Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு


               தொடக்கக்கல்வித்துறையில் 20.03.2013 அன்று உள்ளபடி ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் 26.03.2013 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்க தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மேலும் இதேபோல் பள்ளிக்கல்விதுறையிலும் தகவல் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 

"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"


          "அரசுத் துறைகளில், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, இனி, தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் நடராஜ் கூறினார்.
.

உயிரியல், வரலாறு தேர்வு: 36 மாணவர்கள் சிக்கினர்


            பிளஸ் 2 உயிரியல், வரலாறு தேர்வுகளில், 36 மாணவர்கள், "பிட்" அடித்து பிடிபட்டனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று, உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்தன.

தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?


            இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2013-14ம் நிதியாண்டிற்கான, தமிழக பட்ஜெட், மார்ச் 21ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்கள்,


தமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு




            பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 97.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 86.71 மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்க ரூ.110.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


புதிய வரிகள் ஏதும் இல்லை, அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி, 6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை , 8 கலை அறிவியல் கல்லூரிகள், பழங்குடியினருக்கு சைக்கிள்


புதிய வரிகள் ஏதும் இல்லை:
 
         இந்த பட்ஜெட்டில் வரி உயர்வோ, புதிய வரிகள் ஏதும் தேவையில்லை என முதல்வர் முடிவு செய்துள்ளதாக பன்னீர்செல்வம் தனது பட்ஜெட்டில் அறிவித்தார்.

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி




          ஜெனீவா: ஐ.நா., வில் மனித உரிமைகள் கழகத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும், தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகளும் ஓட்டுப்போட்டன. 8 நாடுகள் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டுப்போட்டது.
 
 

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?



           எழுதலாம். அரசு பணியே கிடைக்காதவர்கள் கூட தம் வீட்டு முகவரியை கொண்டு துறை தேர்வுகளை எழுதலாம். 

               பகுதி நேர ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் அல்லது தொடக்க கல்வி துறை எனில் உதவி தொடக்க கல்வி அலுவலர் அனுமதியுடன் துறை தேர்வுகளை எழுதலாம். பின்னர் முழு நேர பணியாளராக ஆனதும் பணிப்பதிவேடு துவங்கிய பின்னர் அதில் தங்கள் துறைதேர்வு முடிவுகளை பதிவு செய்து கொள்ளலாம். 


TET Study Material



Prepared By
Mr. K. PremKumar, 
BT Asst in Maths,
Thirumangalam,
Madurai.


குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை


         "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும்" என, மார்க்., கம்யூ., கட்சி கூறியுள்ளது.


தமிழ் மொழித்தாள் தேர்வு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு



         சிறுபான்மை மொழிகளை, தாய்மொழியாகக் கொண்ட பட்டதாரிகளுக்கான, தமிழ் மொழித்தாள் தேர்வு, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது. இதில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஒரு வாரம் வரை, இந்த தேர்வுகள் நடக்கும் என்றும், தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.



பாகிஸ்தான் சிறுமி மலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு



        தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள்.



சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்


         சத்துணவில், விதவிதமான உணவு வகைகள் வழங்கும் திட்டம், மாவட்டத்திற்கு ஒரு இடம் என, தமிழகம் முழுவதும், 32 இடங்களில் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.


நாமக்கல்லில் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்


          ஜெனிவா மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில், கல்லூரி மாணவர்கள், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு.





           மார்ச் 21ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்த துறை சார்ந்த அனைத்து விவரங்களும் தாயாற்படுத்தி வைத்து கொள்ளவும், பட்ஜெட் நடக்கும் நாளன்று அனைத்து இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் அவர்களின் அலுவவலக தலைமை இடத்தில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 

அரசு பள்ளிகளில் CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் அறிமுகம்


              அரசு / ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் CCE சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவற்றில் ஆசிரியர்களின் சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி அறிய "BEE EDUSYS" என்ற நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும் 64 பள்ளிகளுக்கு, இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
 

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?


           தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலில் உள்ள நிலையில் மாணவர்களின் கல்விச் சுமை மற்றும் நோட்டுப் புத்தக சுமைகளை குறைக்க முப்பருவ பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
 

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை


          தமிழக அரசின் ஆணைப்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதிநேர கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 

10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை


          பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, கணித வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்த சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


கற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்!..


          நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது 24x7 என்ற தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை புரிந்துகொள்பவரே புத்திசாலி.


கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்


           பள்ளி கல்வித்துறையில், விரைவில், 500 இளநிலை உதவியாளர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


"போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை"


          டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் பேசுவது தவறு. தமிழ் மொழியை புறக்கணித்து, தமிழக அரசுப் பணிகளுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய முடியாது" என, புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிய முன்னாள் தலைவர் நட்ராஜ் கூறினார்.


ஒரே நாளில் 2 அரசுத் தேர்வு: மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்?


             தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் தேர்வும் ஒரே நாளில் நடக்கவுள்ளதால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேர்வு மையங்கள் ஒதுக்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்: பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை


          பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


Tamil Nadu State Level Consolidation of Schools Abstract.








TET Study Material



Thanks to Mr. VELU,
TCPS Computer Center,
Palacode

புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை




         புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, புதுச்சேரி அரசு 3 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

 

ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது


      ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது.
 
          தலைவர் சுபாஷ் சாஸ்திரி இது தொடர்பாக கூறுகையில் DA 50% மேல் சென்றுவிட்டதால் ஏழாவது ஊதியகுழுவை அமைப்பதில் காலம் தாழ்த்தக்கூடாது மேலும் அடிப்படை சம்பளத்தில் 50% DA வை இணைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார் .
 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive