 

எஸ்.எம்.எஸ்-ல் வாக்காளர் விவரம் : தேர்தல் கமிஷன் ஏற்பாடு

           வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்ளும் வசதியை, தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறிய விரும்புவோர், "ஞுணீடிஞி' என டைப் செய்து, "ஸ்பேஸ்' விட்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணை, டைப் செய்து, 94441 23456 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டும்.
 

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது...

           தமிழகத்தில், பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், நிலத்தடி நீர்மட்டம் 23 மாவட்டங்களில் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் முடங்கியதும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
 

இயக்குனர் உத்தரவு

          அ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2014 - விடைத்தாட்கள் / படிவங்கள் 18.03.2014 அன்று சம்பந்தபட்ட NODAL POINT லிருந்து பெற்றுக் கொள்ள இயக்குனர் உத்தரவு


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive