Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திங்கள் கிழமை தோறும் மாணவர்கள் அணிவகுப்பு: பள்ளிக்கல்வி துறை உத்தரவு


          வாரந்தோறும் திங்கள் கிழமை பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்கள் பங்கு பெறும் அணிவகுப்பு நடத்த, தமிழக பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
 

இலவச கல்வி உபகரணங்களை அரசே நேரடியாக பள்ளிக்கு லாரிகள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்


             விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 40 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அங்கு கட்டட வசதிகள் இல்லாமல் உள்ளது என தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

"ஆசி­ரி­யர்கள் மொழி, பண்­பாட்டையும் கற்றுத்தர வேண்டும்"


            'மாண­வர்­க­ளுக்கு பாடத்­தோடு, மொழி, பண்­பாட்­டையும் ஆசி­ரி­யர்கள் கற்று தர வேண்டும்" என எழுத்­தாளர் மனுஷ்­ய­புத்­திரன் பேசினார்.

சமையலர்களுக்கு புதிய பயிற்சி: ஆயிரக்கணக்கான விடுதிகளுக்கு விடிவு


           தமிழகத்தில் உள்ள, அனைத்து விடுதி சமையலர்களுக்கும், அந்தந்த நலத்துறை நிர்வாகம், புதிய பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு உள்ளது. விரைவில், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என, கூறப்பட்டது.

இந்திய வம்சாவளி நிபுணர்களுக்கு அமெரிக்க நிறுவன விருது


              கணிதம் மற்றும் அறிவியலில் ஆய்வு மேற்கொண்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

"இருபதாம் நூற்றாண்டு பாடங்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது"


         இருபதாம் நூற்றாண்டு பாடங்களால், மாணவர்கள் தற்போதுள்ள பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது, என பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார்.

முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம்: சத்துணவு மையங்களுக்கு உத்தரவு


          முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் உத்தரவிட்டார்.

காடுகள் பரப்பளவு குறைந்து விட்டது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வருத்தம்


         "தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருவதால், பருவ மழை தவறி வருகிறது," என, பள்ளி விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை 47,376


          மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பள்ளி செல்லா குழந்தைகள், 47,376 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்படுகிறது.

இளம் விஞ்ஞானிகளுக்கு சுதந்திரம் இல்லை: சிவா அய்யாதுரை


         "இந்தியாவில், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை" என மின்னஞ்சலை கண்டுபிடித்த, விருதுநகர், முகவூரை சேர்ந்த சிவா அய்யாதுரை கூறினார்.

பள்ளிகள் தரம் குறித்த ஆலோசனைக் கூட்டம்


           2013-14ம் கல்வி ஆண்டு அரசு பொது தேர்வுகளில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த, ஆலோசனை கூட்டம், சென்னையில், ஆக.,1, 2ம் தேதிகளில் நடை பெறுகிறது. இதில், அனைத்து மாவட்ட சி.இ.ஓ., கூடுதல் சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் பங்கேற்கின்றனர்.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் 652 ஆசிரியர்கள் பணி நீக்கம்


           உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, போதிய கல்வித் தகுதி இல்லாததால், அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

6வது ஊதிய கமிஷன்


           6வது ஊதிய கமிஷன் அரிவிக்கப்பட்டத்திலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம். 

ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டமாக மாறுமா? இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம்!...


           6வது ஊதிய குழுவின் ஊதிய முரண்பாடுகளை நீக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவும் அவ்வொரு நபர் குழுவின் குறைபாடுகளை நீக்க அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவும் தங்களுக்கு எந்த பலனை தராததோடு, இன்று வரை தங்கள் ஊதிய நோக்கான 9300-34800+4200 என்ற ஊதிய விகிதம் கனவாகவும், கானல் நீராகவுமே உள்ளது என்ற உணர்வு ஓங்கி அவர்களிடம் வெறுமை உணர்வையும் மனத்தளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கனவு ஆசிரியர் - பெற்றோர்களை ஈர்க்கும் காந்த ஆசிரியர்!



 ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் காத்துக்கிடந்து தங்கள் குழந்தைகளைக் சேர்த்துவிட்டுச் செல்கிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிதான் அது. பெற்றோர்களை அந்தப் பள்ளியை நோக்கி வரவைத்திருப்பவர், அந்தப் பள்ளியின் ஆசிரியர் செந்தில்.

பிகாரில் ஆசிரியர்களுடன் அரசு பேச்சு


             பிகாரில் மதிய உணவு திட்டப் பணியை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராடிவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுடன் மாநில அரசு சனிக்கிழமை பேச்சு வார்த்தை நடத்தியது.

