நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்
திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு
உள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு
மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது. தற்போது,
விடைத்தாள்கள் திருத்தும் பணியையும், விரைந்து முடிக்க, நடவடிக்கை
எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 32 மாவட்டங்களில், 66 மையங்கள்
உருவாக்கப்பட்டு உள்ளன; கடந்தாண்டை விட, 36 மையங்கள் அதிகரித்து உள்ளன.
திருத்தும் பணி துவங்கி, 10 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க,
தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
அரசுப் பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்
கல்வி
உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில் எந்த
மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்
தலைவர் குஷால் சிங் கூறினார். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்கும் அமைப்பாக
இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில்
பங்கேற்க வந்த அவர் தினமணி நிருபரிடம் கூறியது:
பிளஸ் டூ தேர்வு: தேவையான தூக்கம்... நிறைய மதிப்பெண்கள்!
பிளஸ் டூ தேர்வு ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு
மாதம் கூட இல்லை. இரவு, பகலாகக் கண் விழித்து மாணவர்கள் படித்துக்
கொண்டிருப்பார்கள். எப்படியாவது நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காக
மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் படாத பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
""படித்தவை நன்கு மனதில் பதிய வேண்டுமானால், தேவையான அளவுக்கு நன்றாகத்
தூங்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.
SG to BT Promotion
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது
Panel as on 01.01.2013Tamil Panel as on 01.01.2013 - Click Here
English Panel as on 01.01.2013 - Click Here
Maths Panel as on 01.01.2013 - Click Here
Science Panel as on 01.01.2013 - Click Here
Social Science (History) Panel as on 01.01.2013 - Click Here
Social Science (Geography) Panel as on 01.01.2013 - Click Here
BT Promotion JD's Covering Letter - Click Here
பிப்.25 மற்றும் பிப்.26ல் நடைபெறும் போராட்டத்தில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு
பிப்.25 மற்றும் பிப்.26ல் நடைபெறும் போராட்டத்தில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு - தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் பிரத்யேக பேட்டி
மாற்றுத்திறன் குழந்தைகள் கல்விக்கு அரசு பள்ளிகளில் தனி ஆசிரியர்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, சிறப்பு பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வது
தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொலைதூரத்தில் கிடைத்ததால் வேலையில் சேர பலர் தயக்கம்
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு
பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு
ஆன்லைனில் நடந்தது. பலருக்கு தொலைதூர மாவட்டங்களில் பணி கிடைத்ததால் பதவி
உயர்வை வேண்டாம் என பலர் எழுதிக்கொடுத்து சென்றனர்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 5 முதல் விண்ணப்பம்
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
தமிழ்வழிப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க தடையாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்க வலியுறுத்தல்
தமிழ்வழி சிறுபான்மை மற்றும்
சிறுபான்மையற்ற பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி வழங்கத் தடையாக இருக்கும்
சட்டப்பிரிவு 14ஏ-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என
தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு
வலியுறுத்தியுள்ளது.
5 Years TET Relaxation கொடுத்து சம்பளம் வழங்க வேண்டும் - கோரிக்கை
தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் 1000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 5 Years TET Relaxation கொடுத்து சம்பளம் வழங்க வேண்டும் - கோரிக்கை
பதவி உயர்வு பாதிப்பு- பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு!
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கல்வி மாவட்ட பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக கூட்டம் வள்ளியூரில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
5% Relax for 2012 TET Candidates - Request
2012 ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கும் 5 சதவீத சலுகை-சட்டமன்றத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி வலியுறுதல்.
NMMS உதவி தொகை பெறுவதற்காக, ஒரு லட்சத்து 49 ஆயிரம் பேர் தேசிய திறனாய்வு தேர்வு எழுதினார்கள்.
உதவி தொகை பெற 8–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகள் தேசிய திறனாய்வு
தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 மத்திய அரசு
வழங்குகிறது. இந்த உதவித்தொகை 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை கிடைக்கும்.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது.
ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் 1 முதல் 10–
வது வகுப்பு வரை ஆசிரியர்களாக பணிபுரிவதற்கு, ஆசிரியர் தகுதி தேர்வில்
(டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற புதிய நிலை உள்ளது. 'பி.எட்.'
படிப்பை முடித்த பார்வையற்ற மாணவ– மாணவியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வை
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது.
குறுமன்' ஜாதி அந்தஸ்து குறித்த அறிக்கை : ஆர்.டி.ஓ.,க்களுக்கு அனுப்ப ஐகோர்ட் உத்தரவு
பழங்குடியின, "குறுமன்' பிரிவின், சிறப்பு தன்மைகள் அடங்கிய விவரங்களை, வருவாய்
கோட்ட அதிகாரிகளுக்கு (ஆர்.டி.ஓ.,) அனுப்புமாறு, பழங்குடியின நல இயக்குனருக்கு,
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வு:அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து முடித்துள்ளது
பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், ஒன்பது நாள் மட்டுமே இருப்பதால்,
தேர்வுக்கானஅனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து
முடித்துள்ளது. தேர்வுப்பணியில், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர், ஒரு
லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.மார்ச், 3 முதல், 25 வரை, பிளஸ் 2
பொதுத்தேர்வு நடக்கிறது. 8.45 லட்சம் மாணவ, மாணவியர்,தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வுக்கு, இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கிறது. இதனால்,தேர்வை
நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், முழுவீச்சில்
செய்து முடித்துள்ளார்.
SSLC NOMINAL ROLL MARCH 2014 - பட்டியல் வெளியீடு
பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2014ல் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு
பொதுத் தேர்வு "ஆய்வு அலுவலர்கள் கூட்டம்"
நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2014, மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்துவதற்கான முக்கிய அறிவுரைகள் வழங்கும் பொருட்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் தலைமையில் "ஆய்வு அலுவலர்கள் கூட்டம்" 25.02.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.
முதல்வரின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம்
அரசாணைக்கும், முதலமைச்சர் அறிவிப்புக்கும்,
முர ணாக ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்வையற்றவர்களுக்கு மட்டும் தனித்தேர்வு என்ற அறிவிப்பை ரத்து
செய்துஅனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் நடத்த உத்தரவிடுமாறு, தமிழக முதல்
வருக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்
நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மார்ச், 3ல் துவங்கும் பிளஸ் 2 தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சு! : தேர்வுப்பணியில் 1 லட்சம் பேரை ஈடுபடுத்த திட்டம்
பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், ஒன்பது நாள்
மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை,
முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. தேர்வுப் பணியில், ஆசிரியர், ஆசிரியர்
அல்லாத ஊழியர், ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மார்ச், 3 முதல்,
25 வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. 8.45 லட்சம் மாணவ, மாணவியர்,
தேர்வை எழுத உள்ளனர்.
"ஆன்-லைன்' குளறுபடியை தவிர்க்க, தேர்வுத்துறை அமைத்த சிறப்பு மையங்கள்
தேர்வுகளுக்காக, மாணவ, மாணவியர், தனியார்,
"பிரவுசிங்' மையங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை
தவிர்க்க, முதல் முறையாக, தேர்வுத்துறை, 32 மாவட்டங்களிலும், சிறப்பு
மையங்களை அமைத்து எடுத்த நடவடிக்கை, மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்று
உள்ளது. அதே நேரத்தில், "வருமானம் போய்விட்டதே' என, "பிரவுசிங்' மையங்கள்
புலம்புகின்றன.
பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?
வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச்
சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல்
(Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச்
செல்ல நேரலாம்.