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு


          பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை, மாத கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அறிக்கை அனுப்ப அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை சரிபார்க்க ஆன்லைன் வசதி

          கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை பிறதுறையினரும் சரி பார்க்க ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

பி.எட். கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு


         அரசு ஒதுக்கீட்டிலான பி.எட். படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எந்தப் படிப்பை முடித்தால் பி.எட். படிப்பில் சேர முடியும்?


              தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Junior Asst, Typist & RC's Special Pay

           மூன்று நபர் ஊதியக் குழு - பட்டதாரி இளநிலை உதவியாளர் மற்றும் நேரடி நியமிக்கப்படும் உதவியாளர் பதவிக்கு இடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை "தனி ஊதியம்" ஆக வழங்க தமிழக அரசு உத்தரவு


DEO to CEO Promotion


           10 முதன்மைக்கல்வி அலுவலர்/ அதனையொத்த அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கியும் 16 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு/ அதனையொத்த அலுவலர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்/ அதனையொத்த பதவிகளுக்கு பதவியுயர்வு அளித்து அரசாணை வெளியீடு


மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் நேற்று வெளியிட்ட 60 அரசாணைகளில், ஒரு அரசாணை பள்ளிக் கல்வித்துறைக்காக தமிழக அரசு வெளியீட்டுள்ளது


Click Here 4 Latest Pay Commission GO's - அரசாணைகள் பதிவிறக்கம் செய்ய...


           ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதல் நாள் இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. நேற்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு நேற்று  மாலை 38 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

"OPTION" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் "RE-OPTION" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


          மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை எண்.240 நாள்.22.07.2013ன் படி "RE-OPTION" வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது 1.1.2006 முதல் 31.5.2009குள்  இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.

EMIS Entry & Verification


        EMISன் கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் பதிவு செய்யவும் / விவரங்களை சரிப்பார்த்து 31.07.2013 -க்குள் முடிக்க உத்தரவு - பதிவுகள் உள்ளீடு செய்ய இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

          EMIS எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை மூலம் மாணவர்களின் விவரங்களை Web - Portalல் பதிவு செய்ய தயாராக வைத்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி: தமிழகம் தேர்வு


          அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தலைமை பண்புடன் செயல்படுவதற்காக, தேசிய அளவிலான "லீடர்ஷிப் புரோகிராம்" இங்கிலாந்து பேராசிரியர்கள் உதவியுடன் வடிவமைக்கப்பட உள்ளது.

10th SSLC Retotalling - March / April 2013 - Results Published| பத்தாம் வகுப்பு மறுகூட்டல் வெளியீடு





          பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுதேர்வுத்துறை இணையதளத்தில்  வெளியிடப்படுகிறது.


Plus 2, HSC , +2 Special Supplementary Examination Results Published - June 2013 பிளஸ் 2 உடனடித்தேர்வு: இணையத்தில் முடிவுகள் வெளியீடு



click here to know Your - HSC Special Supplementary Examination Results  - June 2013 


          பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு, தேர்வுத்துறை இணையதளத்தில், இன்று வெளியிடப்படுகிறது. செய்முறை அடங்கிய பாடத்தை எழுதிய தேர்வர்களில் சிலர், செய்முறை மதிப்பெண் குறித்த விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யாததால், அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
 

Govt Schools Attendance to be Monitored Properly |அரசு பள்ளிகளில் வருகை பதிவு: முறையாக கண்காணிக்க உத்தரவு


         "அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதிவேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்" என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இன்று 22 அரசாணைகள் தமிழக அரசு வெளியீட்டுள்ளது


        ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

             இன்று வெளியிட்ட அரசாணைகளில் பள்ளிக்கல்வித் துறையை சார்பாக எந்த அரசாணையும் இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மொத்தம் 50 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சம்பள உயர்வில் பெரிய மாற்றம் இல்லை: ஆசிரியர்கள் கருத்து


        "சம்பள உயர்வில், ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில், மாற்றம் எதுவும் இல்லை" என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
 

முதுகலைப் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி


           தமிழ்நாடு அறிவியல் மன்றங்கள் கூட்டமைப்பு சார்பில், முதுகலைப் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று துவங்குகிறது.

புதிய பாடப்பிரிவுகளுக்கு அரசாணை எப்போது? காத்திருக்கும் மாணவ, மாணவியர்


         அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக துவங்கவுள்ள, 398 பாடப் பிரிவுகளுக்கு, அரசாணை எப்போது வெளியாகும் என, இடம் கிடைக்காத மாணவர்கள், நூற்றுக்கணக்கில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive